(Reading time: 8 - 16 minutes)

"ப்ளீஸ் ஆதி!இன்னொருமுறை இந்த வார்த்தையை சொல்லாதே!"-அவள் மேலும் அழுதாள்.

"ஏ...ஹனி!நீ ஏன் இவ்வளவு எமோஷன் ஆகுற?"

"பிகாஸ் ஐ லவ் யூ!'-என்றாள் கண்ணீரோடு!!

அவன் மூச்சை இழுத்துவிட்டான்.

"சரி...அழாதே!!நீ என்ன வேண்டுமானாலும் பூஜை பண்ணிக்கோ!நான் எதுவும் கேட்கலை!ப்ளீஸ் நீ மனதை போட்டு குழப்பிக்காதே!"

"ம்..."

"நீ மட்டும் இப்போ அழுகையை நிறுத்தலை...அப்பறம்...."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

"அப்பறம்?"

"அப்பறம்!"

"அப்பறம்?!"-அவன் அவளது தோள்களை பற்றி அவளது கண்களில் எதையோ தேட ஆரம்பித்தான்.சில நொடிகளில் அவன் பார்வை ஏற்படுத்திய மாற்றம்,அவளது கண்ணீரை சட்டென அவளறியாமல் நிறுத்தியது.மெல்ல அவள் தன் அணைப்பினுள் சேர்த்தான் ஆதித்யா.

காலை முதலே குழப்பத்தோடு காணப்பட்டார் ஜானகி.

மனம் ஒரு நிலையில் இல்லை அவருக்கு!!

"அம்மூ!"

"ஆ..."

"உனக்கு என்னாச்சு?"

"ஒண்ணுமில்லைப்பா!"

"என்ன நினைத்து கொண்டிருக்கிறீங்க நீங்க எல்லாம்??என்னிடம் எதையாவது மறைக்க பார்க்கிறீங்க?"

"அதெல்லாம் இல்லை ஆதி!"

"அப்போ சொல்லு!"

"பைரவக்கோட்டைன்னு ஒரு ஊரில் உன் அப்பா ஒரு பங்களா வாங்கி போட்டிருந்தார்."

"இது என்ன புது கதையாக இருக்கு?"

"உனக்கு தெரியாதுப்பா!அது பழைய அரண்மனை மாதிரி இருக்கும்!ஏதோ காரணத்துக்காக அதை அவர் ஒதுக்கியே வைத்திருந்தார்!"

"சரி..."

"இப்போ அந்த பங்களா எங்களுக்கு வேணும்னு ஒருத்தர் பிரச்சனை பண்றாராம்!அதான்..."

"கொடுத்துவிட்டு போ!நமக்கு இல்லாத வீடா?"

"இல்லைடா...அது அவர் ஆசை ஆசையா வாங்கினது!"

"இப்போ என்ன பண்ண போற?"

"நான் அந்த ஊருக்கு போய் பார்க்க போறேன்!"-அவன் தலையில் கை வைத்துக்கொண்டான்.

"தனியா வேண்டாம்!நானும் வரேன்!"

"நீயா?"

"வரேன்!அப்படி என்ன இருக்குன்னு பார்க்கிறேன் அந்த வீட்டில்!நாளைக்கு கிளம்பு!"

"ம்..."-சில நேரம் சிந்தித்தவனின் மனம் ஒரு திட்டம் தீட்டியது.

"ஆதி!இதை விட்டா யாத்ராவையும்,சிவனையும் பிரிக்க நல்ல வாய்ப்பு கிடைக்காதுடா!யூஸ் பண்ணிக்கோ!"-என்று அவன் மனம் கூறியது.

அவளை தேடி அவளது அறைக்கு சென்றான் அவன்.

அவள் ஏதோ புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள்.

"ம்...என்ன படிக்கிறீங்க மேடம்?"-அவள் புத்தகத்தை காண்பித்தாள்.

'பொன்னியின் செல்வன்!!"என்று பெயர் அச்சிடப்பட்டிருந்தது.

"ஓ..சரி உன் எல்லா புக்ஸையும் பேக் பண்ணிட்டு ரெடியாகு!ஊருக்கு போறோம்!"-அவள் சில நொடிகள் யோசித்தாள்.

"நான் வரலை ஆதி!"

"ஏன்?அங்கே உனக்கு பிடித்த நேச்சர் இருக்கும்மா!"

"இல்லை...நான் வந்துட்டா பூஜை பண்றது...தடைப்பட்டு போகும்!"

"ஏன் உலகத்துல இங்கே மட்டும் தான் சிவன் இருப்பாரா!அங்கே இருக்க மாட்டாரா?"

"இல்லை ஆதி!"

"நீ வர...வந்து தான் ஆகணும்!இல்லைன்னா...நம்ம வீட்டில இருக்கிற உன் மகேஷ்வரன் இனி இருக்க மாட்டார்!"

"ஆதி!"

"நான் சொன்னா செய்வேன்.கிளம்பி வா!"-அவள் யாது செய்வாள்??

ஏன் இப்படி செய்கிறான் இவன்???

மனம் வலித்தது...

வேறு வழியும் தெரியவில்லை...

"கடவுளே!இப்போ நான் என்ன செய்வேன்??"-தளர்ந்து போய் நின்றாள் அவள்.

மனிதனிடம் இருந்து இறைவனை பிரிக்க முடியுமாம்!கூறுகிறார்கள் அறிஞர்கள்..ஒருவன் இறைவன் மீது குரோதமும் கொண்டிருக்கட்டும்!சவால் விட்டு கூறுகிறேன்!!இறைவனை குறித்து 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.