05.இது பேய்க் காதல் - புவனேஸ்வரி
அழகாய் மிளிரும் ஒவ்வொரு தினம்
அவன் விழிகளுக்குள் அவளின் வதனம்!
அணிவிக்கவில்லை மாங்கல்யம்
எனினும் அழகாய் தொடங்கியது பந்தம் !
மணமுடிக்க விதியில்லை எனினும்
மனதில் முடிந்து கொண்டனர் உறவை!
நீராய் மாறி அவன் துயில் எழுப்பினாள்
ஆகாயமாய் மாறி அவனுக்கு வெளிச்சம் தந்தாள்
நிலமாய் மாறி அவனைத் தாங்கிக் கொண்டாள்
தீயாய் மாறி அவனின் தனிமை எரித்தாள்
காற்றாய் மாறி அவனை உறங்க வைத்தாள் !
பற்றுதல் எல்லாம் காதலினில் தான்
பற்றிக் கொண்டனர் காற்றினில் தான்
வேதனை இல்லாத வேளையில்
விதிக்கு வந்ததே புது வேலை!
“ என்னை எவ்வளவு பிடிக்கும் ?”
அனுதினம் கேட்டிடும் கேள்வியதை
மீண்டும் கேட்டாள் உயிர்நீத்த பேதை !
“ வான்னு சொல்லு டீ.. இப்போவே வரேன்”
உடலுடன் ஜனித்த உலகத்தை
மரணித்து நீங்கிடவும் துணிந்திருந்தான்!
அடுத்து அவள் கேட்பதற்குள்
அலைப்பேசிக்கு அவசரமாம்!
சிணுங்கி கைப்பேசியின் அழைப்பு
சொந்த ஊருக்கு அவனின் வரவழைப்பு!
திருவிழா வைபவத்தில் கலந்துகொள்ள
தெய்வீகனின் வீட்டிலிருந்து அழைப்பு வர
“வருகிறேன்” என்று சொல்லி இருந்தான்
வரப்போகும் விபரீதம் அறியாமல்!
அவனைத் தொற்றிய உற்சாகம்
அவளுக்கும் பெருகியது சந்தோஷம்
“நீயும் வருவதானே?” கொஞ்சலாய் கேட்க
“வரமால் போவேனா?” பெண்ணவள் கேட்க
கண்களில் கவி அரங்கேறிட
மீண்டும் காதல் மேடையில் கச்சேரித்தான்!
கூட்டம் நிறைந்த பேருந்தில்,
அவன் விழிகளுக்கு மட்டும் அவள் அருகில்!
வானின் மதியும் எட்டிப் பார்க்க
தூயவிழி தஞ்சமடைந்தாள் அவன் மடியில்!
பொழுது புலர்ந்தது,
அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது!
“ உன் ஊரு அழகா இருக்குடா.. உன்னை மாதிரி”
மையல் கொண்ட விழிகளிடன்
மைவிழியாள் மொழிந்திட
காலைமேகத்துடன் சிவந்தது தலைவனின் வதனம்!
“ சைட் அடிக்காமல் வீட்டுக்கு வா”
சத்தமாய் அவன் உரைத்திருக்க,
சிலரது பார்வை அவன் மீது நிலைத்திருக்க
எச்சரிக்கும் குரலில்
உச்சரித்தாள் உண்மையை!
“ மக்கு காதலா,
மாட்டிக் கொள்ளாதேடா..
நீ சத்தமாய் பேசினால் உன்னை பைத்தியம்னு சொல்லுவாங்க”
சிரிப்புடன் அவள் உரைக்க
வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டான்!
எத்தனை தினம் கடப்பதாம் அவளுடன் பேசாமல்?
முடியுமா அவனால் மாட்டிக் கொள்ளாமல்?
உள்ளத்தில் புது பயம்..
கிடைக்குமா அபயம்?
அடுத்த வாரம் சொல்றேன்
தொடரும்
{kunena_discuss:1072}