07. வசந்த காலம் - கிருத்திகா
அன்று கல்லூரியின் கடைசி நாள் ... விடுமுறை முடிந்து மீண்டும் கடைசி வருடம் சந்திக்க போகும் சந்தோஷமும் அந்த வருடம் முடிந்தால் அதன் பின் மீண்டும் சந்திப்பது எப்போ என்ற வருத்தமுமாய் கல்லூரி களைகட்டியது ...
அந்த நாள் தான் சிவாவின் வாழ்க்கையை புரட்டிபோடப்போவதை அவள் அறியவில்லை .... மனதில் துளிர்த்த காதலுடன் அவள் தன்னவனுடன் பார்வை பரிமாற்றம் நடத்திக்கொண்டு இருந்தாள் அவ்வப்போது .....
அங்கே விதியும் சுரேஷும் கூட இவர்களை கவனித்துக்கொண்டு இருந்தார்கள் ..
ஆம் சுரேஷ் வெளியே வந்துவிட்டான் மீண்டும் அவன் அப்பாவின் செல்வாக்கால் படிக்கவும் வந்தவன் ... அதைவிட முக்கியமாக தன்னை சிறைக்கு அனுப்பியவர்களை பழிவாங்க கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான் ... அதற்கான சந்தர்ப்பமும் அமைந்தது ..
கடைசி நாளை கொண்டாடுவதற்காக ....ஸ்னாக்ஸ் மற்றும் குளிர்பானங்களை வாங்கிவந்திருந்தார்கள் ..
கொண்டாட்டமிகுதியில் அனைவரும் இருக்க சுரேஷ் அவன் நட்பு வட்டத்துடன் அமர்ந்து எதுவோ பேசிக்கொண்டு இருந்தான் ... அவன் பார்வை சிவாவையும் ரவியையும் தொடர்ந்து கொண்டிருந்தது ..
அவர்களுக்குள் நடக்கும் பார்வை பரிமாற்றமும் அவன் பார்வையில் இவள் கன்னம் செம்மையுறுவதும் காண காண சுரேஷிற்கு கோவம் தலைக்கேறியது தன் சகாவை அழைத்தவன் அவன் காதில் ஏதோ கூறி பின் அவன் கையில் எதையோ ரகசியமாய் திணித்தான் ..
அவன் நோக்கம் இருவரையும் போதையில் இருக்குமாறு மற்றவர்களிடம் காட்டுவதே ... ஆனால் விதி அங்கேயும் சாதி செய்தது .....எதுவும் வேண்டாம் என்றவள் தோழிகளின் வற்புறுத்தலால் சிறிது குளிர்பானம் அருந்தினால் .... அதிலிருந்தே சிறிது தலை சுற்றுவதுபோல் இருந்தவள் மீது ஓடிவந்த தோழி ஜூஸ் கொட்டிவிட .. அதை கழுவ சென்றால்... கூடவே சத்யாவை அழைத்துக்கொண்டு .... பாதி வழியில் அவளுக்கு ( சத்யாவிற்க்கு )போன் வர இவள் தனியாக சென்றால் ....இந்த கொண்டாட்டம் இவர்கள் வகுப்பறையில் நடக்க .... தன்னை சுத்தப்படுத்த இவள் கல்லூரியின் மறு கோடிக்குப்போனால் ...
இவர்கள் கல்லூரியில் கான்டீன் மற்றும் உணவருந்தும் இடம் அதை சுற்றி தோட்டமும் உண்டூ ....அங்குபோய் அலசலாம் என இவள்போக ..சற்றே இருட்டிய நேரத்தில் இவள் எங்கு செல்கிறாள் என ரவியும் தொடர்ந்தான் ... அந்த பழைய சம்பவத்திற்கு பின் தனியே வெளியில் செல்லபயந்துதான் சத்யாவை கூடவர சொன்னாள் .. அவளுக்கும் போன் வந்துவிட ...தன் புடவையில் ஜூஸ் கரை படாதவாறு சீக்கிரம் கழுவ என்று இவள் வேகமாக முன்னோக்கி சென்றால் ...
