எங்கே தனது ஆவலைப் பற்றி அவளிடம் உளறி தனது இமேஜை குறைத்துவிடுவானோ என்று பயந்து சேகரின் கைகளைப் பற்றி அழுத்தினான்.
“குட் மார்னிங் சேகர்.”
“குட் மார்னிங் சிந்து.”
அவர்களுக்கருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
அப்போதுதான் அங்கே அமர்ந்திருந்த அருண்பிரசாத்தை பார்த்தாள். அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.
அவளுக்கு அவனை புதுசா பார்க்கிற மாதிரியே இல்லை. இதற்கு முன்னே அவனை எப்போதோ எங்கேயோ பார்த்த நினைவு. அவன் முகம் அவளுக்கு வெகு பரிச்சயமாக இருந்தது.
தன்னைக் கண்டதும் அவள் முகம் பிரகாசமானதைக் கண்ட அருண்பிரசாத்துக்கு எரிச்சலானது. அவனை முதன் முதலில் பார்க்கும் பெண்களிடம் அவன் பார்ப்பதுதான். அப்போதெல்லாம் என்னவோ பெரிதாக சாதி
...
This story is now available on Chillzee KiMo.
...
டா இப்படி பண்ணிட்டே? சிந்து எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா? நீ நினைக்கிற மாதிரி இல்லை.” அதற்கு மேல் அவனிடம் சேகர் பேசத் தயாராயில்லை.
அவன் பேசியது சிந்தனாவின் காதுகளில் விழத்தான் செய்தது.
எல்லோருக்கும் தன் மேல் நல்ல அபிப்ராயம் இருக்கும் போது அவனுக்கு மட்டும் ஏன் அப்படி தோன்றியது?