(Reading time: 9 - 18 minutes)

தனை வாங்க மறுத்த கதிர் தனக்கு ஒரு வேலை வாங்கித்தரச் சொன்னான்.

அவனை மஹிந்தன் தன் வீட்டிற்கு கூடிச்சென்று தன் தாத்தாவிடம் அவனை காட்டி கதிர் தனக்கு உதவியதை கூறி வேலை கொடுக்கச் சொன்னான்.

தன் பேரன் கூட்டிவந்த காரணத்தால் தங்கள் மோட்டார் பேக்டரியில் அவனுக்கு வேலை போட்டு கொடுத்தார்

அவன் திரும்பி போகும்போது எதிரில் வந்த மஹிந்தனின் பெற்றவர்கள் கதிரின் தோற்றம் கண்டு அவனை கடிந்து பேசி விரட்டினர். பக்கத்தில் இருந்த மஹிந்தன், கதிருக்காக அவனது பெற்றவர்களை எதிர்த்து பேசினான். அன்றுமுதல் கதிரின் அனைத்தும் ஆகிப்போனான் மஹிந்தன்.

கதிருக்கு, குடும்பத்தையும், பெண்களையும் பற்றி எதுவும் தெரியாது. மஹிந்தன் வருந்துவதை தாளமுடியாமல் கதிர் மஹிந் நான் உனக்கு ஒரு ஆலோசனை கூறவா என்று கேட்டான்

‘ம்’ சொல் என்ற மஹிந்தனிடம் அன்று கவிழையா என்ற பெண்ணை பற்றிய விபரம் விசாரிக்க சொன்னாய்தானே நான் விசாரித்தவரை அவள் ரொம்பவும் ஒழுக்கமான பெண் .மேலும் ஒரு ஆண் நண்பன்கூட அவளுக்கு இல்லை. ஆறு மணிக்குமேல் தன் குடும்பத்தாரை தவிர மற்றவர்களுடன் அவளை வெளியில் பார்க்கமுடியாது.

நீ ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணிக்கொள். அந்த கவிழையாவை உன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள். உனக்கு மட்டுமாக உன்னுடைய வாரிசைஅவளிடமிருந்து மட்டும் பெற்றுக்கொள் என கூறினான். கதிர் அறியவில்லை இது எவ்வளவு பெரிய பாவம் என்று இத்செயலால் எத்தனை பேர் வாழ்க்கை காயப்பட போகிறது என்பதையும்.

கவிழையாப் பெயரை கேட்டதுமே மஹிந்தனுக்கு ஆர்வம் வந்துவிட்டது மேலும் அவளைப்பற்றி கதிர் கூறியதும் கவிழையா அவனுடையவள் என்று முடிவெடுத்துவிட்டான் மஹிந்தன்.

Episode # 02

Episode # 04

தொடரும்

{kunena_discuss:1081}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.