“ஏய்! ருத்ரா. நீயா? ரொம்ப நன்றி.” முகம் விகசிக்க நன்றி சொன்னாள்.
“என்ன இன்னிக்கு என் தேவைதையோட தரிசனம் கிடைக்குமா?”
“ம். பார்க்கலாம்.”
“ரொம்ப யோசிக்காதீங்க மேடம்.”
“சரி வர்றேன்.”
மறுபக்கம் பேசுவது ஆணா பெண்ணா என்று தன் பேச்சில் குறிப்பிடாமலே தொடர்ந்து பேசினாள்.
சுஜயா இதைக் கவனித்தாளா இல்லையா? தெரியவில்லை.
‘அவளுக்கு என் மேல் அக்கறை இருந்தால்தானே.’ அதற்கும் மனம் நொந்தாள்.
தன்னை ஏறிட்டுப் பார்த்த நந்தினியிடம்
“என்னோட ஃப்ரண்ட்” என்றாள்.
அது ஆணா பெண்ணா என்று குறிப்பிட்டு சொல்லவில்லை.
... கிட்டிருந்தது. என்னை மட்டும் திடீர்னு ஹாஸ்டலில் விட்டாங்க. நான் ரொம்ப அழுதேன். ஆனால் அவங்க கண்டுக்கலை. அதன் பிறகு நான் சுஜாக்காவோட கல்யாணத்துக்கு வீட்டுக்கு வந்தேன். அது மட்டும்தான் சுப காரியம். அதன் பிறகு நான் வீட்டுக்கு வந்ததெல்லாம் …” தன் பெற்றோரின் மரணத்தைப் பற்றி கூற முடியாமல் தவித்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...