17. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்
திபக்கிற்கு கால் செய்ய நினைத்தவளைத் தடுத்து நிருத்தியது அவளது மனசாட்சி. அருகிலேயே இருந்து பார்த்து பார்த்துக் கவனித்தவனை விட்டு விட்டு ஏன் விஷ்ணுவை நினைத்தாய்? என்பதுதான் அதன் கேள்வி.
ஃப்பிஐ, ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸ் அல்லது தமிழ்நாட்டு போலீஸ் இப்படி யாரிடம் வேண்டுமானாலும் தப்பித்து விடலாம். ஆனால் குற்றம் செய்தவர் தன் மனசாட்சியிடம் இருந்தும் அது கேட்கும் கேள்வியிடம் இருந்தும் தப்பிக்க முடியுமா.
அப்படிதான் மாட்டிக் கொண்டாள் அனு. அவள் மனசாட்சி கேட்டது போல் இன்றை நாள் முழுவதும் அவள் சிந்தனை முழுவதையும் விஷ்ணுவே நிறைந்திருந்தான். கடந்த சில நாட்களாக அவன் பேசிய பேச்சுக்கள், அவன் கூறி காமிடிக்கு ஏற்றவாரு நடந்த சில நிகழ்ச்சிகள் என எல்லாம் அவனை அனுவிற்கு ஞாபகமூட்டியது.
கால் செய்ய போனை எடுத்தவள் அப்படியே அமர்ந்து தன் மனசாட்சியுடன் போராடிக்கொண்டிருந்தாள். “என்ன அனு நான் கேட்ட கேள்விக்கு உன் இடத்தில் பதில் இல்லையா?"”இது மனசாட்சி. “ஏன் இல்லை விஷ்ணு என்னோட க்லோஸ் ஃபெரெண்ட், அதனால தான் நினைத்திருப்பேன்” என்று பட்டும் படாமல் கூறியது அனு. “போடி ரீல் டப்பா. விஷ்ணு உன் நண்பன் என்றால் திவ்யா யாரு உன் விரோதியா?. இன்று முழுவதும் திவ்யாவை எத்தனைத் தடவை நினைத்தாய்?” பதிலடி கொடுத்தது மனசாட்சி.
அப்போதுதான் அனுவிற்கு உரைத்தது இன்று நாள் முழுவதும் திவ்யாவை பற்றி சிந்திக்கவே இல்லை என்று. என்றாலும் தன் மனசாட்சியிடம் தோற்க அவள் தயாராக இல்லை. “கொஞ்ச நாளா விஷ்ணுதான் என் தனிமையில் இருந்து என்னைக் காப்பாற்றி கொண்டிருக்கிறான். ஆனால் இன்னைக்கு அவனால கூட வர முடியல. அதனால அவனைப் பத்தி நினைத்திருப்பேன். அவ்வளவுதான். நீங்க நினைக்கிற மாதிரி காதல் எல்லாம் ஒன்றும் இல்லை” என்றாள் அனு.
அதைக் கூறியவள் தன் மனசாட்சியிடம் நன்றாக மாட்டிக் கொண்டாள். “நீ ஏன் அவனை நினைச்ச நு தானே கேட்டேன். காதல் நு நான் சொல்லவே இல்லையே” என்றது அவள் மனசாட்சி. அமைதியாள் அனு.
சிறிது நேர இடை வேளைக்குப் பின் மனசாட்சி மீண்டும் பேசியது “அன்பான ஒருவன் அதுவும் மணக்கப் போகின்றவன் அருகில் இருக்கும் போது ஒரு பெண் வேறொரு ஆண் ஐ நினைக்கிறாள் என்றாள், இவனைக் காட்டிலும் அவன் அன்புதான் அந்தப் பெண்ணை மிகவும் கவர்ந்து இருக்கிறது. இன்னும் கூட உனக்கு அவகாசம் இருக்கிறது. சிந்தித்து செயல் படு” என்று கூறிவிட்டு இருந்த இடம் தெரியாமல் மனசாட்சி சென்று ஒளிந்து கொண்டது.
“எனக்குக் காதலும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. விஷ்ணு என்னோட ஃபெரெண்ட். அவ்வளவுதான். திபக் கூடத்தான் என் திருமணம்” என்று தான் மனசாட்சிக்குப் பதில் கூறுவது போல் தனக்குத் தானே கூறிக் கொண்டு ஒரு தலையணையை எடுத்த அதில் தன் முகத்தை அழுத்தமாகப் புதைத்து தூங்க முயற்சி செய்தாள் ஆனாலும் தூங்க முடியவில்லை.
அங்கு திபக்கோ வானில் மிதந்து கொண்டிருந்தான். இன்று நாள் முழுவதும் அனு தன்னுடன் இருந்ததை எண்ணிப் பார்த்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். அனுவின் கண்கள், அவளின் குறும்பு பார்வை, காற்றில் அலை பாய்ந்த கூந்தல், அருகில் அமர்ந்த போது அவளின் மணம் என எல்லாம் இன்று அவன் கண்ணியத்தை சோதிக்கத்தான் செய்தது. தனகானவள்தானே, கை பட்டாள் ஒன்றும் நினைத்துக் கொள்ளமாட்டாள், ஒரு முத்தம் கேட்டாள் மறுக்க மாட்டாள் என்று பல முறை யோசித்தான் இன்று. ஆனாலும் இறுதி வரை தன் கண்ணியத்தைக் கடை பிடித்துவிட்டான்(அதற்கு அவன் பட்ட பாடு அவனுக்குத்தானே தெரியும்). அனுவின் நினைவில் மிதந்தவனுக்கு உறக்க பிடிக்கவில்லை.
அங்கு விஷ்ணுவின் நிலைமையும் அதுதான். ஏனோ இன்று ஒரு நாள் அனுவைப் பார்க்காதது, ஒரு யுகம் பார்க்காதது போல் தோன்றியது. அவளின் புகைப்படத்தை பார்த்தவரே உறக்கம் வராமல் படுத்திருந்தான்.
இப்படி மூவரும் உறங்காமல் வெகு நேரம் அல்லாடி பின்னர் உறங்கினர்.
மறுநாள் திங்கள் கிழமை, வழக்கம் போல் அவரவர் தாம் தம் வேளைகளில் பிஸி ஆகிட அனு விஷ்ணுவிடம் தஞ்சம் புகுந்தாள். முந்தைய நாள் இரவு அவள் தன் மனதுடன் நடத்திய போராட்டம் அவ்வப்போது அனுவிற்கு நினைவில் வந்து போனாலும் விஷ்ணுவின் அருகாமையை அவள் விரும்பத்தான் செய்தாள்.
அடுத்த 2 நாட்களும் அப்படிதான் சென்றது அனுவிற்கு. பகல் நேரத்தில் விஷ்ணுவிடம் நேரத்தைச் செலவிட விரும்பிய அதே மனம் இரவு நேரங்களில் அவளைப் போட்டு துளைத்து எடுத்தது. இரவு முழுவதும் சிறிது சிறிதாக தன் மனதை தட்டிக் கொடுத்து திபக் திபக் என்று சொல்லி மனதைத் தேற்றி வைத்திருப்பாள், மறுநாள் விஷ்ணுவைப் பார்த்தவுடனே விஷ்ணு என்று அவள் மனம் அவன் மேல் சாய்ந்துவிடும். இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் திபக்குடன் இருக்கும் போது விஷ்ணுவை நினைத்துக் கொண்டிருந்தவள் ஏனோ விஷ்ணுவுடம் இருக்கும் போது திபக்கை பற்றிய நினைக்க மறந்தாள்.