“உங்கப்பாவும் வரட்டுமே.” அன்பரசி தயக்கமுடன் சொன்னாள்.
“இல்லை! அப்பாவால் வரமுடியாதாம். ஏதோ முக்கியமான வேலையில் இருக்காராம். அப்பா நம்மளை உலகச்சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்வாராம்.”
கண்கள் மினுமினுக்க கூறினான்.
அவனுக்கு வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை எல்லாம் கண்டு ரசிக்க வேண்டும் என்று ஆசை.
அதுவும் பொன்னியின் செல்வன் படித்த பிறகு தஞ்சையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகம்.
அவனது ஆசை புரிந்து தஞ்சைக்கு கிளம்பினர்.
ஒரு டிராவல்ஸ் வண்டியை ஏற்பாடு செய்துகொண்டு குடும்பத்துடன் சென்றனர்.
அவன் கதையில் படித்த இடங்கள் எல்லாம் எது என்று வணங்காமுடியை துளைத்தெடுத்துவிட்டான்.
தஞ்சை பெரிய கோவில் அரண்மனை சரஸ்வதி மஹால்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அவர் மகளைப் பார்க்க அவள் கண்ணீரோடு ஆமோதிப்பாய் தலையாட்டினாள்.
அதுதானே உண்மையும் கூட.
அவர் தனது மனைவியை நன்றியுடன் நோக்கினார்.
அவள்தானே எல்லாவற்றிற்கும் காரணம்.
“எல்லாரும் வெளியவே நின்னுக்கிட்டிருந்தா எப்படி? வாங்க உள்ளே போகலாம்.”
உள்ளே நுழைந்தனர்.