23. காதல் பின்னது உலகு - மனோஹரி
இயங்கிக் கொண்டிருக்கும் ரோலர் கோஸ்டர்…பயத்தில் பாதி பேரும்….உற்சாகத்தில் மீதிப் பேரும் அலறிக் கொண்டிருக்க….இவன் என்ன சொல்லி யாருக்குப் புரியவைத்து…இந்த ரைடை நிறுத்தி…..மனைவியை கவனிக்கவாம்…?
யவ்வன் அவசர அவசரமாக அருகில் இருந்தவளை முடிந்தவரை கன்னம் தட்டி…அசைத்துப் பார்த்து..உலுக்கி சுயநினைவுக்கு கொண்டு வர அவனாலான மட்டும் முயன்றான்…
ஆனாலும் ரைடு முடியும் வரையுமே அவள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை…..
ட்ரெய்ன் நிற்கவும் இவன் தன் தோள்களை பிடித்திருந்த ஹார்ஸ் காலரை தூக்கிவிட்டு…. அவசரமாக நிலவினியுடையதை கழற்ற முயல….. அதற்குள் தலை சாய்த்துக் கிடந்தவள் மெல்ல ஒற்றை கண் மட்டுமாய் திறந்து பார்த்தாள் இவனை…
பின் சின்னதாய் ஒரு கண் சிமிட்டல் இவனைப் பார்த்து……
“கண்ண மூடி அசையாம இருந்ததுல ரைட எஞ்சாய் பண்ணவே முடியலை யவிப்பா….இன்னொரு டைம் திரும்பவும் போவமா? எனக்கு ரோலர் கோஸ்டர்னா ரொம்ப இஷ்டம்…..அதுவும் வொன்டர் லா ல உள்ளது ரிவர்ஸ் காயில் மெத்தட்….இங்க வேற எங்கயும் இது மாதிரி கிடையாதுன்னு ஃப்ரெண்ட்ஸ்லாம் சொல்லிகிட்டாங்க….”
அதுவரை தவித்துப்போய் இருந்தவன்….ஒற்றைக் கண்ணை அவள் திறந்து பார்த்த போது அதிர்ந்து போய் பார்த்த யவ்வன், இப்போது வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தான்…
அவள் எழும்ப உதவியாக இவன் கை நீட்ட….அந்த கரம் பற்றி கெத்தாகவே எழுந்து வந்தாள் வினி…..’பல்ப் கொடுத்தாச்சுல்ல..’
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
இருந்தாலும் சற்று நெற்றி சுருக்கி….. “நிஜமாவே உங்களுக்கு கோபம் இல்லையே…” என்றபடி அவன் கண்களை ஊடுருவினாள்.
அவள் உச்சந்தலையில் கை வைத்து செல்லமாய் அசைத்தவன்…. “ஹேப்பி டூ லூஸ்” என்ற போது அவன் கண்களில் சந்தோஷத்தை தவிர எதையும் பார்க்கவில்லை நிலவினி…..
என்னதான் அவன் இதை விளையாட்டாய் ஏற்றுக் கொள்வான் என அவள் நம்பி இருந்தாலும்…… அவன் பதில் இப்படித்தான் இருக்கும் என்று அவள் கணித்திருந்தாலும்…. உள்ளுக்குள் கொஞ்சம் உறுத்தல் தான் அவளுக்கு….
யாருக்குத்தான் தோற்க பிடிக்கும்…..? அதிலும் பெண்களிடம் ஆண்கள் ஈகோ ஆயிரம் மடங்கு எகிறுமே….
அத்தனை உறுத்தலையும் அழித்துப் போடும் வண்ணம், இப்பொழுது அவன் கண்களில் காணும் இந்த கலப்படமற்ற சந்தோஷம் அவளை அசரடிக்கிறதுதான்…..
கொஞ்சமும் ஈகோ இல்லாமல்……. சற்று கூட நோகடிக்காமல்…. சுற்றி வளைத்து கூட குறை சொல்லாமல்…… அவன் நடந்து கொள்ளும் விதம்….
அவளை அவனுக்கு சரிசமமாக, இணையான நட்பாக, நினைக்கும் மனம் இருந்தால் தானே இது சாத்தியம்…..….
இப்படி இவள் எண்ணமிடும் போதே…இன்னொரு வகை நெருடல்….
இவள் ஒன்றும் யவ்வன் இவளை டீஸ் செய்த விஷயங்களில் ஈகோ பார்த்ததில்லையே….. ஆனாலும் முறைக்கும் அளவுக்காவது கோபம் வரத்தானே செய்தது….அது தானே இயல்பு….இது என்ன இத்தனை சந்தோஷம் இவனுக்கு…..
அவன் அருகில் நடந்து கொண்டிருந்தவள்…அவன் மனதை புரிந்து கொள்ளும் முயற்சியாக மீண்டுமாய் அவனை திரும்பிப் பார்த்தாள்….
இவள் பார்வை புரிந்தானோ…?
“அத்தைட்ட பேசிட்டு இருக்கப்ப நீ பயங்கர வாலு….ரொம்ப ஃப்ராங்க்ஸ் செய்வ…..க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸே கூட செய்றது எதாவது பிடிக்கலைனா….. கண்டிப்பா உன் ஸ்டைல்ல பனிஷ்மென்ட் கொடுப்பன்னு சொல்லிட்டு இருந்தாங்க…”
அவன் சொல்ல ஆச்சர்யமாய் நிமிர்ந்து பார்த்தாள் இவள்… இப்பொழுது இவள் கை பற்றி நடக்கத் தொடங்கினான் அவன்….
“அம்மாவா சொன்னாங்க….அம்மாட்ட நான் இதெல்லாம் காமிச்சுகிட்டதே கிடையாதே…” இவள் தான்.
“நம்ம பத்தி யாருக்குமே தெரியாதுன்னு நீயா நினச்சுகிட்டா எப்டியாம் ?” அவன் பதிலில் இவள் இன்னுமே அவனிடன் ஒண்டினாள்.
“என்ட்ட மட்டும் நீ இயல்பா இல்லையோன்னு ஒரு ஃபீல்….எவ்ளவுதான் சீண்டினாலும் அதிகபட்சம் முறைக்கிறதோட நிறுத்திப்ப….” அவன் சொல்ல வருவது புரிய….
“அதெல்லாம் செய்றது பிடிக்கலைனாதான பனிஷ்மென்ட்….பிடிச்சா என்ன செய்றதாம்….?” துள்ளலோடு சொன்ன ஒற்றை வரியில் அவனது அத்தனை செயல்களையும் அங்கீகரித்தவள்,
“இது வேற…. அன்னைக்கு அலர்ஜின்னு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போனீங்கல்ல அப்பவே இதை டிசைட் செய்துட்டேன்…. உங்க கேம் ஒன்சைடடா போய்ட்டு இருக்கே……கொஞ்சம் செக் வைக்கனும்னு….” விளக்கியபடி முழு உரிமையோடும் பரிபூரண திருப்தியோடும் அவன் கையை தானும் பற்றியபடி சேர்ந்து நடந்தாள்.
“ரொம்பவும் தேங்க்ஸ்” என்றான் இவன் இப்போது. அதில் அத்தனை குறும்பு குடி இருந்தது….. அடி உதடில் அடக்கப்பட்ட சிரிப்பும்தான். ‘இன்னைக்கு பனிஷ்மென்ட் இவள் கொடுக்கனுமே அவனுக்கு….’ அவன் எங்கு வருகிறான் என்பது இவளுக்குமே புரிய பேச்சை மாற்றினாள் பெண்….