06. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஊழ்வினை என்னை தொடர்கிறது போலென்று
உருக்கமாய் எண்ணிக் கொண்டு
உந்துசக்தி இல்லாமலே!
இவர்களின் இழுப்பினால்
இருபிடத்திற்குள் நுழைந்தேன்....
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
கற்பனைகள் அனைத்தும் தூள்தூளாக
கடினமாய் இருக்க ஆரம்பித்தது இப்பயணம்....
முன் வைத்த காலை பின் வைக்க கூடாதென்ற
முதுமொழியைப் பின்பற்றுவதைப் போல்
யாரும் பின்னோக்கிப் பார்க்காமல்- என்னை
முன்னிருத்தி செல்ல-என் மனது
முடிசூடா மன்னன் போல் எண்ண ஆரம்பிக்க
மூளை, மறுபடியும் முட்டாளாகவே யோசிக்கிறாயே!
என்னை பயன்படுத்தவே மாட்டாயா? என்று
எளனம் செய்ய
தறிகெட்டு ஓடிய எண்ணங்களை
தடுத்து நிறுத்துவதற்குள்
இதுதான் உங்களுக்குக்காக நாங்கள் உண்டாக்கிய
இடமென்று கூற...
வந்த சினத்தைக் கட்டுப்படுத்த இயலாமல்
வருவது வரட்டுமென்று
வாட்டமாய் நன்கு முட்டிக் கொண்டேன் ஒன்றினால்!
மூளையை ஆரம்பத்திலேயே அடகு வைத்த எனக்கு
முழுநினைவும் தப்ப ஆரம்பித்தது....
தொடரும்
{kunena_discuss:1101}