அட இப்படியே போயிகிட்டு இருந்தா எப்படி பாஸ் ? இதுக்கொரு எண்ட் கார்டு போட வேண்டாமா ? இதோ !!
அழகாய் புலர்ந்தது அந்த தினம் .. நேற்று இரவு பழைய நினைவுகளில் உழன்ற கொண்டிருந்தாலும் , காலையில் அதற்கான தடையமே தெரியாதது போல , முகத்தில் உற்சாகத்தை நிறைத்து கொண்டு எழுந்தான் புகழ் ..
மோகன் , யாழினி , தமிழ் மூவருக்கும் காபி போட்டு அதை பிளாஸ்கில் ஊற்றிவிட்டு, ஜாகிங் போவதற்கு தயாராகினான் .. அவன் கிளம்பும்போது தமிழும் எழுந்து வந்தான் ..
"வா டா டாக்டரூ "
" ஹீ .. குட் மார்னிங் புகழ் எங்க கிளம்பிட்ட ?"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз…!
படிக்க தவறாதீர்கள்...
"வீடடை விட்டு ஓடுறேன் "
"மறுபடியுமா ? ஏன் டா ?"
"லூசு ஜாகிங் போறேண்டா .. நீ எப்படி டா டாக்டர் ஆகின ? "
"டாக்டருக்கும் ஜாகிங்கும் என்னடா சம்பந்தம் ?"
"சரி வா நீயும் என் கூட "
"யாழினி தேடுவா புகழ் "
" 20 மினிட்ஸ் தானே தமிழ் ?ஓவரா சீன் போடாத "
"ப்ச்ச்ச் .. எனக்கும் ஜாகிங்கும் ரொம்ப தூரம் நீயே ஓடுப்பா " என்று சிரித்தவாறு தமிழ் எஸ்கேப் ஆகினான் ..
அதே நேரம், யாழினியின் வீட்டின் முன் ஒரு நீல நிற கார் ரெடியாக இருந்தது .. காருக்குள் இரு கண்கள் புகழின் வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்க்க. அதை அறியாமல் புகழ் அந்த கார் பக்கமாய் ஓட , கண் இமைக்கும் நொடியில் புகழ் அந்த காருக்குள் இழுக்கப்பட்டு இருந்தான் ..
என்னையே கைய புடிச்சு இழுத்தது யாருடா என்று கேள்வியுடன் நிமிர்த்தவனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய, அவன் வாய் திறந்து பேசுவதற்குள்
"பளார் பளார் பளார் பளார் "என்ற நான்கு அறை வாங்கி இருந்தான் புகழ் .. அந்த "பளார் "ருக்கு சொந்தமானவங்க யாருன்னு அடுத்த எபிசொட் ல சொல்றேன் ..
தொடரும்
{kunena_discuss:994}