"சஞ்சய், நிக்கி, அப்புறம் அந்த வெற்றி தம்பி 3பேரும் ஜாகிங் போயிருக்காங்க... வைஷு ஜெய்யை தூக்கிக்கிட்டு வெளியே போனா.. ஜானு கிச்சன்ல வேலைக்காரங்கக் கிட்ட என்ன டிஃபன் பண்ணனும்னு சொல்லப் போயிருக்கா..??"
"அப்போ சரி ஆன்ட்டி.. நான் போய் ஜானுக்கிட்ட சொல்லி காஃபி வாங்கிட்டு வர்றேன்.." என்று எழுந்திருக்கப் போக...
"கொஞ்சம் உட்காரு நிரு.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..." என்று நிருவை தடுத்து உட்கார வைத்த அம்பிகா சுற்றி யாராவது வருகிறார்களா என்று பார்க்க...
"என்ன ஆன்ட்டி..." என்று கேட்டாள் இவள்.
"நிரு நம்ம வைஷுவை பத்தி என்ன நினைக்கிற..."
எதற்காக கேட்கிறார்கள் என்று யோசனை இருந்தாலும் சாதாரணமாகவே பதில் சொன்னாள்..
"வைஷுக்கு என்ன ஆன்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பற்றி சஞ்சயிடம் பேசியபோது... அப்போது தான் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டிருக்க... இப்போது அம்மா போய் கல்யாணம் பேசுவதாக எதுவும் சொதப்பிடக் கூடாது என்பதால்... நாங்கள் அப்படி பழகவில்லை... நீங்கள் அப்படி எதுவும் போய் நிக்கியிடமோ... நீரஜாவிடமோ கேட்டு விடாதீர்கள் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டான்...