(Reading time: 13 - 25 minutes)

துக்கு..”

“உடனே எப்படி உங்கம்மா கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேட்கலாம்..இப்படி கேட்கறது நல்லாவா இருக்கு..பசங்க லவ் சொன்ன உடனே,பொண்ணுங்க உடனே ஒத்துக்காம குறைஞ்சது ஆறு மாசமாவது சுத்த விடறோம் தானே..அதே மாதிரி நீங்களும் பண்ண வேண்டியது தானே”

“ஹான்..அப்புறம்”என்றான் சுவாரசியமாக..

“பார்த்த உடனே காதல் வேணா வரலாம்.பழகிப் பார்க்காம கல்யாணம் எல்லாம் செய்துக்க முடியாது.எதுக்கும் ஒரு ப்ரோசிஜர் இருக்கு.இப்போ உடனே கல்யாணாம் பண்ணி என்ன செய்யப் போறோம்..காதலிக்கும் போது தான் பசங்க,பொண்ணுங்களுக்கு விடாமல் போன் பண்ணி..தூங்கக் கூட விடாமல் தொந்தரவு செய்வாங்க.அதே கல்யாணத்துக்கு அப்புறம்,பொண்டாட்டி போன் பண்ணாலே..அலறி அடிச்சிட்டு சைலேன்ட்ல போட்டுட்டு..’நானா மீடிங்கல இருந்தேண்டா பட்டுக்குட்டி’-ன்னு அநியாயத்துக்கு பொய் சொல்ல வேண்டியது..”,

“இந்த பசங்க சைக்காலஜி எங்களுக்கு தெரியாதா...என்னை காதலிக்கறவன் குறைஞ்சது மாசத்துக்கு நாலாயிரம் ரூபாயாவது மொபைல் பில் கட்டணும்..கிப்ட் நிறைய வாங்கி தரணும்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்க வரணும்..இதெல்லாம் லவ் பண்ற பீரியட்ல,கிடைக்கற ரொம்ப ப்ரீசியசான மொமென்ட்ஸ்..இதெல்லாம் என்னால இழக்க முடியாது..”,

“காதல் கல்யாணம்னா,கண்டிப்பா பிரச்சனை இருக்கணும்..நிறைய கஷ்டப்படனும்..வில்லன் வில்லி எல்லாம் சரியான நேரத்துக்கு என்ட்ரி கொடுக்கணும்..அவங்களை எல்லாம் சமாளிச்சு கல்யாணம் பண்ணி,அதுக்கு அப்புறமா,நண்பர்களா இருக்கலாம்னு முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்..என்னோட காதல் கதை,கல்யாணத்துல போய் முடிய,குறைஞ்சது முப்பது எபிசோடாவது வேணும்..6வது எபிசோட்ல எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது...”, 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

“அதை விட உங்கம்மா அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்க..ஒரு வீட்டுல இருக்க அப்பாவும் பையனும் சண்டை போட்டுட்டே இருக்கணும் என்பது எப்படி எழுதப்படாத விதியோ,அது போலத்தான் மாமியாரும் மரும்களும்னா எலியும் பூனையும் மாதிரி இருக்கணும்..அதை விட்டுட்டு சண்டை போடாமல்,உங்கம்மா சொல்றதுக்கெல்லாம்’ஆமாம் சாமி’போட என்னால முடியாது..சண்டை போட்டுட்டே இருந்தால் தானே,ஒரு என்ட்டர்டெயின்மென்ட் இருக்கும்”என்று பெரிதாக சொல்லி முடிக்க..

“முடிஞ்சுதா..இல்ல இன்னும் இருக்கா”என்றான் நக்கலாக..

“இப்போதைக்கு அவ்வளவு தான்”என்று அவளும் கேலியாக பதில் சொன்னாள்.

“நிறைய சீரியல் பார்ப்ப போல”

“நிறைய எல்லாம் இல்ல.ஒரு நாளைக்கு ஒரு பதினாலு சீரியல் பார்ப்பேன்”

“யூ மீன் போர்டின் சீரியல்ஸ்..செவென் ஹார்ஸ்”என்று மிரண்டு போனவனாக கேட்டான்.

“தமிழ்ல சொன்னால் புரியாதோ..”என்றதும் தலையை உலுக்கிக் கொண்டவன்,

“நான் தாங்க மாட்டேன்..”என்றான்

“இதுக்கே இப்படின்னா எப்படி..சரணை எப்படியெல்லாம் நாங்க கொடுமை பண்றதுன்னு ஒரு டைம்டேபிளே போட்டு வைச்சிருக்கோம் தெரியுமா..எத்தனை அடிச்சாலும் என்னோட மாமா தாங்குவான்..வேணும்னா கேட்டுப் பாருங்க”என்றதும்,

“உஃப்”என்று மூச்சை இழுத்து,ஊதியவன்..

“நான் இவ்வளவு அடிச்சா கண்டிப்பா தாங்க மாட்டேன்..அதனால நான் என் முடிவில இருந்து பின் வாங்கிக்கறேன்”என்றான்.

“மூளை வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு போல”என்று அவன் சொன்னதற்கு கோபப்படாமல் கிண்டலடித்துவிட்டு,

“கால் வலிக்குது”என்று சேரில் அமர்ந்தாள்.

“உங்களை பார்க்கறதுக்காக,காலைல காபி கூட குடிக்காமல்,இங்க வந்திருக்கேன்.உங்களை தேடி வந்த பொண்ணுக்கு ஒரு காபி கூட கொடுக்கணும்னு உங்களுக்கு தோணாதா”

“நீ பேசின பேச்சுக்கு,கண்டிப்பா உனக்கு தொண்டை வலிச்சிருக்கும்..அதுக்காகவே கொடுக்கறேன்..”என்று பிளாஸ்கை எடுத்து அப்படியே கொடுத்தான்.

“எனக்கு பிளாஸ்க்ல இருக்கதெல்லாம் பிடிக்காது..வேண்டாம்..நீங்களே குடிச்சுக்கோங்க.நான் வீட்டுல போய் போட்டு குடிச்சுக்கறேன்”என்றவள் கிளம்ப போக,

“நான் உன்னை வேண்டாம்னு சொன்னேன்னு உனக்கு கோபம் வரலையா”என்றான்.

“அது உங்களோட உரிமை..இதுல கோபப்பட என்ன இருக்கு..பார்த்த உடனே காதல் வரலாம்.பழகிப் பார்த்ததுக்கு பின்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு இதுக்கு தான் சொன்னேன்.என்னைப் பற்றி எதுவுமே தெரியாம,உங்கம்மா கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேட்டுட்டாங்க...இது எவ்வளவு பெரிய தப்புன்னு உங்களுக்கு இப்போவாவது புரிந்திருக்கணுமே..”,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.