(Reading time: 13 - 25 minutes)

டையில இருந்து சுட்டுட்டு வந்தேன்..இப்போ இதுவும் உடைஞ்சுடுச்சா..சரண் இருக்கும் போது போய் வேற போன் சுட்டுட்டு வரணும்..அவன் தான் கணக்கு தப்பு தப்பா எழுதி வைப்பான்”என்று அவள் வேண்டுமென்றே சொல்ல,இப்போது குமார் மகனை முறைத்தார்.

அவன் தான்,சரண் கணக்கில் புலியின் வேகம்,..சிங்கத்தின் ஆளுமை..யானையின் எடை அளவு மூளை..என்றெல்லாம் கதை அளந்து,பார்ட்னராக சம்மதம் வாங்கியிருந்தானே..!!

‘ஒரே நிமிஷத்துல,மாமனை டேமேஜ் பண்ணிட்டாளே’நொந்து கொண்ட யஸ்வந்த்..

“இவ பொய் சொல்றாப்பா..அது இவளோட மொபைல் ஷோ ரூம் தான்.எவ்வளவு தான் உடைஞ்ச போனா இருந்தாலும்,சரண் அதை புத்தம் புதுசா மாத்தி,கணக்கில காட்டிடுவான்..அந்த திறமைய தான் இப்படி சொல்றா”என்று சமாளிக்க..

“ஏன்மா..அப்படியா”என்று அவளிடம் கேட்டார் குமார்.

“அப்படி எல்லாம் இல்ல மாமா..அவன் வேணும்னே,உடைஞ்சு போச்சுன்னு கணக்கு காட்டுவான்.அப்பா தான் போன் சரி செய்வார்.இவர் பொய் பொய்யா,சொல்லி உங்களை ஏமாத்த பார்க்கறார்..”என்று மாமனாரை ‘காக்கா’ பிடிக்க ஆரம்பித்தாள்.

‘ஒரு முடிவோட தான் வந்திருக்கா போல’-யஸ்வந்த்திற்கு புரிந்து போனது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அம்மாவை அவன் பார்க்க,அவரோ குறுகுறுவென்று அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவந்திகாவின் முகத்தில் தெரியும் பாவனைகள் அப்படியே,’சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தொனியிலையே இருந்தது.

ஆனால் அவனுக்குத்தானே தெரியும்.அவள் எப்படியெல்லாம் பொய் சொல்வாள் என்று.நேற்றுக் கூட பைக்கை உருட்ட வைத்தாளே-மனதிற்குள்ளையே அர்ச்சனையை தொடர்ந்தவன்,இப்போது அம்மா தன்னையே பார்ப்பதை உணர்ந்தான்.

அவரோ,கையில் அபிநயம் பிடித்து,’கொஞ்சம் கண்ணை சிமிட்டுட்டு,அப்புறம் பார்’என்பது போல சைகையில் சொல்ல,”ஷப்பா”என்று அவன் பெருமூச்சுவிட்டு நொந்துகொள்ள..இப்போது எல்லாரும் அவனையே பார்த்தனர்.

“மூச்சு விடறது கூட தப்பா”தன்னையே கேட்டுக்கொண்டவன்,பதிலை எதிர்பார்க்காமல் கண்ணை மூட..

“பதில் சொல்ல தெரியாம சமாளிக்கறான்”என்று குமார் அவந்திகாவிடம் பேசுவது அவனுக்கு நன்றாகவே கேட்டது.

‘எப்படியெல்லாம் டேமேஜ் செய்யறாங்க’நொந்துகொண்டாலும் கண்ணை மட்டும் திறக்கவில்லை.

தாமரை வெளிப்படையாகவே,”என் பையனை கல்யாணம் செய்துக்க சம்மதமா”என்று கேட்க,இப்போது அவள் திருதிருவென முழித்தாள்.

காதல் சொல்லி ஒரு நாள் தான் ஆனது.அதுவும் உள்ளூர உணர்ந்து சொன்னாளா என்று அவளுக்கே தெரியவில்லை.ஆனால் அவனை பிடித்திருந்தது.அவனுக்கும் தன்னை பிடிக்குமா என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கத்தான் இங்கே வந்திருந்தாள்.

அதற்குள் இப்படி கேட்டால்..!!

பதில் சொல்ல சில நொடிகள் எடுத்துக்கொண்டவள்,”என்னோட அத்தைக்கிட்ட தான் இதுக்கான பதிலை கேட்கணும்”என்றாள்.

“ஓ..அப்போ அவங்க வேணாம்னு சொன்னால்,விட்டுட்டுப் போயிடுவியா”என்று யஸ்வந்த் கேட்க வேண்டியதை எல்லாம் தாமரை கேட்டுக் கொண்டிருந்தார்.

“அப்படி ஒரு சூழ்நிலை வந்தால்,அப்போ யோசிக்கலாம்..இப்போவே எதுக்கு நெகட்டிவா யோசிக்கணும்..”என்றாள் இடக்காக..

“மலுப்பான பதில் எல்லாம் வேண்டாம்..நேரடியா எனக்கு பதில் வேணும்..”என்று கறாரான குரலில் பேச..

“உங்க பையன் என்கிட்ட வந்து முதல்ல,’என்னை கல்யாணம் பண்ணிக்கறியா’-ன்னு கேட்கட்டும்..அதுக்கு அப்புறம் என்னோட அப்பாகிட்ட கேட்கட்டும்..அதுக்கு அப்புறம் நான் உங்ககிட்ட எனக்கான பதிலை சொல்லுறேன்”என்று பதில் சொல்லி,அப்போதே மாமியார் மருமகள் பிரச்சனைக்கு அடித்தளம் இட...மேலும் யஸ்வந்த் நொந்து கொண்டான்.

“அம்மா...இப்போவே எல்லாம் பேசணுமா...முதல்ல சரிவருமான்னு நாங்க பேசிக்கிறோமே”என்று சொல்லிய நொடியில்,கணவருக்கு கண் காட்டிவிட்டு,வெளியே சென்றார்.

பேசுவதற்கு தனிமை கொடுத்து விலகி செல்கிறார்களாம்-இவங்க ரொம்ப நல்லவங்க!!

அவர்கள் சென்றதும்,”எதுக்கு அப்படி சொன்ன..நீ தானே பிடிச்சிருக்குன்னு சொன்ன.அவங்க கேட்டதுல என்ன தப்பு இருக்கு”என்று கிட்டத்தட்ட மிரட்டும் தொனியில் கேட்க,

“என்ன தப்பா...நான் லவ் சொல்லி சரியா இருபத்தி மூணு மணி நேரம்,நாற்பது நிமிஷம்..ஆறு நொடி தான் ஆகுது”என்று கண்ணை உருட்டி அவளும் பதிலுக்கு மிரட்ட..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.