07. சிவன்யா - ஆதித்யா சரண்
அடுத்தடுத்த சில நாட்களில் திவாகரை கவனிக்க தவறவில்லை சிவன்யா.அவனது ஒவ்வொரு நடவடிக்கையும் அவளுக்கு புதிராகி போக,இது திவாகர் தானா என்ற சந்தேகம் அவளுக்குள் எழுந்தது.
அன்று....
எதோ ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான் திவாகர்.
அவன் மனதில் எல்லாம் சீராக போவதாய் ஒரு எண்ணம்!!அப்போது தான் கவனித்தான்...தூரத்தில் சிவன்யா எதையோ கூர்மையாக புரட்டிக் கொண்டிருப்பதை..!
புத்தகத்தை மூடியவன்,அவளருகே சென்றான்.
"அம்மூ!"
"ம்??"
"என்ன பண்ணிட்டு இருக்க?"
"இந்த டைரி!இது உங்க ரூம்ல கிடைத்தது!"-அந்த நாட்குறிப்பை கண்டவன் அதிர்ந்துப் போனான்.
"என்ன டைரி அது?தா!"
"ம்...நான் தான் பார்ப்பேன்!"
"இங்கே தான்னு சொல்றேன்ல!"
"ஏன் நான் படிக்க கூடாதா?"
"அம்மூ விளையாடாதே..!இப்படி தா!"
"முடியாது!"-என்றவள் அதன் முதல் பக்கத்தை புரட்ட,அதில் எழுதப்பட்டிருந்தது,'அசோக் வைத்தியநாதன்!'என்ற பெயர்.
"அசோக்கோட டைரி!இங்கே எப்படி??"-திவாகர் திடுக்கிட்டு போனான்.
"இது எப்படி இங்கே வந்தது?"என்று மேற்கொண்டு புரட்டினாள் அவள்.
"அம்மூ இப்படி தா!"
"................."-அதிலிருந்து கீழே விழுந்தது சிவன்யாவின் சிறு வயது புகைப்படம்!!
"இது என் போட்டோ!இது எப்படி இதுல?"
"................"-அதன் பின்னால் அழகிய கையெழுத்தால் சேர்க்கப்பட்டிருந்தது சிவன்யாவின் பெயருக்கு பின் அசோக் என்ற பெயர்!!!அதை பார்த்தவள் அதிர்ந்துப் போனாள்!!!
திவாகர் அந்த புகைப்படத்தையும்,அந்த நாட்குறிப்பையும் வாங்கிக் கொண்டான்.
"அம்மூ?"
"இவ்வளவு கேவலமானவனா அவன்??அவனை எவ்வளவு நல்லவன்னு நினைத்தேன்!"-அவள் அழுது புலம்பினாள்.
"அம்மூ?"
"எவ்வளவு கீழ்த்தனமான எண்ணத்தை என் மேலே வச்சிருந்தானா!ச்சே...!"
"..............."
"அவனை நல்லவன்னு நம்பினேனே!கடவுளே..!"
"போதும் நிறுத்து!"-ஆக்ரோஷமாக கத்தினான் திவாகர்.அவனது குரலில் உள்ளிருந்து ஓடி வந்தாள் லட்சுமி.
சிவன்யா திடுக்கிட்டு எழ,கண்கள் சிவக்க நிமிர்ந்தவன் அவளது கழுத்தை பலமாக பற்றி இறுக்கினான்.
"ஐயோ!சிவன்யாம்மா!"-பதறிய லட்சுமி திவாகரிடமிருந்து அவளை விடுவிக்க முயல,அவளை ஓங்கி அறைந்தான் அவன்.இருவரும் திடுக்கிட்டு போய் நிற்க,அவன் தொடர்ந்தான்.
"யாரை பற்றி என்ன பேசுற நீ?என்னடி தெரியும் உனக்கு அவனைப் பற்றி?"
"என்னங்க?"
"நான் திவாகர் இல்லை...!"-இருவரும் திடுக்கிட்டு போயினர்.
"கார்த்திக்...!"-என்றான் அவன்.
சிவன்யாவின் உடலெல்லாம் நடுக்கம்!!
"என் நண்பன் உனக்கு கேவலமானவனா??அப்போ உன் அண்ணனுக்கு என்ன பெயர் கொடுப்ப?"
"................"
"எப்பேர்ப்பட்ட துரோகத்தை பண்ணான் தெரியுமா உன் அண்ணன்?அசோக் சாக காரணமே அவன் தான்!"-அவள் அதிர்ந்துப் போனாள்.
"இதோ இந்த வீட்டில தான் அந்த பாவி எங்க மூணு பேரையும் துடிக்க துடிக்க கொன்னான்!"
"..................."
4 வருடங்களுக்கு முன்....
"ஆ...!வந்துடுறேன்!எனக்காக காத்திருக்க வேணாம்!மீட்டிங்கை ஆரம்பிச்சிடுங்க!நான் ஜாயின் பண்ணிக்கிறேன்!"-ஷூவை மாட்டியப்படி கைப்பேசியில் உரையாடி கொண்டிருந்தான் அசோக்.
"ஓ.கே.!"-என்றவன் இணைப்பை துண்டித்தான்.
"அசோக் தம்பி!காபி!"-என்று அவன் முன் காப்பி கோப்பையை நீட்டினார் சுப்பையா.அவன் வீட்டில் பணிபுரிபவர்.
"தேங்க்யூ!"-என்றவன் அதை வாங்கி பருகினான்.
"நல்லா இருக்கா தம்பி?"