03.இது பேய்க் காதல் - புவனேஸ்வரி
நிகழ்கின்ற மாயம் அவனை சுற்றி
அவனின் நினைவுகளோ அவளை பற்றி
மிதந்து வந்தது குரலொன்று காற்றில்
அதை கேட்டவனின் சிந்தையோ பின்னோக்கி அந்நாளில்!
"இந்த உலகத்தில் உனை அதிகம் நேசிக்கும்
பெண்ணின் பெயரென்ன?” -அடிக்கடி
விடை அறிந்தும் அவள் கேட்பாள்
கேள்வி அறிந்தும் அவன் மௌனம் சாதிப்பான்
இருவரும் ஆடிய கண்ணாமூச்சி
அதில் நொந்தவளின் உள்ளம் உடைந்ததற்கு
நிலவே நீ சாட்சி!
உள்ளம் உடைந்திடுவாள்
உவகை துறந்திடுவாள்
இமைகள் படபடக்க
இதழ்கள் துடிதுடிக்க
கோபமாய் மொழிவாள்
"போடா.. நீ அவ பேரை சொல்லாமல்
அவள் காதல் உன்னை சேராது"!
அவளின் செல்ல கோபம்
இன்று அவனுக்கு வாழ்நாள் சாபம் !
காற்றை ஊடுருவி
பாய்ந்தது தேனருவி
மீண்டும் கேட்டாள் அதே கேள்வி
எதிரொலித்தது அறைமுழுதும் அசரீரி!
இம்முறை அவன் உடைந்தான்
முற்றிலும் மௌனம் கலைந்தான்
உரைத்தே விட்டான்
" இந்த உலகத்தில் என்னை
அதிகம் நேசிக்கும் என்னவள்
தூயவிழி... தூயவிழி.. தூயவிழி"
விலகியது காரிருள்
படர்ந்தது பேரொளி
ஒளியில் ஓவியமாய்
தோன்றினள் தெய்வீகனின் தூயவிழி !
தொடரும்
{kunena_discuss:1072}