(Reading time: 11 - 22 minutes)

'ன்னப்பா இதெல்லாம் சொல்லனுமா, அதெல்லாம் ஒன்னும் ப்ராப்லெமில்லை, நான் பார்த்துக்கிறேன், அப்புறம் நாங்கள் நாளைக்குக் மூன்று மணிக்குப் பெண் பார்க்க வரோம் ருத்ரா,' என்றார் சிதம்பரம்

'சரி சார், நான் வீட்டிலே சொல்லிடறேன், நான் போனை வைக்கிறேன் சார்,' என்றான்

செந்திலைக் கூப்பிட்டான், 'செந்தில், நான் உங்க அப்பாகிட்டே பேசினேன்' என்று சொல்லி என்ன பேசினானோ அதைச் சொன்னான், பிறகு ‘நாளைக்குப் பெண் பார்க்க வருவதாக கூறியிருக்கிறார்,’ என்று சொல்லி ‘நாளைக்குப் பார்க்கலாம்,’ என்று ருத்ரா போனை வைத்தான்

ருத்ரா, தாத்தா ரூமுக்கு வந்தான், அங்குதான் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள் எல்லோரிடமும் தான் பேசிய விஷயத்தைக் கூறினான், ‘நாளைக்கு மூன்று மணிக்கு பெண் பார்க்க வருகிறார்கள், எல்லா ஏற்ப்படும் செய்யவேண்டும் என்று சொன்னான்,’

‘சரிப்பா எவ்வளவு பேர் வருவார்கள், அதைக் கேட்கவில்லை,’

‘அவங்க பக்கம் ஒரு ஏழு, எட்டு பேர் கணக்கு வச்சுக்குங்க,’ என்று முடிவு சொன்னான்,

தினேஷும், கார்த்திக்கும், அவங்க கல்யாணம் செய்துக் கொள்ளப் போகும் பெண்களுடன் பிசியாக இருக்கிறார்கள், வீட்டைப் பத்தி நினைக்கவில்லை, எல்லோரும் பாவம் என்று விட்டு விட்டார்கள்.

ருத்ரா பேசிவிட்டு தன் தங்கையைப் பார்க்க போனான், அங்கே அவள் வேறு ஒரு ப்லவுசுக்கு டிசைன் போட்டுக் கொண்டிருந்தாள், அவளிடம் சென்று, பக்கத்தில் உட்கார்ந்தான், ' அண்ணா, இதப் பாரு, இது நன்னாயிருக்கா?' என்று கேட்டாள்.

'ரொம்ப நன்றாக இருக்கு' என்று கூறிவிட்டு,' செந்தில் கால் பண்ணியிருந்தார், விது' என்று சொன்னான்

அவள் கை அப்படியே நின்று போனதைப் பார்த்தான், 'என்ன ஆச்சு, விது ஏதோ மாதிரி இருக்கே?' என்று கேட்டான் ருத்ரா

'என் மேல், ஒரு தப்பும் இல்லை அண்ணா, அவரா தான் வந்து பேசினார், நான்.......,'

ருத்ரா கையைக் காட்டி 'எதுக்கு இப்போ பயப்படறே, நான் ஏதாவது சொன்னேனா, நீ ஏன் பயப்படறே, கவலைப் படாதேம்மா, அவர் நல்லவராத்தான் தெரியறார், நான் உன் கிட்டே பேசத்தான் வந்தேன் சொல்லு, உனக்கு அவரைப் பிடிச்சிருக்கா உன் சம்மதம் தேவை, நீ வேறு யாரையாவது'

'ஐயோ,இல்லை அண்ணா, நான் யாரையும் மனதில் நினைக்கவில்லை, உங்களுக்கு அவரைப் பிடித்திருந்தால் எனக்கு சம்மதம்,' என்றாள்  

'எனக்குப் பிடித்திருக்கிறது, அவர் அப்பாவிடம் பேசிவிட்டேன், ஆனால் அவர் உன்னை விl)ரும்பி என்னிடம் கேட்ட மாதிரி பேசவில்லை, அவர் அப்பாவை எனக்கு ஏற்கனவே தெரியும்,  நம்ம வீட்டு கல்யாணத்துக்கு கூப்பிட்டு விட்டு, அப்படியே என் தங்கைக்கு வரன் பார்க்கிறேன் என்றேன், அவரும் என் மகனுக்குப் பார்க்கலாம் என்றார்,  அவர்கள் நாளைக்கு பெண் பார்க்க வருகிறார்கள், உனக்கு சம்மதமா,’ என்று கேட்டான்

'அது சரி எனக்கு இன்னும் படிப்பு இருக்கே' என்று சொன்னாள்

'நான் கவலைப் பட மாட்டேனா, அவர் அதெல்லாம் எங்க வீட்டுக்கு வந்த பிறகும் படிக்கட்டும் என்று சொல்லிவிட்டார்,' என்றான்

'நீ, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, எல்லாரும் சரி என்றால், எனக்கும் சரி அண்ணா, அப்புறம் உனக்கும் லைன் கிளியர் இல்லையா?' என்றாள், அவன் சிரித்துக் கொண்டே, அவள் காதை திருகி ' பெரிய மனுஷி மாதிரி அண்ணனையே காலை வாரரியா? ம்ம்ம் ....' என்று செல்லமாக மிரட்டினான், அப்போது போன் மணி அடித்தது,’

'போ, போ என்னை மிரட்டி விட்டு அங்கே சரண்டராகு,’ என்று திரும்பி வாரினாள் அவனும் சிரித்துக் கொண்டே, போனை எடுத்துக் கொண்டு தன் ரூமுக்குப் போனான்

'என்னடா தூக்கம் வரலியா,’

‘இல்லை, இப்போ உங்களோடு இருக்கணும் போல இருக்கு, நீங்க என் மடியில படுத்துக்கணும் போல இருக்கு,’ என்றாள்

'சரி, நாளைக்கு முடியாது, இனிமே எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான், நாளைக்கு நம்ம விதுவை பெண் பார்க்க செந்தில் வீட்டிலிருந்து வருகிறார்கள்' என்று சொன்னான்

'அப்போ உங்களை, நாளைக்கு பிடிக்க முடியாது?' என்றாள்

'என்னை மட்டுமில்லை, உங்களையும்தான், உங்க நாத்தனாரைத்தான் பெண் பார்க்க வருகிறார்கள், ஞாபகம் இருக்கட்டும்,' என்று செல்லமாக மிரட்டினான்

'சரி டா, தூங்கு நாளைக்கு நிறைய வேலை இருக்கு, அதுமட்டுமில்லை இன்னிக்கும் நீ ரொம்ப டயர்ட், அதனாலே போய்ப் படு,' என்று சொல்லி அவளை எதுவும் நினைக்க விடாமல் போனை வைத்தான்

அவனுக்கு தூக்கம் வராமல் அவளுடன், மத்யானம் எப்படியிருந்தோம், என்று அதுவே கண் முன்னால் வந்தது, அவளை உடனே கல்யாணம் செய்துக் கொண்டு என்னவள் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்,

Episode # 11

Episode # 13

தொடரும்

{kunena_discuss:958}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.