02. நீங்களும் துப்பறியலாம் - தேன்மொழி
ஹாய் மக்களே! இது ஒரு திடீர் மினி-துப்பறியும் தொடர்!
தினமும் வெளியாகும் ஒவ்வொரு சின்னஞ்சிறு கதையிலும் இன்ஸ்பெக்டர் குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தார் என்று நீங்கள் தான் துப்பறிந்து சொல்ல வேண்டும்.
சரியாக சொல்பவர்களுக்கு கை தட்டல் உண்டு.
கதை வெளியான மறுநாள் பதிலை நான் பதிவு செய்வேன்.
என்ன துப்பறிய நீங்க தயாரா??? வாங்க வாங்க...
கடத்தியது யார்???
"என்ன அபினவ் நான் ரெண்டு நாள் சென்னை போயிட்டு வரதுக்குள்ளே என்ன நடந்துச்சு???"
சப்இன்ஸ்பெக்டர் அபினவிடம் கேட்டான் இன்ஸ்பெக்டர் தேன்.
"சார் தர்மா மில்ஸ் ஓனர் தர்மராஜோட சின்ன பொண்ணு அக்ஷிதாவை எவனோ கடத்திட்டு போய் பணம் கேட்டு மிரட்டி இருக்கான். அவர் எங்களுக்கு ரகசியமா போன் செய்து சொன்னார்... நாங்களும் ப்ளான் செய்து பணத்தை கொடுக்க சொன்ன அந்த மூங்கில் காட்டை ரகசியமா சுத்தி வளைச்சு காத்திருந்தோம். தர்மராஜ் சார் அந்த கடத்தல்காரன் சொன்னது போல பத்து லட்சம் ரூபாய் தரவும், கடத்தல்காரன் பொண்ணை விட்டுட்டான்... அந்த பொண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அடைச்சு வச்சிருந்திருக்கான். அவ அவனை பார்க்கவே இல்லையாம்... பொண்ணு சேஃப்பா கிடைச்சது தெரிஞ்ச உடனே நாங்க அந்த இருட்டான காட்டை க்ளோஸ் அவுட் செய்தோம்..."
You might also like - Rose and Thorn... Free English romantic story
"ஓகே..."
"அந்த இருட்டுல சந்தேகம் வர மாதிரி சுத்திட்டு இருந்த இரண்டு பேரை பிடிச்சோம்... வேற யாரும் அங்கே இல்லை சோ இவங்க இரண்டு பேருல ஒருத்தன் தான் கல்ப்ரிட்... பணத்தை எங்கேயோ ஒளிச்சு வச்சுட்டு வெளியே வரும் போது் எங்க கிட்ட மாட்டி இருக்கனும்... ஆனால் இரண்டு பேரும் எப்படி கேட்டாலும் நான் இல்லை, நான் இல்லைன்னு சொல்றாங்க... இரண்டு பேர் மேலேயும் பழைய கிரிமினல் ரெகார்ட் எதுவுமில்லை..."
"ஓகே.... அந்த இடத்துல இவங்க என்ன செய்துட்டு இருந்தாங்க?"
"மாரி போட்டோ பிடிக்க வந்தேன்னு சொல்றான்... அந்த பொண்ணையோ அவங்க அப்பாவையோ தெரியவே தெரியாதுன்னு சாதிக்கிறான். வேணும்னா என்னை அந்த பொண்ணு முன்னாடி அழைச்சுட்டு போய் காட்டி கேட்டு பாருங்கன்னு வேற சொல்றான். கதிர், வீட்டுல போர் அடிச்சது அதனால அங்கே சுத்திட்டு இருந்தேன்னு சொல்றான்...அவனுக்கும் அந்த பொண்ணையோ அவ அப்பாவையோ தெரியாதாம்... நான் நடந்துட்டு இருந்தப்போ ஒரு சில கார் பார்த்தேன் ஆனால் அதை எல்லாம் பத்தி கண்டுக்காமல் நடந்தேன்னு சொல்றான்..."
"ம்ம்ம்ம்... ஓகே, கதிர் அட்ரஸ் வாங்கிட்டு அனுப்பிடுங்க... மாரி தான் நாம கவனிக்க வேண்டிய ஆள்" என்றான் தேன்.
இன்ஸ்பெக்டர் தேன் உடனே குற்றவாளியை கண்டுபிடிச்சிட்டார்... எப்படி கண்டுபிடிச்சார்ன்னு உங்களுக்கு தெரியுமா???
தெரிஞ்சா சொல்லுங்க...
[பதில் தெரிஞ்சுக்க இந்த லின்க்கை க்ளிக் செய்ங்க http://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/5387-neengalum-thupariyalam-02#comment-40770 ]