(Reading time: 14 - 28 minutes)

13. என் மனதை தொட்டு போனவளே - VJ G

விடியற் காலை தூங்கினான், ஏழு மணிக்கு தாத்தா கால் பண்ணினார், 'தாத்தா, கொஞ்ச நேரத்தில் வரேன் ஒன்னும் அவசரமில்லையே,' என்று கேட்டான்

'ஒண்ணுமில்லை, வா, நீ ரெடியாகி வா' என்றார்

குளித்து ரெடியாகி கீழே வந்தான், தாத்தா ஹால்லேதான் உட்கார்ந்த்திருந்தார், 'என்னப்பா, நீ இவ்வளவு லேட்டா எழுந்துக்க மாட்டியே, என்ன ஆச்சு, உடம்பு சரியில்லையா,’என்று அன்பாகாக் கேட்டார்

en manathai thottu ponavale

'அதெல்லாமில்லை, நான் தூங்குவதற்கு லேட் ஆகிவிட்டது, அவ்வளவுதான்,' என்றான் ருத்ரா   

'வீட்டு டிரைவர்கிட்ட லிஸ்ட் கொடுத்து சாமானெல்லாம் வாங்கிடலாம், ஒரு ஸ்வீட், பஜ்ஜி, வீட்டிலே செய்யச் சொல்லிட்டேன், மித்ததை வெளியே வாங்கிக்கலாம்,' என்றார் தாத்தா

'சரி' என்றான் ருத்ரா

அவன் நினைபெல்லாம் தன்னுடயவளைப் பற்றியே இருந்தது,

'சரி தாத்தா வேறொன்றுமில்லையே,' என்றான்

'கொஞ்சம் நம்ம சித்ராவை இப்பவே வீட்டுக்கு வரச் சொல், நீ போய் கூட்டிகிட்டு வா,' என்றார் நீலகண்டன்

'கேட்டு பாக்கறேன்,' என்று அங்கிருந்து நகர்ந்தான் தன் ரூமுக்கு சென்று, சித்ராவுக்கு கால் பண்ணான்

'அவள் எஸ் சார், சொல்லுங்க' என்றாள், அவன் 'சரி அம்மா இருக்காங்களா?' என்று கேட்டான்

'ஆமாங்க சார்' என்றாள்

'மத்யானம் நம்ம விதுவை பெண் பார்க்க வருகிறார்கள், நான் வந்து உன்னை கூட்டிக்கறேன், அப்படியே கொஞ்சம் கடைக்கு போகவேண்டும், இப்ப நான் கிளம்பறேன் கிட்ட வந்தவுடன் போன் பண்றேன்,'

'ம்ம்,' என்றாள்

அவளைப் பார்க்கப் போகிறோம் என்ற குஷியில் கிளம்பினான்

“ நான் வெளியே சாப்பிடறேன், போய்விட்டு வரேன் ம்மா….” என்று கிளம்பினான்

அவள், வீட்டுகிட்டே போகும்போது கால் பண்ணான் ‘வா,’ என்று, அவள் அம்மாவிடம் சொல்லிக் கொண்டாள், ‘அம்மா நான் வர லேட் ஆகும்  பயப்படாதே,’ என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்

அவன் காத்துக் கொண்டிருந்தான், அவள் அவனிடம் ' சாரி, உங்களைக் காக்க வைத்து விட்டேன்” என்றாள்

'நான் காத்துக் கொண்டிருந்தால் பரவாயில்லை, நீதான் காக்கக் கூடாது,” என்று சொல்லிக் கொண்டே காரை கிளப்பி கொஞ்ச தூரம் போனவுடனே, அவள் கையை எடுத்து முத்தம் கொடுத்து “உன்னை ரொம்ப மிஸ் பண்ணேண்டா, ராத்திரி தூங்கவே இல்லை, விடி காலைதான் தூங்கினேன்,'என்றான்

'நான் மட்டும் என்ன தூங்கினேனா?” என்றாள்  

"இன்னிக்கு என்ன பிளான் ?"

என்று கண் அடித்தது கொண்டே கேட்டான் அவளிடம்

'நல்ல பிளான் தான், இந்த அண்ணிக்கு, வேலை அதிகம் இன்னிக்கு, என் நாத்தனாரைப் பெண் பார்க்க வருகிறார்கள்,' என்றாள்

அவன் சத்தமாக சிரித்தான், அவளுக்கும் சிரிப்பு வந்தது, அவன் சிரிக்கும் போது, ரொம்ப அழகாக இருந்தான் அதில் மயங்கி அப்படியே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள், 'என்ன மேடம் அப்படியே மயங்கிட்டீங்களா,' என்று கேட்டான்

அவளோ, 'ஆமாம், நான் மயங்கித்தான் விட்டேன்,' என்று அவனுக்கு இரண்டு கைகளாலும் திருஷ்டி எடுத்தாள், என் கண்ணே பட்டுடும் போலிருக்கே,’ என்று நிஜமாகவே வருத்தப் பட்டாள்,

அவளை இழுத்து தன்னுடன் கட்டிக் கொண்டு,'அதெல்லாம் ஒன்னும் ஆகாது, நீ என்னைப் பார்த்து அழாகாய் இருக்காய், என்று சொன்னால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா?, நீ அடிக்கடி அப்படி சொல்லணும், நானும் அடிக்கடி உன்னை இப்படி இழுத்து அணைக்கணும், இந்த சுகத்துக்காகத்தான் நேத்து உன்னை விட்டுப் போனதிலிருந்து ஏங்கிக் கொண்டிருக்கிறேன்,' என்றான

அவள் 'சரி இப்ப ஒழுங்கா காரை ஓட்டுங்க,' என்றாள்

அவர்கள் ஒரு ரெஸ்டாரண்டுக்கு போனார்கள், 'இங்கு எதற்கு?' என்றாள் சித்ரா

'இங்கு எதற்கு வருவார்கள், டிபன் சாப்பிட வருவார்கள்,' என்றான்

'ஓ, அப்படியா, நான் நினைத்தேன் லவ் பண்ணுவதற்கு வருவார்கள் என்று, ''என்றாள்

'அதற்கும் வருவார்கள் நம்மை போல,' என்றான் ருத்ரா, அவள் கையை அழுத்தி

'ஒரு ஓரத்தில் உட்கார்ந்து” சாப்பிட என்ன வேண்டும் “என்று கேட்டு ஆர்டர் கொடுத்தான்

'சித்து, நம்ம சீக்கிரமே கல்யாணம் செய்துக்கணும், அதனால் நீ உங்க அம்மாவிடம் பேசு, உன்னால முடியலேன்னா, நான் அம்மாவையும் அப்பாவையும் கூட்டிகிட்டு வரேன் உங்க அம்மாகிட்டே பேச, ரொம்ப லேட் பண்ணவேண்டாம்.'

அவளும் 'இல்லை நானே பேசறேன்,'என்றாள்  

அவர்கள் ஆர்டர் வந்தது, சாப்பிட்டார்கள், பில்லுக்கு பணம் கொடுத்து விட்டு கிளம்பினார்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.