“டேய் என்னடா ஆச்சு?”
“கதவை திறக்க முடியலை சித்தி. ஏய்! சும்மா இருடி.” தனது சித்திக்கு பதில் சொன்னவள் ரூபியையும் அதட்டினான்.
அவளுக்கு புரிந்துவிட்டது. கதவை தாழ் திறக்க முடியாமல் குழந்தைகள் மாட்டிக்கொண்டார்கள். அழுது அழுது களைத்துப் போய் விடுவார்களோ. அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள். அந்த குளியல் அறை மேலே சீலிங்கில் ஒட்டப்படாமல் கொஞ்சம் இடைவெளிவிட்டு நின்று கொண்டிருந்தது. அதன் பக்கத்தில் ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டு ஏறினாள்.
“செல்லங்களா. அழாதீங்க. சித்தி மேலே ஏறி உள்ளே வர்றேன்.”
அவளால் சொல்லதான் முடிந்தது. ஆனால் செயல்படுத்த முடியவில்லை.
“ஏய் சிந்து என்ன பண்ணிக்கிட்டிருக்கே?” திடீரென்று கேட
...
This story is now available on Chillzee KiMo.
...
ிச்சு எழுதனும்.” அவன் கொஞ்சம் கொஞ்மாக பேசி அவளை சம்மதிக்க வைத்தான்.
“சரி! இன்னும் பத்து நாட்களில் எங்க கம்பெனியோட ஆண்டு விழா வருது. அன்னைக்கு வந்தீங்கன்னா நான் கொஞ்சம் ஓய்வா இருப்பேன். உங்களுக்கு தேவையானதை நீங்க கேட்டுக்கலாம். இங்கே நடக்கும் விழாவையும் நீங்க பார்த்த மாதிரி இருக்கும்.”