முகத்தில் மலர்ச்சியுடன் கிளம்பும் தங்கையை காண இவளுக்கும் ஒரே சந்தோசம் ...
ஆபீஸ் போனவள் சங்கியிடம் விஷயத்தை சொல்ல சங்கியோ அட இந்த பூனையும் பால்குடிக்குமான்னு இருந்த பொண்ணுக்கு லவ் ஆஹ் .... இரு இரு இந்த வாரம் வரும் பொது அவளை கவனித்து கொள்கிறேன் என கூற ...
விடுமா ... அவளே வந்து சொல்வா .. ரவி கூட ரொம்ப நல்ல பையன் தான் ... எல்லாம் நல்ல படியா நடந்த சந்தோசம் தான் என்க ..
சங்கியோ அவளுக்கு சரி உனக்கு எப்போ நல்லது நடக்கும் என மனதினுள் குமைந்தபடியே இருந்தாள் ..
மதியமாக சிவாவின் கல்லுரியில் இருந்து போன் வர வேகமாக சங்கீயையும் கூட்டி கொண்டு போனால் ...
அங்கே சிவாவோ பாதி மயங்கிய நிலையில் உளறிய வண்ணம் இருந்தாள் ...
ஒரு ஆட்டோ பிடித்து அவளை ஹாஸ்பிடல் கொண்டு செல்ல ... வழியில் சிலநொடி தன்னிலை பெற்றவள் ரஞ்சி முகம் கண்டவுடன் ...அய்யோ அக்கா ரவி போயிடங்க்க என்னைவிட்டு என அழுதுகொண்டே மீண்டும் மயங்கினாள் ..
டாக்டர் அவளுக்கு ஊசிபோட்டு தூங்கவைக்க .. உடன் வந்த மாணவர்கள் மூலம் தெரிந்து கொண்டது என்ன வேனில் ஒரு வாரம் முன்பு நடந்த விபத்தில் ரவி இறந்து விட்டான் .. அதை கேட்டதில் இருந்து சிவா இப்படித்தான் உள்ளாள் ..
வாடியப்பூவாய் தூங்கும் தங்கையை பார்க்க பார்க்க ரஞ்சிக்கு கண்ணீர் பெருகியது ... தன்னைப்போல் அவளின் காதலும் நிறைவேறாமல் போனது காலத்தின் கொடுமையோ இல்லை யார்விட்ட சாபமோயென இவள் நொந்துகொண்டுஇருக்க ..
அவளை அழைத்த நர்ஸ் டாக்டர் கூப்பிடுறாங்க என கூற ... இவளும் சங்கீயும் சென்றார்கள் ..
அங்கே அவளுக்கு அடுத்த இடி இறங்கியது ...
சிவா கர்பமாக உள்ளாள் .... சிவாவை பற்றி நன்கறிந்த ரஞ்சிக்கும் சங்கிக்கும் புரிந்தது இதன் காரணம் ரவி என ...
தன தங்கையின் அழுகைக்கும் சோர்வுக்கும் .. இந்த மயக்கத்திற்கும் .. இப்படி ஒரு காரணம் இருக்கும் என ரஞ்சி கனவிலும் நினைக்கவில்லை
தொடரும்
{kunena_discuss:997}