(Reading time: 8 - 15 minutes)

"ன்ன?"

"அந்தக் குழந்தை இருக்கட்டும்!இந்தக் குழந்தையை கொஞ்சம் கவனி!"

"ஐயோ விடுங்க!அங்கே உங்க பையன் அழுதுட்டு இருக்கான்!போங்க!"-என்று அவனை தள்ளிவிட்டு தன் மகனை காண ஓடினாள் அவள்.

"ஏ..மெதுவா போ!"-அவனது குரலை சட்டை செய்யாமல் விரைந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

வள் சென்ற சில நொடிகளுக்கு எல்லாம் லட்சுமி அங்கே வந்தாள்.

"வாம்மா!என்ன விஷயம்?"

"உங்கக்கிட்ட ஒண்ணு கேட்கணும்!"

"கேளு!"

"அன்னிக்கு நிஜமா நடந்தது என்ன?"

"என்னிக்கு?"

"2 வருஷத்துக்கு முன்னாடி!"

"அதான்..."

"எனக்கு தெரியும் மஹா மிருத்யுன்ஜெய மந்திரத்தை எதிர்க்கிற தைரியம் எமனுக்கே இல்லாத போது ஒரு ஆன்மாவுக்கு இருக்க வாய்ப்பில்லை.அன்னிக்கு என்ன நடந்தது!"-சில நொடிகள் அமைதிக்காத்தவன் பின் மெல்ல புன்னகைத்தான்.

"நான் அசோக் மாதிரி 100% நல்லவன் இல்லை.நான் துரோகத்துக்கு பழி தீர்க்கிற ஆளு! அந்த துரோகம் எனக்கானாலும் சரி!யாருக்கானாலும் சரி!!அப்படி இருக்கும் போது,அந்த அசோக் என் சிவன்யாவை தாய் ஸ்தானத்துல வைத்து பார்த்திருக்கான்!100% உண்மையான காதல்!அந்தக் காதல் என்னை உலுக்கி பார்த்துடுச்சு!அது மட்டுமில்லாம என் சிவன்யாவை கொல்ல பார்த்தவன் அந்த மகேஷ்!தப்பு பண்ணவன் தண்டனையை அனுபவிச்சு தான் ஆகணும்!அதான்!"

".............."

"அசோக் ஆசை இந்த ஜென்மத்துல நிறைவேறாது! அதான் அதில் ஒரு பாகத்தை மட்டும் நிறைவேற்ற என் பையனுக்கு அவன் பெயரை வைத்தேன்.அவன் ஆசைப்பட்ட அன்பு இந்த வழியிலயாவது அவனுக்கு கிடைக்கட்டும்!சிவன்யாவுக்கு பிரச்சனை வர விட மாட்டேன்னு சத்தியம் பண்ணேன்.அதை நிறைவேற்ற நான் எல்லைக்கும் போவேன்!"-என்றவனின் குரலில் நிரந்தரமான உறுதி தெரிந்தது!!

காதலினால் உருவான உண்மையான உறுதி!!

வணக்கம்!!

முற்றும்

Episode 08

{kunena_discuss:991}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.