(Reading time: 14 - 28 minutes)

தை பற்றி அவள் யாரிடமும் பேசவோ , திட்டி ஆறுதல் பட்டுக் கொள்ளவோ முடியாது. ஆதியிடம் சொன்னால் அவள் தங்கைகளை தவறாக நினைப்பான். தன் பெற்றோரிடம் சொன்னாலும் அவர்களும் தங்கைகளுக்கு ஆதரவாகத்தான் பேசுவார்கள். என்ன அவர்கள் போல் கோபமாக இல்லாமல், வருத்தமாக சொல்லுவார்கள்.

அவள் தோழி ப்ரியாவிடம் பேசினால் ரெண்டு பேரையும் திட்டினாலும், இவளுக்கு ஆறுதல் சொல்லுவாள்.

ஆனால் அவளும் கல்யாணம் முடிந்து பெங்களூர் சென்று விட்டாள். அங்கே அவள் வேலைக்கு போவதால் அதிகம் பேச முடியாது.

ஆதி வந்து சென்ற பின்பு, அவனை பிரிந்த அழுத்தம், தங்கைகளின் பேச்சு , ஆதி இங்கே வந்தபோது நடந்த விஷயங்கள் என்று அவளின் மன அழுத்தம் அதிகமாகியது. மேலும் அவளின் பற்றற்ற உணவுமுறை அவளின் உடல் நிலையை பாதித்தது.

அந்த வாரத்தில் ஒருநாள் தான் வேலை பார்க்கும் இடத்தில் மயங்கி விழுந்து விட்டாள். உடனே அவளை மருத்துவர்கள் பார்த்து விட்டாலும், அவளை எச்சரித்தனர். இது இரண்டாவது தடவை. மன அழுத்தம் நீங்க எதாவது விஷயத்தில் அவள் கவனத்தை திசை திருப்ப சொன்னார்கள். ஆனால் ப்ரயு அதில் அலட்சியம் காட்டி விட்டாள்.

இப்பொழுது எல்லாம் அவள் மாமியாரும், அவளும் அதிகமாக பேசிகொள்வது இல்லை, அதே சமயம் சண்டையும் இல்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நீலாவின் "இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

ஆதியிடம் ப்ரயு சரியாக பேசுவது இல்லை என்பதால் அவனும் வாரத்திற்கு இருமுறை என்றுதான் போன் செய்கிறான்.

என்னதான் தான் கோபமாக இருந்தாலும் , அவன் தன்னிடம் பேச வேண்டும் என்று அவள் மனம் எதிர்பார்த்தது.

தான் பதில் பேசாமால் அவன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் அவனால் எவ்வாறு பேச முடியும்? இதை அவள் எண்ணவில்லை.

அவள் மனதில் ஆதிக்கு தான் தேவை இல்லையோ? தன்னுடைய அருகாமை அவனுக்கு பிடிக்கவில்லையோ? என்று மனம் குழம்ப ஆரம்பித்து இருந்தது.

இந்நிலையில் பிரயுவின் தங்கைகளுக்கு வளைகாப்பு வைத்தார்கள்.. அதற்கு சென்ற பிரயு மற்றும் அவள் மாமியார் இருவரிடம் ஆதி தங்கள் வீட்டிற்கு வராதது தவறு என்று அவள் தங்கை மாமியார் முகத்துக்கு நேராகவே சொன்னார்.

பிரயுவின் மாமியாருக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. அன்று தன்னால்தான் ஆதி வரவில்லை என்றும் சொல்ல முடியவில்லை,

இருவரும் ஏதோ சொல்லி சமாளித்தனர். ஆனால் அவரை கேள்வி கேட்ட கோபம் பிரயுவின் மேல் பாய்ந்தது.