அவளை தொடர்ந்து வந்தவன் அவளுடன் இணைந்து ... பேசிக்கொண்டே நடந்தான் ..இருவருக்கும் இருந்த காதலை உள்ளே சென்ற போதை வெளிக்கொண்டுவர பேசிக்கொண்டே நடந்து பைப்பை அடைந்தனர் அங்கே தண்ணீர் வரவில்லை ...சரி கான்டீன் உள்ளே சென்று பார்க்கலாம் என உள்ளே சென்றனர் அங்கே யாரும் இல்லை ... கொண்டாட்டத்தினால் ஸ்டுடென்ட்ஸ் யாரும் கான்டீன் வர மாட்டார்கள் என சீக்கிரம் மூடிச்சென்று விட்டார்கள் ..
இவர்களே கதவை திறந்து உள்ளே சென்று பைப்பை திருக சரியில்லாத பைப் சடாரென கழண்டு தண்ணீர் இருவர் மீதும் கொட்டியது ......ஒருவழியாக பைப்பை மூடிய ரவி திரும்பி பார்க்க ஈரமாணதினால் உடுத்தியிருந்த புடவை அவள் உடலை அனைத்திருக்க ... என்றுமில்லா திருநாளாய் மாணவிகள் அனைவரும் புடவை உடுத்தியிருந்ததை காலையிலிருந்து கண்டுகளித்துக்கொண்டிருந்தவர்கள் அதுவும் சிவா மீதான காதலை உணர்ந்தவன் தேனுண்ட வண்டுபோல் அவளை பார்வையாலேயே சுற்றி கொண்டிருந்தான் ....
இந்த நிலையில் அவளை கண்டவுடன் உணர்வு கலவை போட்டிபோட அவளை அணைத்துக்கொண்டான் ....அவளும் அணைப்பை பதிலாய் கொடுக்க அங்கே இனிதே அரங்கேறியது ஓர் நாடகம் ....விதி தன் வேலையை சரியாய் செய்துவிட்டதால் விடை பெற்றது ...
தன்னிலைக்கு வந்தவர்களுக்கு தாங்கள் இருந்த நிலைமை புரிய அதற்க்கு பிறகு என்ன செய்வது என புரியாமல் அமர்ந்து இருந்தனர் .
காமம் இயற்கை உணர்வு என்பதை மறுத்து சமூக அறங்களுக்குள் சேர்க்கப்பட்ட போதே அது வக்கிரமாக மாற தொடங்கிவிட்டது.
எதிர்பாலினருடன் பேசுவதையே மாபெரும் கிளர்ச்சியாக நினைக்கும் ஒரு தலைமுறையே உணர்வு சிக்கலில் நிற்கிறது. இதில் ஒரு படி மேலே போய் பெண்ணிடம் எதையும் பேசுபவன் ஆண்மைமிக்கவனாக, பிற ஆண்கள் பொறாமைபடுவார்கள் என எண்ண தொடங்கியதும், எண்ணியதும் அதை பெருமையாக பீற்ற தொடங்கியதும் அந்த தலைமுறையில் தான். பெண் என்பவள் எப்படியும் அடையும் பொருளாக உருமாற தொடங்கியதும் அங்கே தான்.
சர்வ சாதாரணமாக ஆண் பெண் பழகி இன்னும் சொல்லபோனால் கிணற்றடியில், ஆற்றில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு ஆணும், ஒரு பாவாடையை கட்டி கொண்டு பெண்ணும் ஆளுக்கொரு பக்கம் குளித்த போது இல்லாத வக்கிரம் இன்று பாத்ரூமில் குளிக்கும்போது தலைவிரித்தாடுகிறது.