(Reading time: 6 - 12 minutes)

"ப்பா டேய்!தெரியாம கேட்டுட்டேன்!இனி கேட்க மாட்டேன்!நீ ரோட்டை பார்த்து வண்டி ஓட்டு!"

"சரிடா!ஆபிஸ்ல பார்க்கலாம்!"

"ம்..."-இணைப்பை துண்டித்தான்.

அன்றிரவு...

மூன்று பால் தம்ளரை எடுத்து வந்து வைத்தார் சுப்பையா.

"சக்கரை போட்டீங்களா?"-மறக்காமல் கேட்டான் அசோக்.

"போட்டேன் தம்பி!"

"அடடா!இது மாதிரி வீட்டில வேலை இருக்குன்னு பொய் சொல்லிட்டு நண்பன் கூட தங்குறது எவ்வளவு சந்தோஷம்!"-என்றப்படி வந்தமர்ந்தான் மனோ.

"எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்டா!சிவன்யா வந்ததும் நம்மளை மறந்துடுவான் பாரு!"

"டேய்!போதும்டா!"

"அதுவும் சரிதான்!இப்போ என்ன பண்ணிட்டு இருக்க?"

"இந்த டிசைன் எப்படி இருக்கு?"

"என்ன இது?"

"வீட்டோட டிசைன்!"

"அதான் இவ்வளவு பெரிய வீடு இருக்கேடா!"

"இருக்கு தான்!"

"அப்பறம் என்ன?ப்ராப்படீஸ் மேலே ஆசை வந்துடுச்சா?"

"பணம் என்னடா பெரிசா?இது மதிக்காக!"

"மதிக்காகவா?"

"ம்...அவளுக்கு இயற்கையான இடம்னா பிடிக்கும்ல!அதான்...அது மாதிரி இடத்துல வீடு கட்டுறேன்!"

"கொடுத்து வைத்தவடா சிவன்யா!சத்தியமா எனக்கு இந்த மனசு வராது!"

"டேய்!என் அம்மா என் கூட இருந்தா அவங்களுக்காக இதெல்லாம் செய்திருக்க மாட்டேனா?அவங்க இல்லை...அவங்க ஸ்தானத்தை யார் பூர்த்தி செய்றாங்களோ அவங்களுக்கு செய்றேன்!"

"இப்போ தெரியுதா நான் ஏன் சிவன்யா ரொம்ப லக்கின்னு சொன்னேன்னு?"

"சரி...!எனக்கு தூக்கம் வருது!"

"இவனுக்கு கொழுப்பை பாரேன்!சிவனேன்னு தூங்க போனவனை இழுத்து வாடா கதை பேசலாம்னு சொல்லி இங்கே உட்கார வைத்து,அவர் லவ் ஸ்டோரி எல்லாம் சொல்லிட்டு இப்போ தூக்கம் வருதாமே!"

"விடு மச்சான்...!குட் நைட்!"

"ம்..ம்..!போ!போ!"-இனி எல்லாம் நன்மைக்கே என்ற பொய்யான நம்பிக்கையில் உறங்க சென்றான் அசோக்.

தொடரும்

Episode 06

Episode 08

{kunena_discuss:991}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.