(Reading time: 14 - 28 minutes)

வளை முன்புறமாக இழுத்து அணைத்தான், பேசவே இல்லை, இருவரும் தங்கள் நிலையிலேயே இல்லை, கட்டி அனைத்தலும், தழுவலும் என்று, எல்லை மீறிக் கொண்டிருந்தது, சிறிது நேரம் கழித்து, அவளுக்கு முத்தம் கொடுத்து , அந்த புடவைப் பாகை எடுத்து கொடுத்தான், அதை திறந்து பார்த்தவளுக்கு ஆச்சர்யம் அந்தப் புடவைகளை விட இது இன்னும் நன்றாக இருந்தது, இன்னும் சில புடவைகளை வாங்கி வந்திருந்தான் , அதைப் பார்த்த சித்தரா,' இதெல்லாம் அதை விட சூப்பெரா, இருக்கு ஆனா.....’ என்று அவன் முகத்தைப் பார்த்தாள்,

'ஒன்னும் பேசாதே, ஏதோ இருந்த கோபத்தை, எனக்கு வேண்டியதைக் கொடுத்து அடக்கிவிட்டாய், இனி ஏதாவது பேசினால் கோபம் வரும்,” என்று அவளை இழுத்துக் கட்டிக் கொண்டு, முத்தத்தை மாறி மாறி கொடுத்தான்,”ஏண்டா உன்னை அழவைத்து விட்டேனா? என் கண்ணா,’ என்று கொஞ்சினான், அவள் கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் அவன் மேல் விழுந்தது, அவளைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து

'சரி, என்ன சொல்லணுமோ, சொல்லு,' என்றான் அவள் முகத்தில் தன் முகத்தைத் தேய்த்து கொண்டே

'இல்லை பெண் பார்க்கும் படலம் நம்ம வித்யாவுக்குத்தான், இந்தப் புடவைகள் அதை விட அழகாக இருக்கு, இதையும் காண்பித்து அவளுக்கு எது பிடிக்கிறதோ எடுத்துக்கட்டும், அதை விட்டு அவளை விட நல்ல புடவையை நான் கட்டினால் நல்லாவா இருக்கும் எனக்கே உறுத்தும், அவளுடைய அண்ணன் நீங்க வாங்கி வந்த புடவை அவளுக்கு இல்லாமல் எனக்கு என்ன? நீங்கள் தான் எனக்கு ஆணழகனாய் கிடைத்திருக்கிறீர்களே அதை விடவா இந்த புடவை எல்லாம்,'

'நல்லா பேசி என்னை மடக்கிட்டே, என்று அவளைக் கொஞ்சிக் கொண்டே இப்ப போகனுமா நீ,’ என்றான்

'பின்ன யாராவது கதவை தட்டினால், நாம் இருக்கும் கோலம் என்ன நினைப்பார்கள், கல்யாணமாகமையே குடும்பம் நடத்துகிறோம் என்று அசிங்கமாக உங்களை யாரும் நினைக்க இடம் கொடுக்கக் கூடாது, உங்கள் கம்பீரம் குறையக் கூடாது,' என்றாள்

'சரி குளித்து விட்டு போகிறாயா,’என்று கேட்டான்

அவள் 'ஒரு வழியா இன்னும் கொஞ்ச நேரம் கழித்து குளித்து புது புடவை மாத்திக்கிறேன் 'என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்,

சிரித்துக் கொண்டே வித்யாவைப் பார்க்க போனாள்

வித்யாவின் ரூமுக்குப் போய், இந்த புடவைகளையும் பாரு எது பிடிச்சிருக்கோ எடுத்துக்கோ,' என்றாள் சித்ரா

அதைப் பார்த்து 'ஓ, அண்ணி எங்கேர்ந்து இந்த மாதிரி லவ்லி சாரீஸ் எடுக்கிறீங்க, லுக் அட் யுவர் டேஸ்ட்,' என்று புகழ்ந்தாள்

