04. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஈசனுக்கு வந்த சோதனை போல்
இந்த அடியவனுக்கம் வர
மகேசனாவது தப்பித்துக் கொண்டான் – ஆனால்
மானிடனாகிய நான் எங்கே மறைவது?
வரம் கொடுத்தேன் அல்லவா!
வருவதையும் ஏற்கதானே வேண்டும்....
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
நீண்ட தூர நடைப்பயணத்தால்
நான் நலிவுரவே -அவர்களிடம்
சற்று ஓய்வு கேட்க
சிறிதும் சிந்தியாமல் மறுத்தனர்....
என்னடா இது !
வரம் தந்தவனையே இப்படி வறுக்கிறார்களே!
வரத்தை திரும்ப பெறலாமா? – என் வரத்தையும்
இவர்கள் தேர்தல் வாக்குறுதியைப் போல் எண்ணிவிட்டால்
இசைகேடாகி போகுமே!
இவர்களை விடவும் சற்று பின்தங்கிவிடவே
இரைந்து கூப்பிட்டு விரைந்து வாரும்! என்றனர்...
இம்சையோடு
இம்சித்தவர்களுடன் சென்ற நான்
இறுதியில் அடைந்தேன்
இவர்களிடத்திற்கு....
தொடரும்
{kunena_discuss:1101}