நேரம் காலை 9:30 போலிஸின் மறைமுக உதவியோடு அந்த ஹோட்டலினுள் நுழைந்துவிட்டனர்..மீட்டிங் ரூமினுள் தாங்கள் கொண்டு வந்திருந்த கேமராவையும் மைக்கையும் சந்தேகம் வராதவாறு பொருத்திவிட்டு அதனை ஒட்டினாற் போல் இருந்த அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டனர்..முதலில் அதர்வாவின் அடியாட்கள் சிலர் உள் நுழைந்து அந்த இடத்தை முழுவதுமாக சோதனையிட்டு யாருக்கோ கால் செய்து இன்பார்ம் பண்ண அடுத்த அரைமணி நேரத்தில் அதர்வா,விநாயக்,DCP மூவரும் உள்ளே வந்தனர்..அனைத்தையுமே ராமும் பரணியும் தங்கள் முன் இருந்த லேப்டிப்பில் பார்த்துக் கொண்டிருந்தனர்..
காலை 10:30 நான்கைந்து பாரினர்ஸ் அந்த மீட்டிங் ரூமை அடைந்தனர்..அடுத்த சில நிமிங்களில் அதர்வாவின் வலக்கை இடக்கையான இருவரை தவிர மற்ற அடியாட்கள் அனைவரும் வெளியே சென்றுவிட..பரணி மெதுவாய் வெளியே எட்டிபார்த்தான் அனைவருமே அங்கிருந்து கிளம்பிவிட்டதை உறுதிபடுத்திக் கொண்டு ACPக்கும் விஷயத்தை கூறினான்..
காலை 11 மகியின் முகத்தில் தெளிவேயில்லை..சாக்ட்சியோ அதற்குமேல் இருந்தாள்..மகியை பார்த்தவளுக்கு பாவமாய் தோன்ற,அண்ணி நீங்க எதுவும் கவலபடாதீங்க அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது..அதான் போலீஸும் அங்க போய்ருகாங்கல அவங்களால ததப்பிக்கவே முடியாது..என ஆறுதல் கூறாவதாய் அவள் போக்கில் அனைத்தையும் உளறி கொட்ட,அங்கு மகியோ உச்சகட்ட பயத்திலிருந்தாள்..என்ன சாக்ட்சி சொல்ற??ராம் எங்க போய்ருக்காரு??போலீஸ் அது இதுநு சொல்ற எனக்கு ரொம்ப பயமாயிருக்கு..
அதன் பிறகுதான் தன் தவறை உணர்ந்தவள் ஏதேதோ கூறி சமாளிக்க முயற்சி செய்தும் ஒரு பலனுமில்லாமல் போக,அனைத்தையும் கூறிவிட்டாள்..கேட்டுக் கொண்டிருந்தவளோ கற்சிலையென நிற்க சாக்ட்சி அவளை பிடித்து உலுக்கினாள்..
சாக்ட்சி வா டா நாம அங்க போலாம்..எனக்கு ரொம்ப பயமாயிருக்கு..
அண்ணி நாம எப்படி அங்க போறது அண்ணா அப்பறம் என்ன தான் திட்டுவாரு..நமக்கு அங்க போறது ஸ்சேவ் இல்ல அண்ணி புரிஞ்சுக்கோங்க..
இல்ல என்னால முடியாது நீ வரலனாலும் நா போகதான் போறேன் என மகி வாசலை நோக்கி செல்ல என்ன செய்வதென்று தெரியாமல் அவளை பின் தொடர்ந்தாள் சாக்ட்சி..பரணிக்கும் ராமிற்கும் மாறி மாறி அழைக்க அழைப்பு ஏற்கபடவில்லை..
