(Reading time: 11 - 22 minutes)

25. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ர்ஜுன் பாடல் கேட்டு அனைவரும் திகைத்து நின்றனர். அர்ஜுனும் பாடி முடிக்கும் போது எல்லோர் பார்வையும் அவன் மீது இருப்பதை புரிந்து கொண்டான். ஆஹா.. சிக்கிட்டியேடா அர்ஜுன் என்று எண்ணியவன் , சரி சமாளிப்போம்.. என்று எண்ணியவனாக அவர்கள் டேபிள் அருகில் வந்தான்.

எல்லோரும் அவனை பார்க்க, அவனோ தன் பார்வையை சுராவின் மேல் வைத்து “ஹேய். சுபா.. உனக்காகத்தான் இந்த பாட்டு பாடினேன்.. இந்த டிரஸ் பார்த்தவுடன் எனக்கு மயில் நியாபகம் வந்தது. அதான் .. கேட்க நல்லா இருந்ததா?” என்று சாதாரணமாக வினவினான்.

அர்ஜுன் பாடியதை வைத்து அவன் ஒருவேளை சுபாவை விரும்புகிறானோ என்ற எண்ணம் அங்கிருந்தவர்களுக்கு தோன்றியிருந்தது. இப்போது அவன் பேசுவதை பார்த்தால் எதச்சையாக நடந்த மாதிரி தோன்றியது.

அவன் பாடலில் கட்டுண்டு கிடந்த சுபாவோ , அவன் அவளிடம் பேச ஆரம்பித்த பின் தான் சுய நினைவிற்கு வந்தாள். அவள் மற்றவர் பார்வை எல்லாம் கவனிக்கவில்லை.

“கேப்டன் சார்.. நீங்க பாடினது நல்ல இருந்தது.. ஆனால் எனக்கு இந்த பாட்டை கேட்டதும் உங்களை மைக் மோகன் மாதிரி தான் கற்பனை பண்ண தோணிச்சு..” என,

அர்ஜுனின் mind வாய்ஸ் “ராட்சசி .. உன்னை எவ்ளோ தூரம் புரிஞ்சு வச்சிருக்கேன்னு இதுலேயே தெரியுது. நீ என்ன சொல்லுவன்னு நான் நினைச்சேனோ .. அதே வார்த்தைய சொல்றியே... ஹ்ம்ம்.. நீ எல்லாம் நல்லா வருவா..”

வெளியில் சிரித்தபடி “அம்மா தாயே.. எஸ்.பி.பி. அளவிற்கு இல்லைனாலும் சுமாரான பாடகன் என்றாவது சொல்லுவன்னு நினைச்சேன்.. இப்படி damage செய்யறியே.. இது உனக்கே நல்லா இருக்கா ?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“என்ன பாஸ் ..இப்படி சொல்லிடீங்க.. ? நம்ம மைக் மோகன்க்கு கூட ரசிகர் மன்றம் எல்லாம் இருந்துது கேப்டன்.. உங்கள அந்த உயரத்துலே சொல்றேன்.. என்னை தப்பா புரிஞ்சிகிட்டீங்களே...”

“யாரு நீ..? நம்பிட்டேன் மா.. நம்பிட்டேன்..”

இவர்கள் இருவரின் வாயாடலை மற்றவர்கள் கவனித்துக் கொண்டு இருந்தனர். பின் மெதுவாக அர்ஜுன் பேச்சை மாற்றி விட.. எல்லோரும் இதை மறந்து விட்டு மற்ற விஷயங்களை பேசினார்.

ஊப்ஸ்.. என்று பெருமூச்சு விட்ட அர்ஜுனை பார்த்து ராகுல், மிதுன் இருவரும் கண்ணடித்து சிரித்தனர். அவர்கள் இருவரையும் அர்ஜுன் முறைத்தான்.

சாப்பிட்டு முடித்து பில் வரும்போது ஒரே போட்டியாக இருந்தது.

