(Reading time: 23 - 46 minutes)

ர் யூ ஆல் ரைட்?”

அதற்கும் அதே செய்கை பதில்…

“எதாவது பிடிக்கலையா உனக்கு?”

சேம் அன்ஸ்வர்.

“வீட்டுக்குப் போய்டுவமா குட்டிப் பொண்ணு…?” கேட்டபடி இப்போது இவளுக்கு வெகு அருகில் வந்தவன் சட்டென அவளை தன் கைகளுக்குள் இழுத்து “என்ன?” என்றான் அவள் கண்களைப் பார்த்து….

அவனது எத்தனையோ அணைப்புகளை இதுவரை இன்பமாய் அனுபவித்திருக்கிறாள் தான்…இந்த நொடி என்ன உணர்ந்தாள் எனத் தெரியவில்லை…. ஆசையும் அதை தாண்டி ஏதோ ஒன்றுமாய் இவளை ஏவ…. அணைத்த அவனின் மார்பில் கை வைத்து அவனை வேகமாய் ஒரு தள்ளு….

அவள் தள்ளலை சற்றும் எதிர்பாரதவன் சற்றாய் பின்னேற…..அவள் முடியிலிருந்து அதுவரை வடிந்து தேங்கி இருந்த ஈரத்தில் அவன் கால் பட….. சின்ன ஸ்கிட் தான்….ஆனால் இருந்தது இடுப்புயரம் கூட இல்லாத இரண்டே கம்பிதானே…….அதைத் தாண்டிப் போய் அவன் விழுந்தான்….

எத்தனை அடி ஆழ கடலோ…?? அதுவும் நகர்ந்து கொண்டிருக்கும் கப்பலை ஒட்டி எனும் போது…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

“வீஈஈஈஈயீயீயீயீயீயீயீயீயீயீயீல்ல்ல்ல்ல்ல்ல்” இரு காதுகளையும் பொத்திக் கொண்டு இவள் அலறிய அலறல் வேறு யாருக்காவது கேட்டதாமா????

அவசர அவசரமாக தங்களது பகுதியிலிருந்து வெளியேறும் கதவை நோக்கி ஓடினாள்…..வெளியே போய் யாருக்காவது விஷயத்தை சொல்லி…. அதற்கு மேல் யோசிக்க கூட முடியவில்லை நிலவினிக்கு….

கதவு எப்படியோ பூட்டி இருந்தது…..அவன்தான் பூட்டி இருக்க வேண்டும்…. அதற்கு சாவி எதுவும் உண்டா…? அப்படியானால் அது எங்கே..??

ஒவ்வொரு இடமாய் உள்ளுக்குள் ஓடி அலைந்தாள்…. இவர்கள் படுக்கை அறை இப்போது அழகிய மலர் அலங்காரத்தில்….. ‘ஓ இவ பால்கனில நின்ன நேரத்தில இவ்ளவு செய்துறுக்கானா?’இன்னுமாய் அழுகையாய் வருகிறது இவளுக்கு….

எங்கு தேடியும் சாவி என்று எதுவும் கிடைக்கவில்லை….மொபைலை எடுத்துப் பார்த்தால்….சிக்னல் என்று எதுவுமில்லை….

என்ன செய்யவென எதுவும் புரியாமல்…….இவள் தவித்தது எவ்வளவு நேரமோ….. கதவில் ஏதோ கடமுட சத்தம்…. இவள் கதவுக்கு ஓடினால்…. கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தது அவன்….யவி…

நம்பர் லாக்கிங் சிஸ்டம்…..வெளியே இருந்து அந்த எண்ணை என்டர் செய்தாலும் கதவு திறக்கும்….

ஒரு கணம் எதிரில் நின்றவனை எதுவும் புரியாமல் ஏற இறங்க பார்த்தவள்….. இருந்த அத்தனை தவிப்பிலும் இறுகி அணைத்துக் கொண்டாள்….

“ஹேய்…குட்டிப் பொண்னு….வினு….வினுமா…..எனக்கு ஒன்னுமில்ல….இங்க இருந்து விழுந்தா அடுத்த ஃப்ளோர் பால்கனிக்குப் போவோம்…அவ்ளவுதான்…” அவனது எந்த விளக்கமாவது அவள் காதில் விழுகிறதாமா….???

அத்தனை முத்தங்களை அளவின்றி வாரி இறைத்துக் கொண்டிருந்தாள் அவன் கன்னங்களில்…

அவளாய் நிறுத்தும் வரை அவளை அணைத்தபடி  அதை அனுபவித்தவன்…

அவள் மெல்ல அமைதியாகவும் “வினுப் பொண்னு” என இவன் தொடங்க… பதில் என்று எதுவும் வரவில்லை அவள் வாயிலிருந்து…. ஆனால் அணைத்திருந்த அவள் அணைப்பு மட்டும் இறுகியது இன்னுமாய்…

அடுத்துமாய் இவன் ஏதோ சொல்ல தொடங்க….. எதுவும் சொல்லாமல்… அவன் மார்பில் புதைந்தாள் அவள்…

இப்போது அவளை கைகளில் வாரி அள்ளி படுக்கையில் விட்டவன் அவள் இருபுறமாய் கை ஊன்றி அவள் கண்ணோடு கண்ணோக்கி கேட்டான் “பயந்துட்டியா வினுமா?”

முதலில் ஆமோதிப்பாய் மேலும் கீழுமாய் ஆடிய அவள் தலை…பின் இடமும் வலமுமாய்….

அவள் பார்வையோ வெட்க வில்லேற்றி விலகியது இவன் விழிகளை தவிர்த்து…

அவனுக்குப் புரியாமலா….? அழகாய் அரங்கேறியது நிலவினி யவ்வனம். கணவன் மனைவி காதல் பயணம்.

விஷியாவிடம் அவளைப் பார்க்க திரும்பவும் வருவேன் என சொல்லிவிட்டு வந்த அபயனுக்கு இப்போது அதற்கு உதவிக்கு தேவைப்பட்டது அவனது அண்ணி நிலவினி…. நிலவினி பவிஷ்யாவிற்கு லன்ச் எடுத்துப் போக அப்படியே கூடப் போய்விட்டு வரலாம் என்பது  இவன் ப்ளான்…

ஆக அந்த நேரம் கிளம்பி வீட்டுக்கு வந்தவன்  அவசரமாக மாடியேற தொடங்க, அதைப் பார்த்திருந்த அவனது அம்மா மரகதம் …அவன் வழக்கமாக இந்த நேரம் வீட்டுக்கு வரமாட்டான் என்பதால்

“என்னபா சின்னவனே…. இந்த நேரம் வீட்டு பக்கம்…..நள்ளவன பார்க்கப் போறியோ….? அவனும் வினியும் கொச்சி கிளம்பிட்டு இருக்காங்களே…” என்று விஷயத்தை சொன்னார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.