கணவனையோ, பிள்ளையையோ மீறி அவர் இதுவரை எதுவும் செய்யாததால் இந்த கல்யாணப் பேச்சை அவர் எடுக்கவில்லை... அவர்கள் இருவரும் அப்படி பழகவில்லை போலும் என்று மனதை தேற்றிக் கொண்டார்... இருந்தாலும் பிள்ளைக்கு திருமணம் செய்தாக வேண்டுமே... அவன் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்பது தான் அவரின் தற்போதைய கவலை... வைஷுவின் நடவடிக்கையை கண்டு அவளுக்கு சஞ்சயை திருமணம் செய்து கொள்ளும் ஆசை இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டவர்க்கு... இதைப்பற்றி யாரிடம் முதலில் பேசுவது என்ற குழப்பத்தில் நீரஜாவிடமே விஷயத்தை கூறினார்...
இப்போது கூட நீரஜா தனக்கு மருமகளாக வர முடியவில்லையே என்ற குறை அவர் மனதில் இருக்கிறது... சஞ்சய் கல்யாணத்தைப் பற்றி பேசும்போது நிகேதனோ, ஜானவியோ... ஏன் நீரஜாவே கூட சஞ்சய், நீரஜ
...
This story is now available on Chillzee KiMo.
...
்த அந்த பெண்மணியோ... "என்ன தாயீ ஏதோ சும்மா நல்லதா சொல்லனும்னு சொல்றாளேன்னு நினைக்கிறீயா...?? இதை நானா சொல்லல தாயீ.. எங்க முருகைய்யா இந்த நாக்குல நின்னு சொல்றாரு... முருகைய்யாவே எங்களப் போல வேஷம் போட்டு வள்ளிக்கு குறி சொல்லி... அவ கையப் பிடிச்சவரு... அதனால என் வாக்கை சாதாரணமா நினைக்காத தாயீ...