“செய்யட்டும் விடுடா. பாக்கியம் நல்லா இருந்த போது சுஜயாவை தன் பொண்ணு போலதானே பார்த்தது. அவளுக்கு எல்லாமே செய்தது. இப்ப ஒரு மகளா தனது கடமையை அவ செய்யட்டுமே.” பெருந்தன்மையுடன் சொன்னார் பாலச்சந்தர்.
சரஸ்வதியும் அதை ஆமோதிப்பது போல் புன்னகையுடன் நின்றாள்.
சுஜயா என்று அவர்கள் வாழ்வில் வந்தாளோ அன்றே பாக்கியம் தன் கவலையை மறந்துவிட்டாள். இதுதான் அவர்களின் வாழ்க்கை என்றானபிறகு அதற்காக தேவையில்லாமல் வருத்தப்படுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை இதற்குள் அவள் உணர்ந்திருந்தாள்.
முடியாமல் படுக்கையில் இருந்தாலும் அவள் புன்னகை வாடவில்லை. சுஜயா வாடவிடவில்லை. இறுதி நாள் வரைக்கும் தன் மனைவியை சந்தோசமாக வைத்திருந்த சுஜயாவின் மீது அவருக்கு அளவு கடந்த பாசம்.
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தி. எங்களை காப்பாத்து. நாங்க உள்ளே மாட்டிக்கிட்டோம்.”
முதலில் குழந்தைகள் விளையாடுவதாக நினைத்தாள். பிறகு அவர்கள் நிஜமாகவே பயந்து அழுகிறார்கள் என்றதும் பதட்டமானாள்.
“டேய்! செல்லம். அழாம சொல்லுடா.”
“நான் அழலை சித்தி. இந்த ரூபி அழறதை பார்த்து எனக்கு அழுகை அழுகையா வருது.”