(Reading time: 11 - 22 minutes)

12. என் மனதை தொட்டு போனவளே - VJ G

ந்த ரெஸ்டாரண்டில் அவன் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான், ருத்ராவைப் பார்த்தவுடன் அடையாளம் புரிந்துக் கொண்டான் செந்தில், வித்யா ஆணாக இருந்தால் இவரைப் போல்தான் இருப்பாள் என்று மனதில் நினைத்துக் கொண்டு, தன்னை அறிமுகப் படுத்த்திக் கொண்டான்,

ருத்ராவும் தன்னையும், சித்ராவையும் அறிமுகப் படுத்தி வைத்தான், ' நான் இந்த மாலுக்கு அருகில் இருக்கிறேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டான் ருத்ரா

'ஆக்சுவலா, எனக்குத் தெரியாது சார், நான் இங்கு வந்து உட்கார்ந்து ரொம்ப நேரம் யோசித்தேன், உங்களுக்கு போன் பண்ணி நான் இங்கிருப்பதாகச் சொன்னேன், இல்லை நீங்க வேறு எங்காவது வரச் சொன்னால், இப்படியே கிளம்பி போகலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன், நீங்கள் வரேன் என்று சொன்னவுடன் எனக்கே ஆச்சர்யம்,' என்று கூறி, ' சரி விஷயத்தை ஆரம்பிக்கிறேன், அதற்கு முன் என்ன சாப்பிடறீங்க?' என்று இரண்டு பேரிடமும் கேட்டான்,

en manathai thottu ponavale

'எங்களுக்கு வெஜ் ஸ்ப்ரிங் ரோல் அண்ட் காபி, சொல்லுங்க' என்றான் ருத்ரா கூறிவிட்டு சித்ராவைப் பார்த்தான் அவள் சரி என்று தலை அசைத்தாள்,

செந்தில் ஆர்டர் கொடுத்து விட்டு தொடங்கினான் ' நானும், வித்யாவும் ஒரே காலேஜ், நான் இரண்டு வருடம் சீனியர், உங்க தங்கை காலேஜுக்கு வந்ததிலிருந்தே, அவங்களை ரொம்ப பிடித்தது, எல்லோரையும் போல ஒரு அலட்டலோ, ஜீன்ஸ்  பான்ட், டாப்  அந்த மாதிரி இல்லை கொஞ்சம் டைம் கிடைத்தாலும் படிப்பது, கண்ணை அங்கே இங்கே அலைக்கழிப்பது இல்லை, இதெல்லாம் பார்த்து எனக்கு ரொம்ப பிடித்தது, நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப் படுகிறேன், எங்கள் வீட்டில் எனக்கு ரொம்ப தொந்தரவு, சீக்கிரம் கல்யாணம் பண்ணிகொள்ளச் சொல்கிறார்கள், அவர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், அதான் நான் காலேஜுக்குப் போய் வித்யாவுடன் பேசினேன், அவங்க, எங்க வீட்டிலே எங்க தாத்தா, அண்ணா, யாரை சொல்றாங்களோ அவங்களைத்தான் கல்யாணம் பண்ணுவேன், அதனாலே என்னை வந்து பார்த்து பேசுவது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும் என்றாங்க, அப்பத்தான் அட்லீஸ்ட் உங்க அண்ணன் போன் நம்பர், அவர் பேர் சொல்லு நான் பேசறேன்னு சொல்லி வாங்கிட்டு வந்தேன், அப்போலேர்ந்து உங்களிடம் எப்படியும் பேசிவிடுவது என்று யோசித்து, உங்களைப் பார்க்கவேண்டுமென்றேன்,'

ருத்ரா யோசித்துக் கொண்டே ' நீங்க யாரு, என்ன பண்ணறீங்க?' அதற்குள் அவர்கள் ஆர்டர் வந்தது, எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்

