(Reading time: 14 - 28 minutes)

ருவரும் சாதாரணமாக இருந்தாலும், இருவர் மனத்திலும் வித்யா மாமியாரை விட, சரவணன் வார்த்தைகளே வருத்தம் கொள்ள செய்தன..

றுநாள் காலையில் எழுந்தவள் , வழக்கம் போல் வேலையை பார்த்தாள்.. ஆனால் எப்போதும் உதவி செய்யும் அவள் மாமியாரோ அன்று ஒன்றும் செய்யாமல், ஏதோ யோசித்தபடி இருந்தார்.. ப்ரத்யா கவனித்து விட்டு , அவர் போக்கில் விட்டுவிட்டாள்.

அன்று மதியம் லஞ்ச் அவரில் ... ஆதர்ஷ் சரவணனிடம் பேச,

“மச்சான்.. எப்படி இருக்கீங்க.. “ என்று குசலம் விசாரித்து விட்டு , “மச்சான்.. நேத்து வீட்லே நடந்தத சொன்னாங்க.. நீங்க உங்க அம்மா ஆசையையும் கன்சிடர் பண்ணலாமே ? “ என்று சொல்ல.

“ஏன் மச்சான் , நீங்க யோசனையே செய்ய மாட்டீங்களா? உங்க வீட்லேயும் ஆண் துணை இல்ல.. நானும் கிளம்பி வந்துட்டா என்ன செய்வாங்க...  உங்கள மாதிரி என்னாலே பொண்டாட்டிய விட்டுட்டு இருக்க முடியாது... டெலிவரி சமயத்துலே நான் வித்யாவோடதான் இருப்பேன் ..” என்று வைத்து விட்டான்..

ஆதர்ஷ்க்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.. மணியை பார்த்தவன், பிரத்யவிற்கு அழைத்தான்..

“என்னப்பா.. இந்த நேரத்துலே?” என்று வினவினாள்

“மச்சான் கிட்ட பேசினேன்.. அவங்க வீட்லே பிரச்சினை இல்லாமல் இருக்கட்டுமேன்னு.. அவர் என்னவோ அவர் பொண்டாட்டிய அவர்கிட்டேர்ந்து பிரிக்கிற மாதிரி பேசறாரு.. சரவணன் அம்மா ஏதாவது சொல்லிட்டு இருந்தா அதுவும் வித்யா மனசுக்கு சங்கடம் தானே... அட்லீட் அவங்கள கூல் பண்ற மாதிரி ஒரு ஷார்ட் டெர்ம் ட்ரிப் மாதிரி போட்டு போயிட்டு வந்துடலாமேன்னு சொல்ல நினச்சேன்... ஆனால் பேசவே விடாமல் கட் பண்ணிட்ட்டார்.. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குடி..”

“சரி விடுங்க.. அத்தை கொஞ்ச நாள் வித்யாவ நம்ம வீட்டுலே வச்சு பார்த்துக்கலாம்ன்னு சொன்னங்க.. அதுக்குள்ள அந்த பெரியம்மாவும் சரி ஆயிடுவாங்க.. நீங்க கவலைபடாதீங்க ”

“சாரி மா.. உன்னை சாப்பிடற நேரத்தில் டிஸ்டர்ப் பண்ணிடனா? “

“அதெல்லாம் இல்ல பா.. எங்கிட்ட சொல்லாம யார் கிட்ட சொல்லுவீங்க?”

“சரி .. நீ சாப்பிடு... நைட் பேசலாம்.. பாய் மா..” என்று வைத்தான்.

அவன் வைக்கவும், ப்ரயு தன் சாப்பாட்டை மூடி விட்டு எழுந்தாள்.. அதை பார்த்தா பிரியா,

“என்னடி ... சாப்பிடாமலே எழுந்துட்ட? அண்ணா போன் வந்ததேன்னு நீ ப்ரீ யா பேசட்டும்னு வேகமா சாப்பிட்டேன்.. நீ என்னடான்னா அப்படியே எழுந்துட்ட?”

