(Reading time: 10 - 19 minutes)

ண்களை கிளம்ப சொல்ல, பெண்கள் எல்லாரும் அந்த சுரா வை அடிக்க வந்தனர்.

கடைசியாக சென்ற அர்ஜுன் காதில் விழுந்த பேச்சு..

“சுறா .. டியர் .. தண்ணி drum நிறைய பிடிக்கணுமே என்ன பண்ண போறீங்க? “

“அது என்னடி hose pipe அங்கே கொண்டு வச்சுட்ட போதுமே..”

“எரும.. இங்கே pipe கிடையாது.. கிணத்துலே தண்ணி இழுக்கணும் .. தெரியாதா?”

“ஐயோ .. இப்போ என்னடி பண்றது.. “

“நீ தான் செய்யணும்..”

அவளுக்கு அழகு காமித்தாள்..

“ஆமாம்.. என்னடி அது காலையில் வச்ச ரிங் டோன்.. “ என்று கேட்க,

மொபைல் செக் செய்தவள்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ப்ரியாவின் "உயிர் ஆதாரமே" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

“கீமா.. .அன்னிக்கு அம்மா சொன்ன மாதிரி மொபைல் கையிலே வச்சுட்டே தூங்கிட்டேன் போலே.. அம்மா தண்ணி ஊத்தினதுலே புரண்டு படுத்து வாய்ஸ் ரெகார்டர் ஆன் பண்ணிட்டேன்.. அப்புறம் தான் பார்த்துட்டு இத save பண்ணி வைச்சேன்..நேத்து ஒருநாள் இங்கே இருக்கும்போதே அவங்கள ரொம்ப மிஸ் பண்ணினேனா.. காலையில் அவங்க குரல் கேட்கலாமேன்னு இத அலாரம் டோன் வச்சுட்டேன்”

“நல்ல வச்ச.. ஊரையே எழுப்பி விட.. போடிங்க..”

இது எல்லாம் அர்ஜுன் காதில் வாங்கியபடியே சென்று விட்டான்.

இப்போ நிஷாவிடம் சுபத்ரா பேசியது கேட்டதும் நினைவிற்கு வந்தது.. ஐயோ பாவம் இங்கே உள்ள பெண்கள்.. என்று எண்ணினான்.

பெண்களுக்கான டோர்மிட்டரி தனி பகுதி.. இன்றைக்கு என்ன கலாட்டா நடக்கும் என தெரிந்து கொள்ள ஆசையாய் இருந்தது... ஆனால் முடியாதே.. எப்படி தெரிந்து கொள்வது .. என்று யோசிக்கலானான்..

அன்றைய இரவு உணவு முடிந்து அனைவரும் பத்து மணிக்கு தூங்கி விட்டனர்.

றுநாள் காலை நாலு மணிக்கு தீடிர் என்று ஒரு குரல் ..

“எழுந்திரு.. சுபா .. எழுந்துரு.. “ என்று அஞ்சலி பட வசனம் கேட்க , ladder டைப் கட்டிலில் சுபாவிற்கு கீழே படுத்து இருந்த நிஷா முழித்தாள். மீண்டும் மீண்டும் அந்த வாய்ஸ் கேட்டது... கொஞ்ச நேரம் திரு திரு என முழித்த நிஷா, பிறகு சத்தம் வந்த இடத்தை கண்டு பிடித்தாள். அது அவள் தலையணைக்கு அடியில் இருந்தது.. தான் வைக்க வில்லையே.. என்று எண்ணமிட,

சுபாவை எழுப்ப சென்றவள், மீண்டும் குரல் கேட்க ...

“அம்மா.. உன் சுப்ரபாதத்தை கேட்க வந்த என்னை ஏமாற்றதே ... தாயே ருக்மணி ..ஸ்டார்ட் மியூசிக்.. “ என, மீண்டும்

“எழுந்திரு சுபா . .எழுந்திரு” என ஆரம்பித்தது.

இரண்டு மூன்று தடவை சொன்னதும், பிறகு

“ஏய்.. குட்டி பிசாசே... போதும் டி.. உங்க அம்மா வாய்ஸ் லே என்னை மிமிக்ரி பண்ண வச்சு, அத ரெகார்ட் வேற பண்ணிட்டு இருக்க.. ஆப் கரோ “ என்ற குரல் கேட்க,

“இல்லடி.. கீமா பிசாசே.. இந்த ட்ரைனிங் ஆர்டர் வந்தது லேர்ந்து அம்மா கொஞ்சம் dull ஆ இருக்காங்களா..? எனக்கு அவங்க குரல் கேட்காமல் ரொம்ப கஷ்டபடுவேன்.. இப்போ நான் இந்த மாதிரி பேச சொல்லி எங்க அம்மா கிட்ட கேட்டு ரெகார்ட் பண்ணினால் எனக்கு தர்ம அடி பார்சல் உண்டு.. அதுதான் டி உன்கிட்ட கேட்டேன்..”

“ஏண்டி.. அப்போ ஊரையே எழுப்பி விடற ரிங் டோன் .. வச்சு இருந்தியே அது என்ன ஆச்சு?”

“அதுவும் இருக்கும்.. ஆனால் அத நான் அங்கே போட்டேன்னு வச்சுக்கோ அந்த campus எழுந்து வந்துடும்... அங்கியே கிணத்துலே தண்ணி இறைக்க விட்டுட்டாங்க.. .இங்கே கிணறே வெட்ட சொல்லிட்டா... என்ன பண்றது.. ? அதுதான்.. இந்த முன்னேசெரிக்கை நடவடிக்கை.. ?

‘ஷப்பா முடியலடா சாமி .. எங்கேருந்து இப்படி எல்லாம் உனக்கு தோணுது .. “

“நாங்கல்லாம் யாரு? தண்ணியிலேயே நீச்சல் அடிச்சவங்க”

“பின்னே எல்லாரும் தரையிலா நீச்சல் அடிக்கிறாங்க.. என்னடி இது பஞ்ச்?”

“இது பஞ்ச்ன்னு யாரு சொன்ன ? fact ன்னு தானே சொன்னேன்”

“தெய்வமே... விட்டுடு.. மீ பாவம்”

“ஐயோ.. “

“என்ன சுரா?”

“நான் ரெகார்டர் ஆப் பண்ணலடி”

அதற்கு பின் கட முடா சத்தம் கேட்க.. அங்கே இருவரும் அடித்து கொண்டிருப்பார்கள் என்று புரிந்தது நிஷாவிற்கு.

அவள் சுபாவை பார்க்க, இப்போதும் உறக்கமே..

அவளை அடித்தவள்.. சுபா வேகமாக எழுந்து கொள்ளவும்,

“ஏண்டி .. கிராதகி.. அலாரம் உனக்கு வைக்க வேண்டியதுதானே.. அத எனக்கு கீழே வச்சுட்டு படுத்து இருக்க.. அதோட மொத்த டயலாக் முடியற வரை எழுந்துக்கவும் இல்லை.. அப்புறம் என்ன வேலைக்கு இந்த அலாரம்.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.