(Reading time: 8 - 15 minutes)

"டவுளே..!என் அம்மா என் கூடவே இருக்கணும்!அப்பாவும்,அம்மாவும் எப்போவுமே ஒண்ணா என் கூடவே இருக்கணும்!"-ஒரு போடு போட்டான் அவன்.இதை எதிர்நோக்காதவள் அதிர்ந்துப் போனாள்.சரியாக அச்சமயம் கோவில் மணியோசையும் கேட்டது.

நிலைமையை சமாளிக்க அவளால் சிறிதும் இயலவில்லை.

"வா!கண்ணா!"-அவள் அவனது கவனத்தை சிதைக்க வேறொரு சந்நதிக்கு அவனை அழைத்துச் செல்ல  வேண்டியதாயிற்று!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

"வளால் எப்படி அனைத்தையும் மறவ முடிந்தது??எவ்வாறு அவள் என் புத்திரனிடத்தில் அன்பினை பொழிக்கின்றாள்??இது வெறும் வைத்தியம் என்று தோன்றவில்லை."

"எதற்காக காலம் எங்கள் இருவரையும் விலக்கியது?அவளை போன்ற பெண்ணொருத்தி சகமாய் அமைவதற்கு எந்த ஒரு ஆணும் பாக்கியம் செய்திருத்தல் அவசியம்!நான் ஒரு பவித்ரத்தை தவறவிட்டேன்!வாழ்க்கையை வாழ எனக்கு போதனை செய்தவள் அவள் தான்!அவளோடு வாழ்ந்த வாழ்வே எனது வசந்தக்காலம்!"

"எவ்வளவு அழகான காலம்!இனி,அவள் குறித்து சிந்திப்பது தவறாகும்!என்னால் அவளுக்கு துன்பம் ஏதும் வர கூடாது!அவளைவிட்டு விலக தானே இங்கு வந்தேன்.ஆனால்,???மீண்டும் வாழ்ந்த பூமிக்கு திரும்பினால்,நான் ஈன்ற புதல்வனின் மனத்திடம் நொறுங்கி போகும்!!என்ன செய்ய போகிறேன்?விஷ்வாவின் மனதில் இருந்து அவளுக்கு எவ்வாறு விடுதலை அளிக்க போகிறேன்?"-அவன் குழம்பி போயிருந்தான்.

"சொல்லுங்க!என்னை அவசரமா எதுக்கு பார்க்கணும்னு வர சொன்னீங்க?"-அதே காப்பி ஷாப்பில் சற்றே பதற்றமாக அமர்ந்திருந்தான் அவன்.

".............."

"சொல்லுங்க பரத்!என்னாச்சு?"

"கொஞ்ச நாளா எனக்கு பயங்கர மன உளைச்சல்!நிம்மதியா சாப்பிட முடியலை!தூங்க முடியலை!ஏதோ நினைப்பு எல்லாம் வருது!"

"ஓ...ஸ்ட்ரெஸ் ப்ராப்ளம்!அதுக்கு எதுக்கு இங்கே வர சொன்னீங்க?நீங்க ஹாஸ்பிட்டலுக்கு தான் வந்திருக்கணும்?"

"எனக்கு ஹாஸ்பிட்டல்னா பயம் மிஸ்!"

"நான் என்ன அங்கே ஆப்ரேஷனா பண்ணப்போறேன்?"

"அதெல்லாம் எனக்கு தெரியாது!ஹாஸ்பிட்டல்னா பயம் தான்!"-அவனது அப்பாவித்தனமான பேச்சில் அவள் சிரித்துவிட்டாள்.

"சிரிக்காதேப்பா!"

"ம்..சரி சரி!ஓ.கே.வொர்க் டென்ஷனா?"

"இல்லைங்க!"

"தூக்கம் இல்லையா?"

"ரொம்ப நாளா!"

"அச்சோ!ஏன்?"

"என் மனைவியால!"-அவள் முகம் சட்டென மாறியது.

"கல்யாணம்...ஆயிடுச்சா?"

"இல்லைங்க!"

"முருகா!என்னங்க குழப்புறீங்க?"

"லவ் பண்றோம்!"

"ஓஹோ!"-அவன் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.

"அவளை நினைத்து தினமும் ஏங்கிட்டு இருக்கேன்.இப்போ எல்லாம் என் ரூம்குள்ள நான் போறதுக்கே பிடிக்கலை!"-அவன் கூற கூற,அவள் நாசி கோபத்தில் சிவந்துப்போனது.

"நான் கிளம்புறேன்!"

"என்னம்மா ஆச்சு?"

'இல்லை..நேரமாயிடுச்சு!"

"ஓ.கே.போறதுக்கு முன்னாடி ஒரு செல்பி?"

"செல்பி?"

"ம்..செல்பி!"

"எதுக்கு?"

"ம்..ஒண்ணுமில்லை!நான் என் பசங்கக்கிட்ட அவங்க அம்மா நான் ஃபர்ஸ்ட் டைம் ப்ரப்போஸ் பண்ணும் போது எப்படி இருந்தாங்கன்னு காட்டணும் ஆசைப்படுறேன்!"-அவன் கூறியதன் பொருள் சில நொடிகள் அவளுக்கு விளங்கவில்லை.

"வ..வாட்?"

"சிம்பிள்!ஐ லவ் யூ!"-பட்டென உடைத்தான் அவன்.

"ல...லவ் யூ??"

"ஓ..நீயும் லவ் பண்றீயா?தேங்க் காட்!எங்கே வேணும்னு சொல்லிடுவியோன்னு பயந்தேன்!"

"இல்லை...நான்!நான் அப்படி சொல்லலை!எப்படி லவ்??இவ்வளவு சீக்கிரமா?"

"நீ  சைகேர்ட்ரிஸ்ட்!ஷேக்ஸ்பியரோட பேமஸ் தியரி தெரியுமா?"

"என்னது?"

"லவ் அட் தி ஃபர்ஸ்ட் சைட்!"

"............"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.