“ஹெலோ மேடம் அதை நான் கேக்கனும், நீங்கதான் வெளியே போகனும்னு சொன்னீங்க ஞாபகம் இருக்கா” என்றான்.
“ஆமாம் இல்ல, வீட்டல் போர் அடிக்குது என்றுதான் வெளியே போலாமா னு கேட்டேன், ஆனா எங்கேப் போறது நு தெரியலயே. எங்கே போலாம்” என்று தன் தாடையை வில்லன் நடிகர்கள் செய்வது போல் தடவினாள் அனு.
அவள் செய்வதை பார்க்க வேடிக்கையாகவும் அழகாகவும் இருந்தது. உடனே ஏதோ தோன்ற சட்டன காருக்கு வெளியே தலையை நீட்டி வானத்தைப் பார்த்தான். அன்று பெரிதாக வெப்பம் இல்லை, சிறிது மேக மூட்டமாக இருந்தது.
உடனே “சரி அனு நான் வண்டி ஓட்டுறேன். ஒரு இடத்துக்கு போலாம்” என்றான். எங்கே என்பது போல் அவனைப் பார்க்க “அது சஸ்பென்ஸ். அங்க போனவுடன் தெரியும் என் திட்டம் என்ன என்று” என்று வில்லன் போலக் கூறினான் விஷ்ணு.
அதற்கு அனுவோ “விஷ்ணு உனக்கு இந்த வில்லன் வேஷம் எல்லாம் சரியா வராது” என்று கூறி டிரைவர் சீட்டை விஷ்ணுவிற்கு விட்டு கொடுத்துவிட்டு அருகில் இருந்த சீட்டில் அமர்ந்தாள்.
விஷ்ணுவும் காரை ஓட்ட ஆரம்பித்தான். அவனோடு போகிறோம் என்ற மகிழ்ச்சியில் காரில் ஒலித்த பாடல்களை ரசித்தவாரே போய்க் கொண்டிருந்தாள் அனு.
சற்று தூரம் சொல்லச் சொல்ல ஆள் அதிகம் பயணிக்காத சாலை வழியே போகிறோம் என்று உணர்ந்தாள். சிட்டியைச் தாண்டி வெளியே செல்கிறோம் என்று புரிந்தது அவளுக்கு ஆனால் எங்கே என்று தெரியவில்லை.
சிறிது நேரம் சென்றவுடன், ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினான் விஷ்ணு. அவர்களைச் சுற்றிலும் மரமும், எதிரில் பெரிய காம்போண்ட் சுவரும்தான் தெரிந்தது.
சுற்றிலும் பார்த்தவள் மனதில் ஒரு வகை பயம் தொற்றிக் கொள்ள நிமிர்ந்து விஷ்ணுவைப் பார்த்தவள் சற்று நடுங்கித்தான் போனாள்.
தொடரும் . . .
{kunena_discuss:906}