வாணியோ “அத்தை, இப்படியா உங்கள் பெரிய மருமகளை விட்டு வைப்பீர்கள்.. பாருங்கள் நாங்கள் எல்லாம் அப்போதே வந்து விட்டோம் அக்காதான் லேட் ... நன்றாக திட்டுங்கள் “ என்று வம்பு வளர்க்க,
மீனாட்சியோ “ஏய்.. வாயாடி.. உன் அக்கா அப்போவே ரெடி ஆகி வந்து, அவள்தான் எல்லோருக்கும் காபி கலந்து கொடுத்தாள்.. நீ நன்றாக தூங்கி விட்டு வந்து அவளை வம்பு செய்கிறாயா? “ என்று அவளை திட்டினார்.
“சூப்பர் அத்தை ... நேத்து முளைச்ச காளான் எல்லாம் என் வினுவை பேசுகிறது “ என்று ஹாய் பை கொடுத்தான் ஆதி.
அதிதி, “அண்ணா.. சூப்பர் ஜால்ரா.. ஆனால் ஒன்று புரியவில்ல.. இந்த ஜால்ரா அத்தைக்கா ... அண்ணிக்கா“ என்று
மதி “பிரகாஷ் எப்படியோ உன் அண்ணணும் அப்படிதான்..” என்று வார,
“இங்கே பார்டா.. மதி அண்ணியா இது “ என்று ஆச்சர்யப்பட என்று ஒரே கலாட்டாவாக இருந்தது.
சற்று நேரத்தில் எல்லோரும் பிரகாஷின் ஊருக்கு கிளம்பி சென்றனர். வழி எங்கும் ஒருவரை ஒருவர் கேலியும் கிண்டலுமாக பேசி மகிழ்ந்தனர். ஆதியும் மதியும் தங்கள் நேசம் ஜெயித்த மகிழச்சியில் மற்றவர்களின் கேலிகளுக்கு அவர்களும் திருப்பி கொடுத்தபடி வந்தனர்.
அங்கே கோவில் பூஜை முடித்து மீண்டும் ஊர் திரும்பினர்,
அன்று இரவு ஆதியின் அறைக்கு சென்ற பின் , அவன் மியூசிக் பிளேயர் ஒலித்த பாடலோடு தானும் பாடினான்.
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
நீர் ஊற்று உன் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
தீர்த்தக்கரை ஓரத்திலே தேன் சிட்டுகள் உள்ளத்திலே
கல்யாண வைபோகம்தான்
ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட்ட தேவன் என்னோடுதான்
நீல வான் கூட நிறம் மாறி போகும் நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் கூட காதல் தடம் மாறுமா
ஓயாமல் உன்னை கொஞ்சும் ஊதப்பூ வண்ணம்
ராஜாவின் முத்தம் கொள்ளும் ரோஜாபூ கன்னம்
வாடை தீண்டாத வாழை தோட்டம்
ஆனந்த எல்லைகள் காட்டும்
அவர்கள் இருவரின் வாழ்வும் மாறாத நேசத்தோடு ஆனந்த எல்லைகள் காணட்டும்.
இந்த நேசம் நிறம் மாறுமா தொடர் முழுவதும் படித்து ஊக்கமளித்த அனைத்து சில்சீ பிரெண்ட்ஸ்க்கும் நன்றிகள். மீண்டும் ஒரு புதிய தொடரில் சந்திப்போம்.
முற்றும்!
{kunena_discuss:903}