05. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
உடலை வருத்தி இவர்களோடு
உடன் வந்த எனக்கு
அவர்கள் இருப்பிடத்தைக் கண்டு
அதிசயக்காமல் அதிர்ந்து போனேன்....
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
ஆயிரம் கற்பணைகள் இவர்களைப் பற்றி
ஆதலால் வந்தேன் இவர்களோடு!
இப்படியென்று தெரிந்திருந்தால்
இசைந்திருப்பேனா இவர்களுக்கு?
வஞ்சித்ததாய் நானுரைக்க...
வருவது அறியாமல் வாய் பேசினால்
வருவதை ஏற்க வேண்டுமென்று
வாயுரைத்துவிட்டு
கற்பனையில் வாழ்வதே தொழிலாக
கொண்டிருப்பீர் -பின் எங்களிடம்
கோபிப்பதில் பயனென்ன? என்று கேட்க
தவறை ஒத்துக்கொள்வது மானிடர்கு இயலாதல்லவா!
தப்பிதமாய் நீங்கள் புரிந்துகொண்டு மானிடரை இகழாதீர் என்றேன்...
வீண்பேச்சு வேண்டாம்-முன்பு
வாயுரைத்ததை செயலில் கொணர்க!
என்றுரைத்துவிட்டு
என்னை இவர்களின் இருப்பிடத்திற்குள் இழுத்து சென்றனர் ...
தொடரும்
{kunena_discuss:1101}