(Reading time: 14 - 28 minutes)

வன் அவளைக் கூட்டிக் கொண்டு முதலில் நகைக் கடைக்குப் போனான்' அங்கு ஒரு செட் நகை வாங்கினான் ஒரு செயின் வாங்கினான், ஒரு வைர மோதிரம் வாங்கினான், அங்கிருந்து புடவைக் கடைக்கு போனான் அவளுக்கு ஒரு ஐந்து நல்ல புடவைகள் வாங்கினான், ரெண்டு புடவை ரொம்ப ஜரிகை இல்லாத, அழகான புடவைகள் ரெண்டு விலைஉயர்ந்த சிப்பான் புடவைகள் ஒரு நல்ல காட்டன் புடவை என்று வாங்கினான்

காருக்கு வந்து பார்க்கிங்கில் அவள் கையை நீட்டச் சொல்லி கையில் மோதிரத்தை போட்டான், அவள் எதற்கு என்று கேட்டாள், 'என் மனைவிக்கு என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும்' என்று கூறி செயினையும் தானே போட்டு விட்டான், இதில் இருக்கும் ஒரு பட்டுப் புடவையை இன்னிக்கு மத்தியானம் கட்டிக் கொள், இந்த செட்டையும் போட்டுக் கொள்,' என்று கொடுத்தான்

'இதெல்லாம் கொடுத்தால் தான் நீங்கள் என் புருஷனா,'

'இல்லை, மனைவிக்கு எப்போது என்ன வேண்டுமென்று ஒரு புருஷனுக்குத் தெரியவேண்டும், அதுவும் ஒரு காதலனுக்குத் தெரிய வேண்டும், அவளை யாரும் ஒரு வார்த்தை பேசாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது புருஷ லக்ஷணம்,' என்றான்

அவள் அதற்கு மேல் பேசவில்லை, 'தேங்க்ஸ் ' என்றாள் அவன் திரும்பிப் பார்த்து ஒரு முறை முறைத்தான்,

அவனும் ஒன்னும் பேசவில்லை

வீடு வந்து சேர்ந்தனர், அவளிடம் பாகைக் கொடுத்தான்,' நம்ம ரூமில் எல்லாத்தையும் வை,' என்றான்

அவளும் நேரே அவன் ரூமுக்குப் போய் வைத்து விட்டு கீழே வந்தாள், அவள் செய்வதெல்லாம் கற்பகம் பார்த்துக் கொண்டிருந்தாள்,

கற்பகத்திடம் வந்து பேசிக் கொண்டிருந்தாள்,' விது எங்கே ஆண்டி?' என்று கேட்டாள்

'அவ ரூமில் இருக்காம்மா, பெண் பார்க்க வரப்ப என்ன கட்டுவது என்று குழம்பிக் கொண்டிருக்கா,'

'நான் போய் ஹெல்ப் பண்ணறேன்,' என்று அங்கிருந்துப் போனாள்

'ஹாய் அண்ணி, நல்ல நேரம் வந்தீங்க, எல்லா புடவைகளும், நிறைய ஜரிகை போட்டு, எல்லாமே  பெரிய விசேங்ஷகளுக்கு கட்டுவது போல் இருக்கிறது அண்ணி பாருங்களேன், ' என்று புடவைகளை காண்பித்தாள்

எல்லாவற்றையும் பார்த்து அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது, இரு இப்ப வரேன் என்று போய் தன்னுடைய புடவை ரெண்டு கொண்டு வந்தாள், இதில் உனக்கு எது பிடித்திருக்கிறது என்று பார்,' என்று கேட்டாள்

'வாவ், சூப்பர் அண்ணி, ரெண்டுமே சுப்பர்ரா இருக்கு, இந்த மாதிரித்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்' என்றாள் விது

'எது வேணுமோ எடுத்துக்கோ,” என்றாள் சித்ரா

'ஆனா, இது உங்க புடவை அம்மா திட்டுவாங்க அண்ணி, 'என்றாள்

'அப்போ, நான் வேற யாரோ இல்ல, என்னை நீ மனசார அண்ணின்னு கூப்பிடல அப்படித்தானே,’ என்று கேட்டாள்

'ஐயோ, அப்படியில்லை அண்ணி, சாரி, உங்களை ஹர்ட் பண்ணனும்னு , நான் நினைக்கலை, சாரி, நான் அம்மா கிட்டே சொல்லிட்டு தான் எடுத்துப்பேன்,' என்றாள்   

'சரி உனக்கு எந்த புடவை பிடித்திருக்குது அதை எடுத்து வை, நான் சொல்லிக்கிறேன் ஆண்டி கிட்ட, சரியா,' என்றாள் சித்ரா

சித்ராவை தேடிக் கொண்டு அங்கே வந்தான் ருத்ரா, ' என்ன நடக்குது இங்கே' என்று கேட்டுக் கொண்டே,

வித்யா, அங்கே நடந்தக் கதையை சொல்ல அவன் உடம்பு இறுகியது, சித்ராவை ஒரு முறை முறைத்தான், பிறகு வித்யாவிடம் திரும்பி ‘ரெண்டுமே நன்றாக இருக்கு நீ எடுத்துக்கோடா ரெண்டையுமே,' என்று கூறி நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வரேன் என்று சொல்லி சித்ராவை திரும்பிக் கூட பார்க்காமல் கிளம்பி விட்டான் வெளியே,

சித்ரா மனசு கஷ்டமாக இருந்தது

இவன் ஏன், இப்படி முறைத்து விட்டு போறான், அவன் தங்கைக்குத் தானே கொடுத்தேன், என்னிடம் ஏன் கோபம், என்னவென்று கேக்கலாமில்லையா, என்று நினைத்துக் கொண்டாள். கீழே வந்து வீடு முழுவதும் பார்த்தாள், எங்கேயும் அவனைக் காணவில்லை, சரி என்று ஏதாவது வேலை இருக்கா என்று பார்க்கப் போனாள், ஒரு இரண்டு மணி நேரம் கழித்து ஒரு புடவை பாகுடன் வீட்டுக்கு வந்தான், அவளை கண் ஜாடையில் மாடிக்கு வரச் சொல்லிவிட்டு போனான்

அவள், அவன் போன, கொஞ்ச நேரம் கழித்து மாடிக்குப் போய் கதவை தாளிட்டாள், அவன் கோபத்துடன் இருப்பது தெரியும் ஆனாலும் அவனை ரொம்ப மிஸ் செய்துவிட்டாள், அவனை பின் பக்கமாகக் கட்டிக் கொண்டாள், 'நான் என்ன தப்பு செய்தேன், ஏன் என்னிடம் கோபத்தோடு இருக்கீங்க?'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.