'அதெல்லாம் எங்க ஆளோட டேஸ்ட்,' என்றாள்

'ஓ,ரியல்லி, நீங்க எவ்வளவு கொடுத்து வச்சிருக்கீங்க அப்படி ஒரு ஆளு கிடைக்க?' ஆமா, உங்க ஆளு யாருன்னு சொல்லவேயில்லயே? கொஞ்சம் எங்களுக்கும் காமிக்கிறது,’ என்றாள் வம்பிழுக்கும் நோக்கத்தில்

சித்ரா வெட்கப்பட்டுக் கொண்டே, ' அதெல்லாம் முடியாது அப்புறம் அவருக்கு திருஷ்டி விழுந்திடும்,' என்று சொல்லி அவள் ஓட முற்பட, எது மேலேயோ மோதிய மாதிரி இருந்தது, நிமிர்ந்து பார்த்தாள், அது ருத்ரா தான், ‘ஹே, என்ன ஆச்சு, ஏன் ஓடறே,’ என்று கேட்டான் அவன் அவளை அணைத்தபடியே இருந்தான், வித்யா வந்தாள்

‘என்ன ஆச்சு வித்யா, இவ ஏன் ஓடி வரா?' என்று கேட்டான்

'அதுவா அவங்க ஆளை நாங்க பார்த்தா திருஷ்டி பட்டுடுமாம், அப்படி சொல்லிட்டு ஓடறாங்க, எங்க நாங்க விடுவோம்?, உங்க ஆளைப் பார்க்காம விடமாட்டோமே!”

அவன் இன்னும் அவளை அழுத்தமாக அணைத்தான், அவளுக்கு வெட்கமாக இருந்தது, 'எங்கே உன்  ஆளை எனக்கு காண்பி, நான் பார்க்கிறேன்,' என்று அவளை வம்புக்கிழுத்தான்,

‘அண்ணா, இதான் சாக்குன்னு நீ அண்ணியை விடாம கெட்டியாய் ................ ,' நான் உன் தங்கை, என்று அவனை வம்புக்கிழுத்தாள்,’

'இத பாருடா பேசாத என் தங்கை இன்னிக்கு பெண் பார்க்க வராங்கன்ன உடனே என்னையே பதம் பார்க்குது, இரும்மா உன் ஆளு மதியானம் வரச்சே, எங்க வேலையை காட்டறோம்,' என்றான்

'ஐயோ! அண்ணா, ப்ளீஸ், நான் உன்னோட ஒரே அன்பு தங்கச்சி இல்லையா, என் மானத்தை வாங்கிடாதே, ப்ளீஸ்,' என்று அவனிடம் கெஞ்சினாள்

'அதெல்லாம், பார்க்கலாம், என் மேலிடம் என்ன சொல்கிறதோ அப்படித்தான் நடப்பேன்,’ என்று சித்ராவைப் பார்த்து கண்ணடித்தான்

'ஆனாலும், இதெல்லாம் ரொம்ப ஓவர், தங்கச்சிய எதிரே வச்சுண்டு, ரொம்பத்தான், தாங்கவே முடியலடா சாமி,' என்று அவள் கூற சித்ராவும், ருத்ராவும் சிரித்ததில் வனிதா, நந்தினி எல்லாம் வந்துட்டாங்க, அவங்க வரதை பார்த்து ருத்ரா சித்ராவிடமிருந்து கொஞ்சம் விலகினான்

'என்ன நடக்குது, நாங்க இல்லாம,’ என்று அவர்களும் சேர்ந்துக் கொள்ள, ‘ஒண்ணுமில்லை, வித்யாவை பெண் பார்க்க வருகிறார்கள் இல்லையா, சித்ரா அவளை கிண்டல் பண்ணிக் கொண்டிருக்கா அவ்வளவுதான்,’ என்று கூறி ‘சரி நீங்க பேசிண்டிருங்க, நான் போயிட்டுவரேன் கொஞ்சம் வேலையிருக்கு,’ என்று சொல்லி அங்கிருந்து போய்விட்டான்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.