செந்தில் அவன் கம்பெனி பேரை சொன்னான், அது எங்க கம்பெனி, நான் படிப்பு முடித்தவுடன் இங்குதான் இரண்டு வருட ட்ரைனிங் எடுத்துக் கொண்டிருக்கிறேன், மேல் படுப்புக்கு USA போகவேண்டுமென்பது ஆசை, ஆனால் கல்யாணம் செய்துக் கொண்டு, வித்யா படிப்பு முடிந்தவுடன் இரண்டு பேருமே போய் அங்கு MBA பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்', என்றான்

'நீங்கள் சிதம்பரம் ஐயா பையனா?' என்று கேட்டான்

'உங்களுக்கு அப்பாவைத் தெரியுமா,' என்று கேட்டான்

'தெரியும், அவருக்கும் என்னைத் தெரியும்' என்றான்

தன் கார்டை எடுத்து செந்திலிடம் கொடுத்தான், 'நான் வீட்டுக்குப் போனவுடன், தாத்தாவிடமும், அப்பா, அம்மாவிடமும் பேசி விட்டு, உங்கள் அப்பாவிடமும் பேசிவிட்டு, உங்களிடம் பேசுகிறேன். எங்கள் வீட்டில் லவ்வுக்கு எதிரி இல்லை, உங்கள் வீட்டில் எப்படி என்று எனக்குத் தெரியாது, சொன்னால் அதற்கு ஏத்தமாதிரி உங்க அப்பாவுடன் பேசுவேன்' என்றான் ருத்ரா

'எனக்கும், எங்க அப்பாவை பற்றி அவ்வளவாகத் தெரியாது, நாங்க அப்பா மகனாகத்தான் இருக்கிறோம், அம்மாவிற்கு நல்ல குடும்பத்துப் பெண் வேண்டும் அவங்களுக்கு ஏத்த மாதிரி இருக்கணும் அவ்வளவுதான்,' என்றான்

'சரி, நான் பார்த்துக்கிறேன்,' என்று கூறி, உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம், பெஸ்ட் ஆப் லக்,' என்று கூறி ருத்ராவும்,சித்ராவும் கிளம்பினர்.

காரை எடுத்தவுடன் 'சித்ரா மாப்பிள்ளை எப்படி?' என்று கேட்டான்

'நன்றாக இருக்கிறார், நல்ல உயரம், வித்யாவுக்கு ஏத்த மாதிரி இருக்கிறார்' என்று கூறி, ஆனால்..... உங்க அழகு யாருக்கும் வராது, ' என்று வெட்கப் பட்டுக் கொண்டே கூறினாள்

'ஆமாம், 'காக்கைக்கு...... பொன்னாம்," அது மாதிரி உனக்கு அப்படித்தான் இருக்கும்,'

அவள் வீடு கிட்டே வந்து விட்டது, அவள் கையை எடுத்து தன் கையில் வைத்து, உன்னை விட்டுப் போகவே மனசு இல்லை, அதுவும் இன்னிக்கு நீ என் மனைவி ஆன பிறகு, உன்னை விட்டு போக முடியவில்லை, நீ உங்க அம்மாவிடம் எப்போது பேசப் போகிறாய்?'

'இந்தக் கல்யாணம் முடிந்தவுடன் பேசி விடுகிறேன்' என்றாள்

'என்ன செய்வது எங்க அம்மாவுக்கு நான் ஒருத்திதான் உலகமே,' என்றாள்

அவள்

‘எனக்கும் நீ ஒருத்திதான் பொண்டாட்டி,' என்றான் ருத்ரா,

அவள் சிரித்துக் கொண்டே ‘அதற்குத்தான் எவ்வளவு வேண்டுமோ அத்தனைக்கும் இழைந்தேன்' என்றாள்

'நல்லா இழைஞஜீங்க, இப்ப அம்போன்னு உட்டுபோட்டு, இழஞஜாங்கலாம், பெருமையைப் பாரு?' என்று கிண்டல் செய்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.