சஞ்சயின் இந்த செய்கையை மந்த்ரா எதிர்பார்க்கவில்லை... நீரஜா தன்னைப்பற்றி அவனிடம் கூறியிருப்பாள் என்று நினைத்தாள்... ஆனா சஞ்சய் இப்போது நடந்துக் கொண்டதைப் பார்த்தால், அவனிடம் நீரஜா தன்னைப் பற்றி கூறவில்லையா..?? ஆனால் ஏன்..?? ஒருவேளை தன்னைப்பற்றி கூறினால், அந்த வெற்றி செய்ததையும் சொல்ல வேண்டும் என்று நினைத்து சொல்லவில்லையோ... எப்படி இருந்தாலும், அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமே... அதனால் அவன் கார் பார்க்கிங்கை அடையும் போது, இவளும் ஓட்டமும் நடையுமாக அங்கே சென்றாள்.
"ஏ... உன்னை பார்த்தும் பார்க்காம வந்ததிலேயே தெரியலையா..?? உன்கூட பேச எனக்கு இஷ்டமில்லைன்னு... ஒழுங்கா நான் ஏதாவது பண்றதுக்குள்ள ஓடிப் போய்டு... இல்ல நான் ஏதாவது செஞ்சாலும் செஞ்சுடுவேன்... உன்னோட ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ொன்னீயா..?? சஞ்சய் என்ன சொன்னாரு..?? உடனே கல்யாணம் செஞ்சுக்கிற ஐடியா இருக்கா..?? இல்லை இன்னும் கொஞ்ச நாள் லவ் பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறீங்களா..??" என்று மந்த்ரா கேட்டதற்கு... நீரஜா மௌனமாக இருக்க... அவளிடம் இருந்து என்ன பதில் வரும் என்று எதிர்பார்த்திருந்தான் சஞ்சய்.