பகலவன் விடைபெற்று சென்றுவிட அவன் எதற்காக வந்தான் என்று விஸ்வநாதனிடம் சொன்னாள்.
அவள் சம்மதித்து விட்டாள் என்று சொன்னதும் அவருக்கே ஆச்சர்யமானது.
ருத்ரதேவனும் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்திருந்தான். விஸ்வநாதன் அவனுக்கு அங்கே உள்ள நடைமுறைகள் பற்றி விளக்கி கூறினார். அவனின் அக்கறை அவருக்கு பிடித்திருந்தது.
வேலை பற்றி சொல்லி முடித்த பிறகும் தயக்கமாக அவனைப் பார்த்தார்.
“ருத்ரா. உனக்கு இந்த கம்பெனி வேலை மட்டும் இல்லை. அவளை பாதுகாக்கும் பொறுப்பையும் நீ ஏத்துக்கனும். ஒரு பாதுகாப்பு கவசமா யாருக்கும் தெரியாதவாறு அவளை பின்தொடரனும். எனக்கு உன் மேல் நம்பிக்கையிருக்கு. நீ உன் குடும்பத
...
This story is now available on Chillzee KiMo.
...
். வசீகரன் மாதிரியான ஆளை வயதான் தன்னால் சமாளிக்க முடியாது என்று தெரியும்.
அவனும் ஓடிவந்துவிட்டான். வசீகரனை முறைத்து வெளியில் அழைத்துக்கொண்டு வந்தான்.
“என்ன தம்பி? இப்ப புதுசா நீ அவ வலையில் சிக்கியிருக்கியா? பார்த்து தம்பி. பின்னாடி என்னை மாதிரி வாழ்வை தொலைத்துட்டு தேடப் போறே.”