"அதே தான்!உன்னை முதல்முறையா பார்க்கும் போது,பார்த்த உடனே,ஒருவித உரிமையை உணர்ந்தேன்.தேங்க் காட்!அன்னிக்கு உன் வண்டி தான் எனக்கு அந்த உரிமையை கொடுத்தது!அதே உரிமை நீயும் என்கிட்ட எடுத்துப்பன்னு தோணுச்சு!நான் தப்பு பண்ணா நீ சரி செய்வேன்னு நினைத்தேன்!உன்னை காதலிக்க தோணுச்சு!ஆயுசு முழுக்க!அதான்..."
"இத்தனை நாள் எந்த பொண்ணுக்கிட்டயும் சிக்காம என் மனசை காப்பாற்றி வந்தேன்.நீ இன்னிக்கு,அதை அதிகாரம் பண்ணிட்டு இருக்க?இது உனக்கே நியாயமா?"-அவன் கூற கூற அவள் ஸ்தம்பித்து போய் அமர்ந்திருந்தாள்.
"பொறுமையா ஓ.கே.சொல்லு!பிறந்ததுல இருந்து இப்போ வரை உனக்காக காத்துக்கிட்டு இருந்தவன்,கொஞ்ச நாள் காத்துட்டு இருக்க மாட்டேனா?பட்,கொஞ்சம் சீக்கிரம் சொல்லிடு!நான் உன் கூட என் வாழ்க்கையை ரொம்ப சீக்கிரமா தொடங்கணும்னு ஆசைப்படுறேன்!"-சில நிமிடங்கள் மௌனம் காத்தவள்,ஏதும் பேசாமல் அங்கிருந்து எழுந்து கிளம்பினாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
அன்றிரவு...
என்றுமே இல்லாத அமைதியான உறக்கத்தை தனதாக்கி இருந்தான் ருத்ரா.
அதனை பொறுக்காத அவனது கைப்பேசி அலறியது.
"ப்ச்.."-சிணுங்கலோடு அதனை தன் செவிகளில் வைத்தான்.
"ருத்ரா!"
"என் தூக்கத்தை கெடுத்துட்டு உனக்கென்ன தூக்க வேண்டி இருக்கு?"-பரிசய்யமான குரல்!!
"கீதா?"
"ம்..கீதா தான்!"
"என்ன அதிசயம்?நான் கனவு காணவில்லையே!""
"கிள்ளிப் பாரு!"-அவன் கிள்ளிப் பார்த்தான்.
"ஆவ்!"
"கனவில்லைல்ல!?"
"இல்லை!சரி..என்ன இந்த நேரத்துல போன்??"
"எனக்கு இன்னிக்கு என் ரூம்குள்ள போறதுக்கு பிடிக்கலை!"-அவனது உறக்கம் மொத்தமாக கலைந்தது.
"நீ கேட்ட செல்பி உனக்கு அனுப்பி வைத்திருக்கேன்!அதை சொல்ல தான் போன் பண்ணேன்!"
-அவனால் தன் செவிகளையே நம்ப இயலவில்லை.
"குட் நைட்!"-சட்டென இணைப்பை துண்டித்தாள்.அடுத்த நொடி அவசர அவசரமாகதன் கைப்பேசியில் துழாவினான் அவன்.ஆம்...!அவள் கூறியது உண்மையே!அழகிய,இளஞ்சிவப்பு நிற புடவையில் அவளது புகைப்படம் அவன் கைப்பேசிக்கு மாற்றம் அடைந்திருந்தது.அவன் முகத்தில் ஆயிரமாயிரம் வெளிச்சம்!!
அன்றைய எண்ணங்களில் உழன்றுக் கொண்டிருந்தவன்,தனது கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.இன்றும் அதே புகைப்படம் அதில் இருந்தது!!இத்தனை வருடத்தில் ஒருமுறையும் அதனை அழிக்கும் துணிவு அவனுக்கு வந்ததில்லை.முதல் காதல் அல்லவா??ஒருவேளை,அவளது வாழ்க்கை வேறு ஒருவனுக்கு உரிமையாகும் பட்சத்தில் அதை நிரந்தரமாய் அழிக்கும் உறுதிப்பூண்டிருந்தான் அவன்.
அந்நினைப்பே அவனது இருதயத்தை சுக்கலாய் உடைக்கப்பார்த்தது.
தொடரும்
{kunena_discuss:1070}