அவள் வந்ததும் இருவரும் வெளியே செல்ல... அங்கு மூன்று பெண்கள் மழையில் எப்படி வீட்டுக்கு போவது என்று வாசல் பார்த்துக் கொண்டு தவித்தபடி இருப்பதை சஞ்சய் கவனித்தான்.. பொதுவாக அலுவலக நேரம் முடிந்ததும் எல்லோரும் கிளம்பிவிடுவர்... அப்படி சற்று நேரம் இருந்து வேலை செய்யும் நிலை வந்தால்... அது பெண்களாக இருக்கும்பட்சத்தில்... சஞ்சயோ இல்லை நிகேதனோ அதுவரைக்கும் அலுவலகத்தில் இருப்பர்...
இந்த காலத்தில் எந்த இடத்திலும் பெண்களுக்கு பிரச்சனைகள் வருவதால்... அவர்களிடம் வேலை செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதால் தான் அப்படி... இன்று எதுவும் வேலையில்லை என்றாலும்... மழையின் காரணமாக அவர்கள் காத்திருந்ததால்... அவர்களை அப்படியே விட்டுவிட்டு போக தோன்றாமல்...
"நீங்கல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கொருவர் பேசி விட்டாலும்... இப்போது சகஜமாக பேசிக் கொள்ள முடியாமல் அமைதியாக வந்தனர்... மழை கூட அந்த மௌனத்தை கலைக்க விரும்பாமல் அந்த நேரம் அதன் வேலையை நிறுத்தியிருந்தது...
ஏனோ அந்த அமைதி சஞ்சய்க்கு பிடிக்காமல் அவன் காரில் தனியாக போகும் போது கேட்கும் பாடல்களை இப்போதும் ஒளிபரப்பினான்...