(Reading time: 10 - 20 minutes)

" ஹே நான் உன்னை இம்ப்ரஸ் பண்ணனும்னு எல்லாம் நினைக்கல ஆரு.. இப்போ அனு  இங்க வந்திருந்தாலும் நான் இப்படிதான் பிஹெவ் பண்ணி இருப்பேன் " என்று அவன் வாய்விட்டு சொல்லவும், அதிர்ந்து எழுந்தே விட்டிருந்தாள்  அவள்..

" உன்கிட்ட பேசணும்"

" சொல்லு "

" பட் என்ன பேசணும்னு தான் தெரியல "

" பொய் .. தெரியாம இருக்காது .. மெய்பீ புரியாமல் இருக்கலாம் "

" என்ன சொல்ல வர்ற "

" உனக்கு என்ன பேசணும்னு தெரியும் .. ஆனா சொல்லலாமா வேணாமான்னு யோசிக்கறன்னு  நினைக்கிறேன் "

" ரொம்ப தான் பேச்சு அதிகம் ஆகுது "

" ஏன்னா , இப்போ என்கிட்ட நேர்மை இருக்கு "

" அப்போ நான் நேர்மையா இல்லன்னு சொல்லுறியா ?"

" தெரியல .. ஆனா உன் கண்ணும் , வாயும் ஒரே மாதிரி பேசலையே " என்று லேசாய் புன்னகைத்தான் வின்ஸ் ..

" திருந்தவே மாட்டியா நீ ? உன்கிட்ட பேச வந்தேன் பாரு .. நான் போறேன் " என்று அங்கிருந்து நடந்தவளை வெறித்தான் வின்ஸ் .. மனதில் ஏதோ பாரம் இறங்கியது போல இருந்தது அவனுக்கு .. அவளோ அவன் தன்னை அழைப்பான் என்று எதிர்பார்த்து மெதுவாய் நடந்தாள் .. அழைக்கமாட்டான் அவன் ! நிச்சயம் அழைக்க மாட்டான் .. அவனுக்கு தெரியும் அவளின் மனம் .. அவள் அவனை மன்னிப்பதா  ? மன்னித்தால் அவனது காதலையும் மன்னித்ததாய் அர்த்தம் ஆகி விடுமா ? மன்னித்து விட்டால் , அந்த காதலை ஏற்றுகொண்டதாய் ஆகிவிடுமா ? என்ற குழப்பத்தில் இருந்தாள் .. விருப்போ , வெறுப்போ அதை அவள் உளமார  காட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தான் .. அதற்காகவே அமைதியாய் இருந்தான் வின்சன்ட்..

கேண்டினில், அருணை பணம் கொடுக்க சொல்லிவிட்டு அனு  நந்துவுடன் இரண்டடி எடுத்து வைத்தபோதே , "பளார்" என்று அறையும் சத்தம் கேட்டது .. வாயில் இருந்த இட்லியை நழுவவிட்டு , அந்த காட்சியை அதிர்ச்சியாய்  பார்த்தான் செல்வம் ..

" தல " என்று அருணும் செல்வமும் அலற, கவீனிடம் அறைவாங்கியவளோ , பேசவும் வார்த்தை இல்லாமல் அவனை அதிர்ச்சியுடன் முறைத்தாள் .. என்னதான் தீப்தியை பிடிக்கவில்லை என்றாலும் அனு , நந்து இருவருமே அவனது செயலில் அதிர்ந்து தான் போயினர் .. இருவருமே தீப்தியின் அருகில் நின்று அவள் தோள்  தொட்டனர் ..

" என்ன தல நீ ? ஏன் இப்படி பண்ண ?" என்று கேட்ட, நம்ம செல்வத்திற்கு கூட கோபம் வந்துவிட்டது .. அனுவும்  நந்துவும் கூட அதையே பார்வையால் வினவினர் ..

" அவளை கேளுங்க .. அவ என்ன பண்ணான்னு கேளுங்க " என்று கூறினான் கவீன் .. நம்ம லவர்பாய்க்கே  கோபம்  வர்ற அளவுக்கு என்ன நடந்திருக்கும் ? யோசிங்க , அடுத்த வாரம் சொல்லுறேன் !  (இந்த ஷாக் போதாதே , வாங்க அடுத்த ஷாக்கையும்  கேட்ருவோம் )

" வர வர டிவியில சீரியல் எதுவுமே நல்லா இல்ல " என்று குறை சொல்லியபடி டிவியை அணைத்தார் நளினி ..சரியாய் அதேநேரம் அவரது போன் சிணுங்கியது ..

" ஹெலோ "

" தங்கச்சி , அண்ணன் பேசுறேன்மா "

" அடடே அண்ணா .. எப்படி இருக்கீங்கன்னா  ? "

" நல்லா இருக்கேன்மா..நீ ?"

" எனக்கு என்ன குறை ? அமோகமா இருக்கேன் .. என்ன விஷயம் அண்ணா ?"

" மாப்பிள்ளை வீட்டில் இல்லையே ?"

" ஹாஸ்பிட்டல் போயிருக்காரு "

" ஓ  அப்போ சரிம்மா ..ஒரு விஷயம் பேசணும் "

" என்ன அண்ணா ?" என்று நளினி கேட்க , அவர் என்ன சொன்னாருன்னு நாம இப்போ தெரிஞ்சுக்க மாட்டோமே .. அதை அடுத்த எபிசொட்ல தெரிஞ்சுப்போம் ...

" சரி அண்ணா , நான் ஏற்பாடு பண்ணுறேன் " என்று யோசனையோடு போனை வைத்தார் நளினி .. அப்போது ஒரு இரும்பு கரம் , அவரது தோளை  தொட , அது யாருன்னு அடுத்த எபிசொட்ல தெரிஞ்சுப்போம் ..

சில்சீ  நண்பர்களுக்கு இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள் .. பொங்கல்ன்னு  சொல்லுறதை விட , அறுவடைத் திருநாள்ன்னு சொல்லுறது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் .. விவசாயமும் விவசாயிகளும் தான் நம்மளுக்கு நிஜமான முதலாளி ..அதை ஏனோ நாம வாயளவில் ஏற்று கொண்டாலும் பார்வையில் மாற்றம் வருவது குறைவாக இருக்கு ...இதபத்தி சிந்திப்போம் .. கூடிய விரைவில் இதபத்தி ஒரு கதை வரும் ;) இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள் ..

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 24

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 26

நினைவுகள் தொடரும்...

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.