''எங்களுக்கு இது தாம்மா பெரிய பண்டிகை ,''என்றபடியே அவனிடம் திரும்பி
''ராவிக்கி மாப்பிள்ளை விருந்துக்கு நம்ம வீட்டுக்கு வந்துடுங்க ,ஹேமாவும் மாப்பிள்ளையும் வராங்க ,உங்களையும் கூப்பிட தான் நானே வந்தேன் ''
''இருக்கட்டும் ஆச்சி ,உங்களுக்கு எதுக்கு சிரமம் ,சாயந்திரம் நமஸ்காரம் பண்ண வருவோம் ,மத்தபடி இதெல்லாம் எதுக்கு ''
''இதுல என்ன சிரமம் இருக்கு ,அதோட நீ என்ன அசலா .. ஒரு முறைக்கு நான் உன் அத்தை ,உனக்காக தனியா சமைக்க போறோமா என்ன ,வந்துடுங்க ரெண்டு பேரும் பொழுதோட ''என்று ஆச்சி முடிக்க
'' சரி வரோம் ''என்று ஒத்துக்கொண்டார் பண்ணையார் .
அதன் பின் சற்று நேரம் பேசிவிட்டு ,அவள் வீட்டு சர்க்கரை பொங்கலை சுவைத்து விட்டு சென்றனர் .
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு ..ரோடு சரியில்லை உனக்கே தெரியும் ''
''அதான் நானும் சொல்ல வந்தேன் ,''
''இங்க பாருமா ,அப்படியே போகும் போது நீயே தெரிஞ்சுப்பே ,சொல்லி புரிய வைக்கும் விஷயம் இல்லை ,ஏறு ,ஏறு ,ஜல்தி ...''
'ஹிந்தி வேற இந்த பண்ணையாருக்கு அப்போ அப்போ 'என்று நினைத்தபடி ஏறி அமர்ந்தாள் ..