(Reading time: 9 - 18 minutes)

"ன் ரூமை கிளீன் பண்றீயா?"-அவனது கைகளை உதறினாள் மித்ரா.

"பண்றது எல்லாம் சேட்டை!அங்கே காப்பி வைத்திருக்கேன் போய் குடிங்க!"

"தேங்க்ஸ் செல்லம்!"-சட்டென அவளது கன்னத்தில் முத்தமிட்டு விலகினான் ராணா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

சில நொடிகள் உறைந்து நின்றவள்,மெல்ல புன்னகைத்துவிட்டு,அவனது அறையை தூய்மைப் படுத்தினாள்.

"ஓய்!என்ன சர்க்கரை அதிகமா போட்டு இருக்க?சீக்கிரமே குண்டாக பிளான் பண்றீயா?"

"ஒரு ஸ்பூன் சக்கரை உங்களை குண்டாக்க போகுதா?"-என்றவளின் கண்களில் அது தென்பட்டது.

"ஒரு ஸ்பூன் சர்க்கரை கூட வெயிட் போட வைக்கும் லூசு!"

".............."

"லூசு??"

".................."

"மித்ரா??"-அவன் சென்று அவள் முன்னாடி நின்றான்.அவளது கரங்களில் அவள் தாய் தந்தையின் புகைப்படம்!!கண்களில் கண்ணீர்!!

சட்டென அப்புகைப்படத்தை வாங்கினான்.

"என்ன?"

"அன்னிக்கு அப்பாவை விட்டு அம்மா போகாம இருந்திருந்தா,இந்த நிலை வந்திருக்காதுல மாமா??"-அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது.

"ஏ...!லூசு!"-என்றவன்,அவளை இறுக அணைத்துக் கொண்டான்.அடங்கியிருந்த துன்பங்கள் யாவும் வெளிவர,அவன் தோள்களில் சாய்ந்து கண்ணீரை கரையவிட்டாள் மித்ரா.

அவன் மனமும் கனத்துப் போனது!!

"இதோப்பாரு!உன்னை அழ வைக்க,எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு!அதுவும் நீ சந்தோஷத்துல மட்டும் தான் அழணும்!வேற எதையாவது நினைத்து அழுதீன்னா..!"

"என்ன பண்ணுவீங்களாம்?"-விசும்பியப்படி கேட்டாள்.

"அப்பறம் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்!"-விஷமமாக கூறினான் ருத்ரா.

"அடி!"-அவனை நோக்கி கை ஓங்கினாள் மித்ரா.பலமாக சிரித்தவன்,"ஓடு!ஓடு!மாமாக்கு டிபன் எடுத்து வை!சீக்கிரம் ஆபிஸ்ககு கிளம்பணும்!"என்றான்.புன்னகை பூத்தப்படி அவள் அந்த அறையிலிருந்து விலகியதும்,சில நொடிகள் தன் கையிலிருந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தான் ருத்ரா.இரு கண்களும் தத்தம் ஒருத்துளி கண்ணீரை மண்ணில் சிந்தின.மனம் பழம்பெரும் சிந்தனைகளில் மூழ்கிப்போக,மனதளவில் உடைந்துப் போனான் ருத்ர பிரதாப் ராணா.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.