அதே நேரம் அங்கு ஹோட்டலில்,பொதுவான கலந்துரையாடலுக்கு பின் அவர்களின் கண்டுபிடிப்பான அந்த மருந்தை பற்றிய டிஸ்கஷனை ஆரம்பித்தனர்..ராமும் பரணியும் அதை உன்னிப்பாய் கவனித்திருக்க சாக்ட்சியின் அழைப்பு இருவருக்குமே கருத்தில் பதியவில்லை..அங்கிருந்தவர்களின் யார் அலைபேசியோ திடீரென ஒலிக்க மைக்கின் அருகிலிருந்ததால் ஒருவித அதிர்வொலியை வெளிப்படுத்த ஒரு நிமிடம் யோசித்த அதர்வாவிற்கு சட்டென விஷயம் புரிந்து அங்கிருந்த அனைத்தையும் உருட்டி உள்ளிருந்த மைக்கை எடுத்துவிட்டான்..அவன் முகம் கோபத்தில் சிவந்தது..ராமும் பரணியும் தலையில் கை வைத்துவிட்டனர்..
அங்கிருந்த அனைவருமே முகத்தில் அதிர்ச்சியை பிரதிபலிக்க அதர்வா தன் ஆட்களை அழைத்து வேறு எதாவது கிடைக்கிறதா என்று கண்டெடுக்க சொல்ல சில நிமிட போராட்டத்திற்கு பின் அந்த கேமராவும் அவர்களிடம் சிக்கிவிட்டது..அதர்வா அவர்களுக்கு அடுத்த உத்தரவை பிரப்பிக்க அனைத்து அறைகளையும் சோதனையிட கிளம்பினர் அந்த அடியாட்கள்..ராமும் பரணியும் கிடைத்தவரை அனைத்தையும் பென்டிரைவ்வில் காப்பி பண்ணி எடுத்துக்கொண்டு வெளியே செல்ல எத்தனிக்க அவர்கள் அறை கதவு தட்டப்படும் ஓசை கேட்டது..என்ன செய்வதென சுதாரிப்பதற்குள் உள்ளே வந்திருந்தான் ஒருவன்..அவன் கையில் மிக பெரிய சாவி கொத்து அனைத்து அறைகளின் எண்ணை தாங்கியிருந்தது..ராம் பரணி இருவருமே துப்பாக்கி முனையில் அதர்வாவின் முன் நிறுத்தப்பட்டனர்…
அங்கிருந்த அனைவரும் குழப்பமாய் பார்க்க அதர்வாவுக்கும் விநாயக்கிற்கும் உச்சகட்ட அதிர்ச்சி..அடிக்குரலில் சீறினான் அதர்வா..எவ்வளவு தைரியமிருந்தா இந்த வேலைய பாத்திருப்பீங்க அந்த அளவு நா ஏமாந்துருவேன்னு நினைச்சீங்களா??
ராமும் பரணியும் தங்களுக்குள் சிரிக்க அவன் கோபம் இன்னும் அதிகமானது..போனா போகுதுநு விட்டா என்னடா சிரிப்பு என ராமின் முன் கழுத்தில் பிஸ்டலால் அழுத்த பரணி அதை காலால் எட்டி உதைத்தான்..துப்பாக்கி எங்கோ சென்று விழ..பரணியை பிடித்திருந்தவன் அவனை சரமாரியாய் தாக்க அங்கு அதர்வாவோ ராமை கொன்றே தீருவேன் என அடியாளின் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்த நேரம் DCP யின் குரல் கம்பீரமாய் ஒலித்தது..ஸ்டாப் இட் அதர்வா!!!!!!
அவனோ சார் நீங்க சும்மாயிருங்க இன்னைக்கு இவன் கதைய முடிக்காமல் விட மாட்டேன் என வெறிபிடித்தவனாய் கர்ஜிக்க..
அதர்வா ஐ அம் வார்னிங் யு..ஒரு அடி எடுத்து வச்சாலும் விநாயக்க நீ உயிரோட பாக்க முடியாது என தன் அருகிலிருந்த விநாயக் கையை பின்புறம் வளைத்து பிடித்தார்..
அதர்வாவுக்கோ ஒரு நிமிடம் தலையே சுற்றியது..சார் நீங்களா இப்படி???