"மதியையே கல்யாணம் பண்ணிக்கோடினு சொன்னா தியாகம் வெங்காயம்னு பினாத்தறா.ஆனா அவளால மதி இல்லாம சந்தோசமா இருக்கா முடியாது. எத்தனை நாளைக்கு அம்மாக்காக அப்பக்காக பிரெண்ட்ஸ்க்காக கூடப்பிறந்தவங்களுக்காகன்னு இவை சிரிச்சு வேஷம் போடா முடியும். இப்போதான் இவ இவளுக்காக சிரிக்கறது.." -பைரவி
இருவரும் சிறிது நேரம் அமைதியாக கழிக்க "சாரி முரளி நீங்க ஏதோ முக்கியமா பேசணும்னு சொன்னிங்களே " என்று பைரவி கேட்க "ஹ்ம்ம் ஆமாம் நானும் இதை பத்தி தான் பேச வந்தேன் " என்றவன் அங்கு திருமணத்தில் நடந்தவைகளை எல்லாம் கூற "ஓஹோ இவ்வளவு நடந்துருக்கா.இப்போ என்ன பண்ணலாம் முரளி " என்று கேட்டாள்.
"எனக்கு உன்னுடைய ஹெல்ப் வேணும். நீயும் என்கூட இருந்தா எப்படியும் மதுவையும் மதியையும் சேர்த்து வெச்சிடலாம். " - முரளி
"கண்டிப்பா முரளி. மதுக்காக என்ன ஹெல்ப் வேணாலும் செய்வேன் " -பைரவி
"நான் சொல்றதை கவனமா கேளு " என்றவன் சில விஷயங்களை விளக்க அதை கூர்ந்து கவனித்தவள் இடையில் தனக்கு தோன்றிய ஐயங்களை கேட்க அவனும்பதில் கூறினான்.
"என்ன சொல்ற...உனக்கு ஓகேயா" -முரளி
"ஒகே தான் மதியுடைய பாமிலியை மதி பார்த்துப்பார். மதுவின் காம்ப்ளெக்ஸாய் நாம பார்த்துப்போம். ஆனா ஒரு விஷயம் தான் இடிக்கிது." -பைரவி
"என்ன" -முரளி
"இப்போ மது கஷ்டப்படறது உண்மை தான். ஆனா மதிக்காக நான் பிரிஞ்சே இருக்கணும். இது மதிக்காக தான் அப்படினு அவ மனசுலையே உருப்போட்டு இப்படியே இருக்கா தன்னை தயார் பண்ணிக்குவா. மதியையும் இனி எக்காரணத்தை கொண்டும் பார்க்க மாட்டா. அவளை எப்படி மறுபடியும் மதியை சந்திக்க வெக்கறது அதுவும் அடிக்கடி.." -பைரவி
"நிச்சசயம் கடவுள் அதற்கும் ஒரு வழியை உண்டாக்கி தருவார்." -என்று முரளி கூற அடுத்து உடனடியாக செய்யவேண்டியவைகளை குறித்து பேச தொடங்கிய முரளியும் பைரவியும் அறியவில்லை அவர்கள் கூறியதை போல மதியும் மதுவும் சந்திக்க அதுவும் தினமும் சந்திப்பதற்கான வழியை இறைவன் உண்டாக்கி தருவான் அதுவும் மிகவும் வலியுடன் கூடிய ஒரு வழியாக இருக்கும் என்று.
முரளியும் பைரவியும் என்ன செய்ய போகிறார்கள். மதி அவன் வீட்டினரிடம் தான் காதலை தெரிய படுத்தினானா... மதியும் மதுவும் மீண்டும் எப்போது எப்படி பட்ட சூழ்நிலையில் சந்திக்க போகிறார்கள்.
இனி பனி உருக தொடங்கும் மதியின் காதலேனும் அனலில் பட்டு .....
தொடரும்
{kunena_discuss:945}