“ம்ம்ம்.... இப்போதைக்கு எல்லாம் சரியா தான் இருக்கு... ஆனால் கடனை அடைக்க தான்....” என்று தயக்கத்துடன் பேச்சை நிறுத்தினாள் சரண்யா.
“தெரியும் அண்ணி... க்ளேயிம் செய்திருக்க பணம் வந்தா உங்களுக்கு உதவியா இருக்கும். நானும் அப்பா கிட்ட எவ்வளவோ சொல்லி பார்க்கிறேன்.... அம்மா கூட சைன் போட ரெடியா தான் இருக்காங்க, அப்பா தான் விட மாட்டேங்குறார்.”
“ஜி.எஸ் அவர் ஆரம்பித்த கம்பெனி என்பதற்காக தான் கேட்கிறேன் சுரேஷ்.... இல்லைனா எனக்கு அந்த பணம் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு வேற வேலைக்கு போயிருப்பேன்.... அவர் அவ்வளவு ஆவலா ஆரம்பித்து எடுத்து நடத்தினது, எப்படியாவது போகட்டும்ன்னு விட்டுட மனசு வர மாட்டேங்குது....”
கோ ... டம் முழு முகவரியை சொல்லி, வழியும் சொன்னான்...
ஐந்து நிமிடத்தில் அவன் சொன்ன இடத்திற்கு வந்து நின்றது டாக்சி! அது ஒரு பெரிய பங்களா. வெளியே அரண்மனை வாயிலை போல ஒரு பெரிய கேட். அதன் அருகே ஒரு செக்யூரிட்டி வேறு!
டாக்சியை சந்தேகத்துடன் பார்த்த செக்யூரிட்டி, அசையாமல் நின்றான்.
This story is now available on Chillzee KiMo.
...