பிரயுவிடம் “இதோ பார் .. ப்ரத்யா... உன் தங்கை வீட்டு விஷேஷங்களுக்கு எல்லாம் இனிமேல் என்னை கூப்பிடாதே.. . ஆதி வராதது பற்றி நேரிலேயே கேட்கிறார்கள். ஏதோ சூழ்நிலை என்று எண்ணாமல்  அதையே எல்லோர் முன்னிலையிலும் கேட்டு சங்கடபடுத்துகிரர்கள். ஏன் அவர்கள் நிச்சயத்தின் போது பேசியதை நானும் எல்லோர் முன்னிலையிலும் கேட்டால் எங்கே கொண்டு முகத்தை வைத்துகே கொள்வார்கள், ஏதோ உன் அப்பா, அம்மா முகத்திற்காக பார்த்தேன்.” என்று பொரிந்து தள்ளி விட்டார்,

இவர்கள் எல்லோர் ஈகோவிலும் , சுயநலத்திலும் பாதிக்கப்பட்டது ப்ரயு மட்டுமே. ஆதி தனிமையில் கஷ்டபட்டாலும், இது போன்ற பேச்சுக்கள் அவன் கேட்கவில்லை.

இதற்கு இடையில் பிரயுவின் தங்கைகள் இருவருக்கும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் குழந்தை பிறந்தது.

ப்ரயு தன் தாய்க்கு உதவியாக தன் வீட்டிற்கு செல்ல மாமியாரிடம் கேட்ட போது அவர் சரி எனவே .. அவள் முதலில் hospital சென்றாள்.

முதல் தங்கை குழந்தை டெலிவெரி முடிந்து , அவள் பெற்றோர் வீட்டிற்கு சென்றவள், தாயையும் சேயையும் பார்த்துக் கொண்டாள். அவள் தங்கைகளோடு பெரிய அளவில் பேச்சு வார்த்தை இல்லை என்றாலும், அவள் விட்டு கொடுக்க விரும்பவில்லை.

ஆனால் இவர்களை பார்க்க வந்த சில சொந்தங்கள் அவள் காது படவே குழந்தையை ப்ரயு கையில் கொடுக்க வேண்டாம் என்றும், அவளை திருப்பி அனுப்புமாறும் சொல்லி சென்றனர்.

முதலில் சாதரணமாக விட்ட ப்ரயு, மீண்டும் மீண்டும் ஒவ்வொருவராக சொல்லவே, அவள் மனது வேதனை பட்டது. அதோடு அவள் தங்கையும் இவளிடம் குழந்தையை கொடுக்க யோசிக்கவே , அவளே ஐந்து நாட்களில் கிளம்பி விட்டாள்.

இவர்களுக்காக அவள் ஒரு மாதம் லீவ் வேறு போட்டிருந்தாள். இரண்டாவது தங்கை டெலிவெரியின் போது இவள் நேராக hospitalil சென்று பார்த்து வந்தாள். அதோடு அவள் அம்மா, அங்கே உள்ளவர்களுக்கு தேவையனதை தன் வீட்டில் இருந்து சென்று கொடுத்து வந்தாள்.

மறந்தும் குழந்தையை அவள் கையால் கூட தொடவில்லை. பிரயுவின் மாமியாரும் இருவரையுமே hospitalil வந்து பார்த்து விட்டு சென்றார். குழந்தைக்கு செய்ய வேண்டிய முறையையும் அங்கேயே கொடுத்து விட்டு வந்தார்.

ஆதிக்கு தெரிவிக்க பட்ட போது அவன் இரு சகலைகளிடமும் போனில் வாழ்த்து கூறினான்.

இந்த hospital களேபரத்தில் ஆதி, பிரயுவின் இரண்டாம் வருட திருமண நாள் வர, ஆதிக்கு ப்ரயு எப்படியும் தன் அம்மா வீட்டில் தான் இருப்பாள் என்பதால் பெரிய அளவில் அவளிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அவளுக்கு என்ன தேவையோ வாங்கி கொள்ள சொல்லி பணம் அனுப்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.