சுபாவின் அப்பா தன் பெண்ணின் பிறந்தநாள் ட்ரீட் என்று சொல்ல, மிதுன், ராகுல் இருவரும் தங்களின் பர்த்டே கிபிட் சுபாவிற்காக என்றார்கள். இதற்கு நடுவில் அர்ஜுன் தான் பணம் கட்டுவதாக எல்லோரையும் தடுத்தான்.

இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மகிமா, சுறாவிடம் “ஹேய்.. சுறா.. அங்கே மூன்றாம் உலகப்போர் மாதிரி சண்டை போட்டுட்டு இருக்காங்க.. நீ என்ன கம்னு இருக்க..?”

“கீமா குட்டி.. நாம வந்த வேலை முடிஞ்சுது.. அதுக்கு அப்புறம் யார் வேணா பில் கொடுக்கட்டும். இல்லையா கொடுக்காமல் மாவட்டிட்டு வரட்டும்.. நாம இங்கேருந்து எஸ்கேப் ஆயிடுவோம்.. “ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே.

அவர்களின் பேச்சை கேட்ட வர்ஷா, சிரித்துக் கொண்டே “யாரும் பில் கட்ட வேண்டாம். இது எங்க ஹோட்டல் தான்.. நான் பார்த்துக்கறேன் “ என்று கூறி விட்டு , மேனேஜர் அழைத்து பில் பர்சனல் அக்கௌன்ட் போட சொன்னாள்.

பிறகு எல்லோரும் சிரித்து பேசிக் கொண்டே வெளியே வந்தனர்.

வருண் மெதுவாக பின் தங்கி மேனேஜர் வந்து வர்ஷாவிடம் sign வாங்கும்போது அவள் காதில் “ஹேய்.. வர்ஷு.. என் மாமனார் சொத்தை எல்லாம் நீயே காலி பண்ணிருவ போலே.. கொஞ்சம் பார்த்து செய்யுமா.. “ என, வர்ஷா திரு திருவென முழித்தாள்.

இதை காதில் வாங்கிய கீமா, சுறா இருவரும் முறைக்க , “ஐயோ .. இந்த பிடாரிங்க கிட்டே மாடிகிட்டோமே.. “ என்று எண்ணி, அவர்களிடம் வாயசைவால் “ப்ளீஸ்..” என்று கெஞ்ச இருவரும் அப்புறம் பேசுறோம் .. என்று சைகையில் சொன்னார்கள்.

முதலில் வருண் பேசுவது புரியாமல் நின்ற வர்ஷா , பின் அவனை முறைக்க வருணோ

“ஹேய்.. பேபி.. முறைக்காதே.. என்னிக்கு இருந்தாலும் இது என் மாமனார் சொத்து தான்.”

வர்ஷவோ “ஒ.. இது என்ன.. நீங்க ப்ரோபோசே பண்றீங்கன்னு அர்த்தமா? “

“அட.. கண்டுபிடிச்சுட்டியே செல்லம்.. நீ கோல்ட் மெடல் வாங்கிடுவ “ என்று கேலி செய்தான்.

வர்ஷா மேலும் முறைத்துக் கொண்டு “எனக்கு இதில் எல்லாம் interest இல்லை ... சோ.. நீங்க வேற ஆளை பாருங்க..”

“அத நீ சொல்லக் கூடாது மை டார்லிங்.. உனக்கு பிடிக்கும் வரை ட்ரை பண்ணிட்டு இருப்பேன்.. என் நம்பிக்கை வீண் போகாது.. “

“அட.. ரொம்பதான்.. அதையும் பார்ப்போம்..”

“எஸ்.. மேடம்.. வெயிட் அண்ட் சி..”

இவர்கள் இருவரின் வழக்கடிப்பு மற்ற யாருக்கும் தெரியவில்லை. சுறா, மகி இருவரும் அவன் முதலில் பேசும்போதே நகர்ந்து விட்டார்கள்.

வர்ஷாவும் வெளியே வந்தவுடன் எல்லோரும் கிளம்பினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.