அவளுக்கும் ஏனோ மனம் உருத்திக் கொண்டிருந்தது.. தன்னிடம் வித்யா கன்சீவ் ஆனத சொல்லலன்னு.. நேற்றய விஷயங்களை பார்த்தால், வேண்டுமென்றே தவிர்க்கிறார்களோ என்று தோன்றியது...

அதை ப்ரியாவிடம் பகிர்ந்து கொண்டாள்.. ப்ரியாவும்

“நான் அன்னிக்கே சொன்னேன். எனக்கு ஏதோ சரியாய் படல.. அண்ணாகிட்ட நீ பேசி .. நார்வே போய் அண்ணாவோட இருடி..”

“ஏய்... எப்படி முடியும்.. அத்தை தனியா எப்படி இருப்பாங்க..?”

“ஏன்... அவங்களையும் கூட கூட்டிக்கிட்டு போ..”

“இனிமேல் தான் வித்யா மசக்கை, வளைகாப்பு, பிரசவம் எல்லாம் இருக்கு... அவங்க எப்படி வருவாங்க?”

“வித்யாவ தான் அவ புருஷன் பார்த்துக்கிறேன் ன்னு சொல்றார் லே... பேசாமல் இப்போ போயிட்டு , அவ டெலிவரி சமயத்துலே இங்க வாங்க... “

“ஹ்ம்ம்..  .. நீ சொல்றதும் சரிதான்.. ஆனால் நடக்குதானு பார்ப்போம்..”

“நீ இன்னிக்கே இத பத்தி அண்ணா கிட்ட பேசு”

யோசனையோடு தலை ஆட்டினாள் பிரத்யுஷா...

ன்று மாலை வீட்டிற்குள் நுழையும் போதே அவள் மாமியார்,

“உடனே ஆதி கிட்ட சொல்ற அளவுக்கு நேற்று வித்யா வீட்டில் என்ன நடந்தது? இப்போவே சொல்லியாகனும் ன்னு என்ன அவசியம்? அத உடனே மாப்பிள்ளை கிட்ட வேற கேட்டுர்க்கான்.. ரெண்டு பேரும் மனசுலே என்ன நினச்சுட்டு இருக்கீங்க?” என்று பட படவென பொரிந்தார்.

ப்ரத்யா இதை எதிர்பார்க்கவில்லை.. சற்று நேரம் ஒன்றும் புரியாமல் முழித்தவள்,

“இல்லை அத்தை.. நேற்றைக்கு வித்யா எப்படி இருக்கிறாள் என்று கேட்டார்.... அப்போ தான் சொன்னேன் ... அதோட இன்னிக்கு மாப்பிள்ளை கிட்ட சொல்லி அவங்க அம்மாவை சமாதான படுத்தலாம்ன்னு பேசினதாகவும், அத அவர் தப்பா புரிஞ்சிக்கிட்டதவும் சொன்னார்.”

“ஒஹ் .. அங்க மாப்பிள்ள கிட்ட பேசின உடனே உன்கிட்ட பேசிட்டனா? அவ்வளவுக்கு அவன கையில் வைச்ருக்கியா?”

இதை கேட்ட ப்ரத்யா ஷாக் ஆகிட்டாள்...

மெல்லிய குரலில் “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அத்தை.. அவர் ப்ரீயா இருந்தா மதியம் பேசுவார்.. இன்னிக்கு வித்யா husband கிட்ட பேசிட்டு .. என் கிட்டயும் பேசினார்.”

“அவரையும் கிளம்பி வெளிநாடு போக சொன்னனாமே ... ஏன் என் பொண்ணு புருஷனோடு சந்தோஷமா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா..? நீதான் அவன இப்படி பேச சொன்னியா?” எனவும்

ப்ரத்யா கண்ணில் நீர் வழிந்தது ...

“இனிமேல் வித்யா விஷயத்துலே நீங்க ரெண்டு பேரும் தலையிட வேண்டாம். சொல்லிட்டேன்” என்று உள்ளே சென்று விட்டார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.