அவன் வணங்காமுடியின் பேரன் என்று ஞாபகத்தில் வந்ததும் எவ்வளவு சந்தோசப்பட்டாள்? அவன் பேசியதை அவள் மட்டுமா கேட்டாள்?
அங்கேயிருந்த அனைவருமே கேட்டிருக்கின்றனர். அவர்கள் அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்.
நினைக்க நினைக்க அவளுக்கு தலையை வலித்தது. அவளுக்கு பாடம் கவனிக்கும் மனம் இல்லை. வகுப்பிற்கு சென்று பாடப்புத்தகத்தை எடுக்ககூட மனமில்லை.
அப்படியே அங்கிருந்தே வீட்டுக்கு கிளம்பினாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...
...
This story is now available on Chillzee KiMo.
...வித்தாள்.
மகளிடம் தன்னம்பிக்கையை விதைத்து அதை வாடவிடாமல் பார்த்துக்கொண்டாள்.
ஆனால் இதோ இப்படி ஒரு சொல் பொறுக்க முடியாமல் தவித்துப்போய் கிடக்கிறாளே.
“சிந்து!” மகளுக்கருகில் வந்து அமர்ந்தாள்.
“அம்மா!”
“என்னடா? அம்மாகிட்ட மறைக்கிற அளவுக்கு வளர்ந்துட்டியா?”