15. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
ரூபன் அதிர்ந்து நின்றது சில நொடிகள் தான் உடனே சுதாரித்தவனாக “தான் சில நிமிடங்களில் மறுபடி போன் செய்வதாக” அமெரிக்க ஆக்ஸெண்டில் தனிவாய் உரைத்து ஃபோன் காலை துண்டித்தவன் அனிக்காவிற்க்கு எதிராக அமர்ந்து சிஸ்டத்தை தன் பக்கமாய் திருப்பி தான் தேடி வந்த விபரத்தை நிதானமாக தேடத் துவங்கினான்.
பார்த்துக் கொண்டிருந்த அனிக்காவிற்க்கு “ஐயையோ நாம் என்னக் காரியம் செய்தோம்” என்னும் பரிதவிப்பு உண்டாயிற்று. அவன் ப்ளூடூத்தில் பேசிக் கொண்டே முக்கியமான விஷயமாக கேபினுக்குள்ளே வந்திருக்க வேண்டும். நான் ஒன்றையுமே புரிந்துக் கொள்ளாதவளாக , மடத்தனமாக பேசி விட்டேனே? ஒருவேளை அவன் நான் கேட்டதை கவனித்து இருக்க மாட்டான் , நல்லதாகப் போயிற்று என்று எண்ணும் முன்னர்,
“என்னாச்சு அனி, ஷைனி உன்னை எதுவும் சொல்லிட்டாளோ? உனக்கு அவ மேல ஏன் கோபம்? என்றான் ரூபன் சிஸ்டத்தை விட்டு கண்ணை அகற்றாமலேயே….
அடச் சே……. அத்தான் காதில நான் சொன்னது சரியா விழுந்திட்டு போலயே? இப்ப நான் என்ன பதிலச் சொல்லுறது? என் ஸ்வீட்ட முழுசும் விழுங்கி வச்சுட்டான்னா சொல்ல முடியும்?
ஆடு திருடுன கள்ளன் கூட அப்படி முழிச்சிருக்க மாட்டான் அப்படி தன்னுடைய முட்டை விழிகளை வைத்து முழித்துக் கொண்டிருந்தாள் அனிக்கா. பதில் வராததும் அவளைப் பார்த்த ரூபனுக்கு அவளைப் பார்த்து சிரிப்பாக இருந்தது. என்ன இப்படி முழிக்குறா? என்றவன் கண்ணில் டேபிளில் இருந்த பார்சல் கண்ணில் பட்டது.
என்னதிது?
ப்யூன் கொண்டு வந்து வச்சுட்டு போனாங்க அத்தான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
கொண்டு வச்சா எடுத்துப் பார்க்க மாட்டியா?
உங்களுக்கு எதுவும் வச்சிருப்பாங்கன்னு நான் பார்க்கல…….
இனிமே யார் வந்து எனக்குன்னு எதுவும் வச்சிட்டு போனாலும் கூட நீ பார்க்கிற……… சரியா? என்றவன் குரலில் கண்டிப்பு இல்லாமல் கனிவே இருந்தது.
ஆனா இது உனக்காக தான் வாங்க சொல்லி விட்டேன். ப்யூன் சொல்லலியா?”
ம்ஹீம்…. என்றவளாக தலையசைக்க.,
பையைத் திறந்து உள்ளிருந்த பாக்ஸை எடுத்தான். அதிலிருந்தன குலோப் ஜாமூன்கள்.
“சாப்பிடு”… என்று அவள் முன்னே வைத்து விட்டு மறுபடியும் தன் வேலையில் மூழ்கினான்.
வந்த நேரத்திலிருந்து ஒரு இடத்தில் அமைதியாக தொடர்ந்தார்ப் போல 10 நிமிடம் கூட அவன் நிற்க அவள் பார்க்கவில்லை. இதில் எப்போது அவன் அவளுக்காக குலோப் ஜாமூன் ஆர்டர் செய்தான் என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அமைதியாக ஒன்றை எடுத்து அவள் உண்பதற்க்குள் அவன் மறுபடியும் ஃபோன் கால் செய்து தான் முன்பு பேசிக் கொண்டிருந்த நபருக்கு விபரம் தெரிவித்து பேச ஆரம்பித்து விட்டான்.
பேசி முடிந்ததும் சிஸ்டத்தை அவளுக்கு முன்பாக முன்போலவே திருப்பி வைத்தவன்.
“ஹாங்க்….ம்ம்ம்…அப்புறம்…என்னாச்சுனு நீ சொல்லவே இல்லைல………” என்று ஆரம்பித்த இடத்திலேயே மறுபடி நின்றான்.
“சொல்லாவிட்டால் விடமாட்டான் போலவே??” என எண்ணியவள் தன்னுடைய எரிச்சலின் காரணத்தை மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தாள்.
இல்லத்தான் இந்த அக்கா முன்னே ஒரு நாள் உங்கள ரொம்ப மட்டமா பேசிட்டு இருந்தாங்க ……..இப்போ என்னடான்னா? உங்க கிட்ட ரொம்ப க்ளோஸா, பாசமா பேசறாங்க அப்படின்னா ஆக்டிங்க் தான செய்றாங்கன்னு தோணிச்சு……அதான் சொன்னேன்” என்று தன்னுடைய மனதில் எழுந்த உரிமை உணர்வை தன்னையுமறியாமல் மறைத்து பேசினாள்.
அதுவுமில்லாம அத்தான் நம்ம வீட்டுலயே நான் தான உங்கள அத்தான்னு கூப்பிடுவேன். இப்ப என்ன அவங்க உங்களை அத்தான்னு கூப்பிடறாங்க அதான் எனக்கு பிடிக்கலை. என்று முகச் சுளிப்போடு கூறியவளைப் பார்த்து ரூபனின் மனம் இறகாய் மாற, காதல் வானில் இலகுவாய் பறந்தது.
என்னிடம் உனக்கு உரிமையுணர்வு தோன்றுகிறதா பெண்ணே? என்று மனதிற்க்குள் எழுந்த மகிழ்ச்சியை மறைத்தவனாய் ஷைனி தன்னைப் பற்றி என்னக் கூறினாள் என்று கேட்டுக் கொண்டான்.
“ஓ……வெனச் சற்று சிந்தனையில் ஆழ்ந்தவன்……. நீ ஏன் அதையெல்லாம் மனசுக்குள்ளப் போட்டுக்கிற அனிம்மா…….எப்பவுமே நம்மை குறைச்சு சொல்றவங்க இருக்கத்தான் செய்வாங்க. அப்படியும் ஷைனி பொய் எதுவும் சொல்லலியே அப்போ நான் குறைவான சம்பளத்துல தான வேலைப் பார்த்துட்டு இருந்தேன். நம்ம சொசைட்டில மனுஷனுக்கு மதிப்பு கொடுக்கிறாங்களோ இல்லையோ பணத்துக்கு தான் மதிப்பு கொடுப்பாங்க. அவங்க ஆக்டிங்க் செஞ்சா செஞ்சுட்டுப் போகட்டும், நம்ம ஆஃபீஸிக்கு வந்த கெஸ்ட்-டை நாம நல்ல உபசரிக்கணும். அதை நாம சரியா செஞ்சாச்சு . நாம என்ன அவங்களை அடிக்கடி பார்க்கப் போறோமா? இல்லை அவங்க தான் இங்க அடிக்கடி வரப் போறாங்களா? என்றுக் கூறினான் ஷைனியின் எண்ணங்கள் அறியாதவனாய்.
……………………..